Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும  - சுப்பிரமணிய சுவாமி

  • வெளிநாட்டு அழுத்தங்களால் எதுவும் நடக்காது

  • கச்சதீவை இந்தியா திரும்ப பெற முடியாது

  • மலையக மக்கள் மீது இந்தியாவின் அக்கறை அவசியம்

இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியப்படவும் மாட்டாது. இன்றைய நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது

இந்திய ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த அவர் நேற்று கதிர்காமத்திற்கு சென்று வழிபாடு நடத்தியதன் பின்னர் இரத்தினபுரி வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புலிகளை ஒழித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன் றத்தின் முன் நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக் காது புலிகளை இல்லாதொழித் தார். இதனால் இலங்கை வாழ் இந்திய மக்களும் இதர மக்களும் நாட்டில் (இலங்கையில்) எவ்வித இராணுவ கெடுபிடிகள் இல்லாமலும் சகல பகுதி களுக்கும் சென்று வரமுடியும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்ய பின்வாங்கியதால் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணமாகும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அல்லது உதவி வழங்குவது தனியாக தமிழ்நாட்டு அரசாங்கத்தால் முடியாது. கச்சதீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தமொன்றின் கீழேயே வழங்கப்பட்டது. தற்போது கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதியை நிறுத்த முடியாது. ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றே கூறலாம். புலிகள் ராஜிவ் காந்தியை கொண்டதுதான் அவர்கள் செய்த மாபெ ரும் தவறு. அது அவர்களின் முட்டாள் தனமான செயல். கூலிக்காக செய்தார்களா? அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது. ராஜிவ் காந்திஇலங்கை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டவர்.

ஒரு இலட்சம் இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருந்தனர். ராஜிவ் உயி ருடன் இருந்தால் பிரச்சினை சுமூகமாக இருந்திருக்கும். புலிகள் போதை பொருட் கள், உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலு மீடுபட்டனர். இதனை எவரும் மறுக்க முடியாது. தென்பகுதி சிங்கள மக்களின் தன் மானத்திற்கு இடையூறு விளைவிக்காத நிலையில் தமிழ் மக்களுக்கும் சுய உரிமை வழங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தினை நம்பி பேச்சுவார்த்தையிலீடுபட வேண்டும். நம்பிக்கையில்லாத விடயம் தோல்வியில் முடியும். தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சந்தேகத்துடன் அனைத்தையும் நோக்குகின் றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை நம்ப மறுக்கின்றனர்.

இதனால் தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக் கின்றனர். இந்தியாவோ அல்லது வெளிநாடு களின் அழுத்தங்களூடாக இலங்கைக்கு தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தால் அந்நாட்டுக்கு (இலங்கைக்கு) உதவி செய்ய இன்னும் பல நாடுகள் உள்ளன. விடுதலை புலிகளின் முடிவு பாராட்டுக்குரியது. அவர்கள் சில வெளி நாட்டு தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டனர். பயங்கரவாதம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொள்ள முடியாது.

பயங்கரவாதத்தினால் உலகில் எந்த பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை பயங்கர வாதத்தால் வட கிழக்கிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வடகிழக்கு மக்களை விட இலங்கை வாழ் இந்திய மக்கள் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

ஸ்ரீமா - லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய (மலையக) மக்களில் பலர் இந்தியா சென்ற போதிலும், இலங்கையில் இன்றும் பலர் இருக்கின்றனர்.

இவர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் இந்தியா கூடுதல் அக்கறையும் கரிசனையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறு இருக்க முடியாது. இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை முன் கொண்டு வரும் பொருட்டு டில்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com