Contact us at: sooddram@gmail.com

 

தாய்லாந்து குண்டு வெடிப்பு தொடர்பில் இரு ஈரானியர் கைது: இந்தியா, ஜோர்ஜியா சம்பவத்துடன் தொடர்பு - ஈரானை குற்றம் சாட்டுகிறது இஸ்ரேல், ஈரான் மறுக்கின்றது

இந்தியா, ஜோர்ஜியா மற்றும் தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரானுக்கிடையிலான முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இஸ்ரேல் ராஜதந்திரிகள் மீது இலக்கு வைக்கப்பட்டிருந்தது. டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் வெடித்ததில் அந்த அதிகரிக்கு காயம் ஏற்பட்டது. அதேபோன்று அன்றைய தினத்திலேயே ஜோர்ஜியாவிலும் இஸ்ரேல் இராஜதந்திரிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

பாங்கொக்கில் மூன்று குண்டு வெடிப்பு

இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நேற்று முன்தினம் 3 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக 2 ஈரானியர்களை கைது செய்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதல் குண்டுவெடிப்பு தலைநகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மதியம் 2 மணி அளவில் வெடித்தது. இதில் தங்கியிருந்தவர்கள் 3 பேரும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 2 பேர் தப்பித்துக் கொண்டனர். ஒருவர் படுகாயமடைந்தார். அவரை ஒரு டாக்ஸியைப் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், அந்த டாக்ஸி ஓட்டுநர் அந்த மனிதரை அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். இதில் கோபமடைந்த நபர் ஒரு வெடிகுண்டை எடுத்து காருக்குள் வீசியுள்ளார். அது, கீழே உருண்டு, காருக்கு அடியில் சென்று வெடித்துள்ளது. இதில் கார் சேதமடைந்துள்ளது.

அடுத்து, அந்த மனிதன் ஒரு வெடிகுண்டை எடுத்து கசேம் பித்தாயா பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த பொலிஸார் மீது வீச முயற்சி செய்திருக்கிறான். ஆனால் அது அவன் கையில் இருந்து நழுவி கீழே விழுந்து வெடித்துள்ளது. இதில், அந்த நபருக்கு இரு கால்களும் துண்டாகியுள்ளன. இதை அடுத்து அவர் சுலாலங்கோம் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நபர் சார்ப் மொராபி என்றும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஈரான் நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு நபர் தாய்லாந்து விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே தாய்லாந்து பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இவர் 42 வயதான ஈரான் நாட்டைச் சேர்ந்த மொஹம்மத் ஹஸன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் மீது பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தனிநபர் இலக்கு

இந்நிலையில் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு ஈரான் நாட்டவர்களும் தனிநபரை இலக்கு வைத்தே தமது செயற்திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் என தாய்லாந்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்தியா, ஜோர்ஜியாவைப் போன்று தாய்லாந்திலும் இஸ்ரேல் இலக்குகளை தாக்க முயற்சித்திருக்கலாம் எனவும் தாய்லாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதில் இந்தியா, ஜோர்ஜியாவில் பயன்படுத்திய அதே வெடிபொருட்களே பாங்கொக்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களின் போதும் பயன்படுத்தப்பட்டிருந்ததாக தாய்லாந்துக்கான இஸ்ரேல் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

பாங்கொக் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் பெரிய கட்டடங்களையோ அல்லது சனநெரிசல் நிறைந்த கூட்டங்களையோ இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டவை அல்ல. அவை தனி நபர் இலக்குகளை தாக்குவதற்காக பயன்படுத்தப்படுபவை. பாங்கொக் இலக்கு இஸ்ரேல் இராஜதந்திரிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது என தாய்லாந்து தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் தலைவர் விச்சின் பெடபோஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாங்கொக்கில் தாக்குதலொன்று இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தூதரகம் கடந்த மாதம் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து வெடி பொருட்களுடன் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு

வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டமஸ்கஸ்ஸில் கார்குண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இமாத் முக்னியாவின் நான்காமாண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது குற்றச்சாட்டு

இந்நிலையில் இந்தியா, ஜோர்ஜியா மற்றும் தாய்லாந்தில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. பாங்கொக் சம்பவம் மூலம் ஈரான் மற்றும் அதன் முகவர்கள் தொடர்ச்சியான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது நிரூபணமாகியுள்ளது என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹ¤ட் பராக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தீவிரவாத செயல்கள் பிராந்தியத்தினதும் சர்வதேசத்தினதும் ஸ்திரத்தன்மைக்கு பாதகமாக அமைந்திருப்பதாகவும் எஹ¤ட் பராக் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த இந்தியா மற்றும் ஜோர்ஜியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு ஈரானுக்கு தொடர்பிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ¤ கூறியிருந்தார்.

ஈரான் மறுப்பு

எனினும், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது. சியோனிஸ சக்திகள் தாய்லாந்து- ஈரான் உறவில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com