Contact us at: sooddram@gmail.com

 

எல்லை தாண்டிய மீன்பிடி, தடுத்து நிறுத்த நடவடிக்கை

எல்லைதாண்டிய மீன்பிடித்தலை தடுத்து நிறுத்துவதனூடாக இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர் களிடையே ஏற்படும் தகராறுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பிரதிநிதி ஒருவரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மக்களின் முதல்வராகிய உங்கள் மீது ஈழத் தமிழ் மக்கள் தீராத பற்றுதலை கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழக மக்களின் அரசியல் சிம்மாசனத் தில் கொலு வீற்றிருக்கும் நீங்கள் மத்திய அரசிலும் பங்கெடுத்து தமிழக மக்களுக்கு சிறந்த வழிகாட்டலை கொடுத்து வருவது கண்டு நாம் அகம் மகிழ்கின்றோம்.

நீங்கள் தேடிய இந்த வழிமுறையே ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்புடைய ஒன்று. ஆகவே கொள்கை வழியில் ஒன்றுபட்டு நிற்கும் நான் உங்களோடு அவசரமும், அவசியமும் மிக்க விடயம் ஒன்றை மனந்திறந்து பேச விரும்புகின்றேன்.

தமிழகம் ஈழத்தமிழ் மக்களின் வேரடி மண். தமிழக மீனவ மக்களுக்கும் ஈழத்தமிழ் மீனவ மக்களுக்கும் இடையில் கடற் பரப்பில் நிகழ்ந்து வரும் தகராறுகள் எமக்கு துயரங்களை தந்து கொண்டிருக்கின்றன.

கடல் எல்லை தாண்டி வந்து எம் தமிழக மீனவ உறவுகள் ஈழத்தமிழ் மீனவ மக்களின் கடற்பரப்பில் தொழில் செய்து வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு, வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இது வரை வந்த முறைப்பாடுகள் குறித்து நீங்கள் அறிவீர்கள்.

இது குறித்து நான் தமிழக மீனவ சங்கங்களுக்கும் ஈழத்தமிழ் மீனவ மக்களின் சமாசங்களுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்திருந்த தருணத்தில் பேசும் மொழியாலும், செய்யும் தொழிலாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய இரு தரப்பு உறவுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுப்பாலம் உடைந்து சிதறாமல் இருக்க நாம் முயன்று வருகிறோம்.

இந்தவேளையில் எம் காதில் விழுந்த செய்தி எமக்கு மிகுந்த மனவருத்தங்களைத் தந்திருந்தது. இலங்கை கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறப்படும் தமிழக மீனவ உறவுகளை பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருப்பதாக எமக்குத் தகவல் வந்தது.

தகவல் அறிந்த நான் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இலங்கை கடற்றொழிலாளர்களோடு இது விடயம் குறித்து விசாரித்த போது நடந்த சம்பவம் குறித்து எம்மிடம் எடுத்துரைத்தார்கள்.

கடந்த கால யுத்தத்தின் போது தொழில் ரீதியாக பாதிப்படைந்திருந்த நமது மீனவர்கள் நாட்டில் நிலவிவந்த கொடூர யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மறுபடியும் தாம் தமது கடற்பரப்பில் தற்பொழுது சுதந்திரமாக தொழில் புரிந்து வருவதாகவும், ஆனாலும், இலங்கை கடற்பரப்பில் நுழையும் சில தமிழக மீனவர்களால் தமது கடல் வளங்களை அனுபவிக்க முடியாமல் இருப்பதாகவும் தமது மனத்துயரங்களை வழமை போல் என்னோடு பகிந்து கொண்டனர்.

இதேவேளை தமிழக மீனவ உறவுக ளோடு நான் பேசி அவர்களது நிலைமைகள் குறித்தும் அக்கறையோடு அறிந்து கொண்டேன். அப்போது தாம் இலங்கை கடல் எல்லை தாண்டி வந்ததன் தவறுகளுக்காக தாம் வருந்துவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

பொலிஸாரின் காவலில் இருக்கும் தமிழக மீனவ மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பொலிஸாருடன் இணைந்து தாமும் கவனம் செலுத்துவதாக பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் சம்மதம் தெரிவித்திருந்தமை எனக்கு பெரும் ஆறுதலை தந்திருந்தது.

இந்நிலையில் தமிழக மீனவ உறவுகள் விடுவிக்கப்பட்டு அவர்களை வீடு திரும்ப அனுமதிப்பதற்கான முயற்சிகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன். எனது முயற்சிகள் வெற்றியளிக்கும் என்றும் நம்புகின்றேன்.

இதேவேளை, கடல் எல்லைகளை தாண்டும் தவறான செயல்களை முழுமையாக தடுத்து நிறுத்துவதன் ஊடாக தமிழக மற்றும் இலங்கை மீனவ மக்களுக்கு இடையிலான தகராறுகளையும் தடுத்து நிறுத்தி நீடித்த நேச உறவுகளை வளர்க்கவும் முடியும் எனவும் நான் நம்புகின்றேன். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும் கட்டாய தேவையாகும்.

இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான நேச உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட நேரடியாகவே உங்கள் பிரதிநிதி ஒருவர் இங்கு அனுப்பி வைக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

உங்கள் பிரதிநிதியாக ஒருவர் இங்கு வரும்போது இரு தரப்பு மீனவ மக்களும் பகைமை மறந்து பரஸ்பரம் புரிந்துணர்வோடு செயற்படுவதற்கான சூழல் ஒன்றை உருவாக்கும் இணக்கப்பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளராக நான் செயற்படுவேன் என்றும் உறுதியுடன் உங்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்விடயங்கள் குறித்து கெளரவ ராஜ்சபா உறுப்பினர் கனிமொழியுடனும் நான் தொடர்பு கொண்டு எடுத்து விளக்கியிருக்கின்றேன்.

ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் நீங்கள். அதேபோல் தமிழக உறவுகளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவன் நான்.

இரு தரப்பு உறவுகளும் இடையறாது நீடித்து நிலைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும் கடந்த கால அழிவு யுத்தத்தினால் துயரங் களை சுமந்து நின்ற ஈழத்தமிழ் மீனவ மக்களின் சார்பான மனிதாபிமான வேண்டுகோளாகவும் இம்மடலை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன் என்றுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com