Contact us at: sooddram@gmail.com

 

தமிழக மீனவர் 136 பேரும் விடுதலை

தமிழகக் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படை படகுகள் பாதுகாப்பு

பருத்தித்துறை முனை மற்றும் மாதகல் கடற்பரப்பில் யாழ். கடற்றொழிலாளர்களினால் சிறை பிடிக்கப்பட்ட 136 தமிழக மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த அவர்களது 25 வள்ளங்களிலேயே அவர்களை பாதுகாப்பாக அனுப்புமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான்கள் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர். இரண்டு கடற்படை படகுகள் 136 தமிழக மீனவர்களையும் தமிழக கடல் எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்தது. கடந்த 15ஆம் திகதி 18 இழுவைப் படகுகளில் பருத்தித்துறை முனை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 112 தமிழக மீனவர்களை யாழ். மீனவர்கள் சிறைபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

16ஆம் திகதி மாலை இவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மறுநாளும் மாதகல் கடல் பரப்பில் 24 தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு 17ஆம் திகதி மாலையே நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பதற்ற நிலையை உருவாக்கியதுடன், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இரு நாடுகளுக்குமிடையே இருந்துவரும் உறவுகள் வலுப்பெற்றுவரும் இந்நிலையிலும், தமிழக மற்றும் வடபகுதி மீனவர்களுக்கிடையே சுமுகமான பேச்சுவார்த்தை யொன்றை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது தொடர்பில் இரு நாட்டு முக்கியஸ்தர்களும் ஆராய்ந்து வந்தனர்.

இவர்களது விடுதலை குறித்தும் சுமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கிடையேயும் பேச்சுக்கள் நடைபெற்றன.

இந்த நிலையிலேயே யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி அமரக்கோன் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான மனுவை யாழ். பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிமன்றத்தில் தக்கால் செய்தார்.

இதனையடுத்து 136 பேரையும் நீதிவான்களான திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் விடுதலை செய்தனர்.

நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் தாம் அத்துமீறி யாழ். குடா கடற்பரப்பிற்குள் புகுந்ததை ஒப்புக் கொண்டதுடன், மன்னிப்பும் கோரினர். அத்துடன் யாழ். மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டாலும் தம்மை மிகவும் அன்பாக பராமரித்தனர் என்றும் உணவு, உடை வழங்கி தாய் நாட்டில் இருந்த உணர்வுடன் தாம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ். மீனவர்கள் சார்பில் பருத்தித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சட்டத்தரணியான மு. ரெமிடியஸ், பொ. குமாரசுவாமி, கே. சிவகுருநாதன், எஸ். கந்தசாமி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இலங்கையில் யாழ். குடா கடற்பரப்பினுள் அத்துமீறி தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் ஏற்படும் கடல்வள அழிவு மற்றும் குடாநாட்டு மீனவர்களின் பொருளாதார பாதிப்பு, அழிவு தொடர்பாக சட்டத்தரணிகள் விவாதங்களை முன்வைத்தனர்.

யாழ். நகரிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் வெ. மகாலிங்கம், மற்றும் தூதரகத்தில் 2வது அதிகாரி வினோத்குமார் வர்மா ஆகியோரும் சென்றிருந்தனர்.

விடுதலையான 136 தமிழக மீனவர்களும் அவர்களது 25 படகுகளுடன் பருத்தித்துறை கடற்கரையிலிருந்து நேற்று மாலை 4.30 மணியளவில் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

136 தமிழக மீனவர்களுக்கும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்பளிப்பு பொதிகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் வெ. மகாலிங்கம், வினோத்குமார் வர்மா, பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி அமரக்கோன், பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் புஸ்ஸல்லகே, யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பலரும் வந்து தமிழக மீனவர்களை வழியனுப்பி வைத்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com