Contact us at: sooddram@gmail.com

 

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்

டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடி யாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போரா ட்டங்கள் இடம்பெற்று வருகி ன்றன. ஜனாதிபதி முஅம்மர் கடாபி யின் 41 ஆண்டு கால ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. இராணுவத் தளபதிகளே கடாபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டு விட்டனர். லிபி யாவின் தூதரக அதிகாரிகள் ஒவ் வொருவராக பதவி விலக ஆரம் பித்துவிட்டனர். முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூனும் அறிவித்துவிட்டார்.

முதல் கட்டமாக லிபியா மீது இராணுவ பொருளாதாரத் தடை கள் விதிக்கப்படும் என்றும், அதன் பின்னரும் நிலைமை சீரடைய வில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சி யாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

கடாபிக்கு விசுவாசமாக இருக் கும் இராணுவத்தினரும் கூலிப்ப டையினரும் தலைநகர் திரிபோலி யில் மக்களைக் கொடூரமாக அட க்கி ஒடுக்குகின்றனர்.

ஜனாதிபதி கடாபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம். கடாபி கட் டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று இராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.

அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் இராணு வத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்ட தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.

தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு விசுவாசமான இரா ணுவ வீரர்களும் கூலிப்படை யினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்ப வர்கள் கெஞ்சினாலும், அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிப ருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர் என்று அங்கி ருக்கும் ஊடகங்கள் தெரிவி க்கின்றன.

லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்க ளுடன் கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக் கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையத்தளம் உள் ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு களும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டி ருக்கிறது.

நிலைமை மேலும் மோசமாவ தற்குள் லிபியாவைவிட்டு வெளி யேறிவிட வேண்டும் என்று ஆயிர க்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட் டனர். இதனால் விமான நிலை யங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின் றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்துவர விமான ங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித் துள்ளன.

ரஷியா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கி விட்டன.

கடந்த 10 நாட்களாக நடை பெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளி யுறவு அமைச்சர் பிராங்கோ பிரித் தானியாவில் கூறுகிறார்.

கடாபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கி யது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது.

தொலைபேசி, கைபேசி, இணைய த்தள தொடர்புகள் அற்றுப்போயி ருந்தாலும், அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற் படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதி ராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.

பெங்காசி, டொப்ருக் நகரங்க ளில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாபி க்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத் தாடுகின்றனர். பாட்டுப்பாடி நட னம் ஆடுகின்றனர்.

இதனிடையே கடாபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்தி ராமல், ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருது கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. இது தொடர்பாக முத லில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகி றார். பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடு களின் தலைவர்களுடைய கருத்து க்களையும் அவர் கேட்டு வருகிறார்.

கடாபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடை பெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கட்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்ட த்தில் பங்கேற்க பல்வேறு வெளி நாடுகளின் அமைச்சர்கள் வருகின் றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதி க்கப்படும் என்று தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெ ண்ணத் தூதராக கடாபியின் மகள் ஆயிஷா அல் கடாபி நியமிக்கப் பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக் கைகளுக்குப் பின்னர் அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. சபை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com