Contact us at: sooddram@gmail.com

 

பேச்சுவார்த்தையை குழப்புவதால் மக்களுக்கு நன்மை ஏதும் இல்ல  - சாவகச்சேரியில் ஜனாதிபதி

  • வெளிநாடுகளிலுள்ள யாழ். புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

  • புரிந்துணர்வு ஏற்படுத்த ஊடகப் பங்களிப்பு அவசியம்

  • தீர்வுகாண முடியாத விடயங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல

பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காணக்கூடிய விடயங்களை விடுத்து தீர்வு காண முடியாத விடயங்களை முன்வைத்து பேச்சை குழப்புவதால் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்றுத் தெரிவித்தார். வடக்கு வாழ் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதே தமது ஒரே நோக்கம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

நேற்று (06) சாவகச்சேரி வைத்தியசாலைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில :

நாட்டிலே அனைத்தின மக்களுக்கும் தேவையான சுகாதார வசதிகள், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள், மின்சாரம், நீர், விவசாயிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது எமது கடமையாகக் கருதி செயற்பட்டு வருகின்றேன்.

எனவே இன்று வடக்கு, கிழக்கு, மத்தி என மாகாண பிரதேச பாகுபாடின்றி சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இங்கு எனக்கு ஒருவர் நினைவுச் சின்னம் வழங்க முன்வந்தார். நான் அவரிடம் கூறினேன்எனக்கு வழங்கும் மிகச் சிறந்த நினைவுச் சின்னம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் சமாதான மாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பதேஎன்று கூறினேன்.

இன்று அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, சமூகத்திலே அனைத்துத் தரப்பினரும் நாட்டிலே சிறந்ததொரு சூழ்நிலையினை உருவாக்கு வதற்கு முன்வருவதல் வேண்டும். ஜனாதிபதி என்ற ரீதியில் நான் மாத்திரமல்ல, அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்திற்கு ஒத்துழைத்தல் வேண்டும். இதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப் பானது இன்றியமையாததாக விளங்கு கின்றது.

நாம் ஒரு பத்திரிகையை வாசிக்கும் போது அதிலே இனவாதம் பேசப்பட்டு சமூகங்களை பிரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டிருக்கும் போது அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் கடந்த காலங்களில் நன்கு உணர்ந் துள்ளோம். எனவே சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வினை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஊடகங்கள் தமது பணியினை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளல் வேண்டும். அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் கல்விமான் களுக்கும் இவ்விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது.

எம்மால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக் கூடிய பல பிரச்சினைகள் உள் ளன. எனவே அதுபற்றிப் பேசாது, தீர்வுகாண முடியாத பிரச்சினைகளை முன்வைத்து பேச்சுக்களை குழப்புவதன் மூலம் மக்களுக்கு எதுவித பயனும் கிட்டப் போவதில்லை இன்று ஒருசிலர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே எம்மால் செய்யக்கூடிய விட யங்களைக் கோரி அவற்றினை நிறைவேற்றி சமூகத்திலே ஒற்றுமையை ஏற்படுத்துவதே காலத்தின் தேவை என நான் நம்புகின்றேன்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தமிழ் மொழியிலும் உரையாற்றுகையில், தாம் எப்போதும் தமிழ் மக்களின் முன் தமிழ் மொழியில் பேசவே விருப்புகின்றேன். நீங்கள் நீண்ட காலமாக அனுபவித்த துயர்களை நான் நன்கு அறிவேன். நீங்கள் அனைவரும் புதியதோர் வாழ்க்கை யினை ஆரம்பித்துள்ள மக்களாவீர் அதன் மூலம் புதிய எதிர்பார்ப்பு, புதிய வாழ் க்கை, புதிய எதிர்காலம் இது பற்றி நீங்களும் மகிழ்ச்சியாக உள்Zர்கள். நாமும் மகிழ்ச்சி டைகிறோம். நாம் இன்று உங்களது வடக்குப் பிரதேசத்திற்கே அபிவிருத்திக்காக அதிகமான நிதியினை ஒதுக்கியுள்ளோம்.

வடக்கின் வந்தம் மூலம் உங்கள் பிரதேசங்கள் இன்று துரித அபிவிருத்தி அடைந்து வருகின்றன. 30 வருட காலமாக பின்னடைந்து காணப்பட்ட பிரதேசம் இன்று முன்னேறி வருகின்றது.

நாம் இன்று அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகிறோம். இதனை எவராலும் மறுக்க முடியாது. சிறு சிறு குறைபாடுகள் இருக்கலாம். விரைவில் அவற்றினையும் நாம் தீர்த்து வைப்போம். வடக்கிலே நாம் பல்வேறு வைத்திய சாலைகளை நவீனமயப்படுத்தியுள்ளோம். சுகாதாரம் எமக்கு மிகவும் முக்கியமானது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனவே அதன் அடிப்படையில் இன்று நாம் 158 மில்லியன் ரூபா செலவில் சாவகச்சேரி வைத்தியசாலையில் மூன்று கட்டடங்களைத் திறந்துள்ளோம். இதன் மூலம் இப்பிரதேச மக்கள் பயன்பெற வேண்டும்.

இறுதியாக வெளிநாடுகளில் வசித்துவரும் எமது அறிவாளிகள் அனைவரும் தமது தாய்நாட்டிற்கு மீண்டும் வர வேண்டும். தமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். நாம் பழையவற்றை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம், நம்மில் குரோதம், வெறுப்பு, என்பனவே ஏற்படுகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து செயற்படுதல் வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர். இந்நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது. உங்களது பிள்ளைகளுக்கும் இது சொந்தமானது. நாம் அனைவரும் சகோதரர்கள் இதனை எவராலும் மறுக்க முடியாது எனவும் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com