Contact us at: sooddram@gmail.com

 

இலட்சக்கணக்கான மக்கள் பேரணி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இறைமையில் தலையிட வேண்டாமென நாடெங்கும் கோஷம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட உள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களடங்கிய பிரேரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உட்பட நேற்று நாடு முழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் இன, மத, அரசியல் பேதமின்றி இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நாடு பூராவும் இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, கத்தோலிக்க மதத் தலைவர்கள், பெண்கள், வேடுவர்கள், கலைஞர்கள், அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதோடு அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

தேசிய கொடியையும் ஜனாதிபதியின் உருவப்படத்தையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில பிரதேசங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்த தோடு கடைகளும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

150 ற்கும் அதிகமான நகரங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தோடு பிரதான ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஊர்வலமாக வந்த மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான கண்டனப் பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் பங்கேற்றனர். கண்டனப் பேரணி 2 மணி நேரம் வரை நீடித்தது. லேக்ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெருந்திரளான ஊழியர்களும் இதில் பங்கேற்றதோடு நிறுவன தலைவர் உட்பட பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

பிரதேச மட்டத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணிகளில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம். பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது ஐ.நா. அலுவலகங்கள், அமெரிக்க தூதரகம் என்பவற்றிற்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

கம்பளை

பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் கம்பளை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மதத் தலைவர்கள், பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் உட்பட பலரும் பங்குபற்றினர். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜெயரத்ன,

நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் உயிர் தியாகம் செய்யவும் இலங்கை மக்கள் தயாராக உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக இன, மத கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.

சுதந்திர தேசமான இலங்கை மீது கைவைக்க அதிகார சக்திகள் முயற்சி செய்கின்றன. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏதும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனால் அது இலங்கை மக்களின் பிணங்களுக்கு மேலே நடக்க வேண்டும்.

ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி பெற்ற வெற்றிகளை குழப்ப சதி நடைபெறுகிறது. இதற்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்படும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவின் யோசனைக்கு எதிரான பேரணிகள் நடைபெற்றன.

வடக்கு, கிழக்கில் நடைபெற்ற பேரணிகளில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். யாழ், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. ஏறாவூரில் நடைபெற்ற பேரணியில் சர்வதேசத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்குள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகரில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கச்சேரி முன்பாக நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா. சபைக்கு கையளிப்பதற்காக மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடியிலும் கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பென் கீ மூனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

திருகோணமலை மணிக்கூண்டுக்குக் கோபுரத்திற்கு முன்பாக கிழக்கு ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவின் தலைமையில் நடந்த பேரணியில், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஆதிவாசிகள்

தம்பானை பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆதிவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஹொரவப்பொத்தானை

ஹொரவப்பொத்தானை நகரில் நடந்த பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள் உட்பட அநேகர் கலந்துகொண்டனர். அமைச்சர் எஸ். எம். சந்ரசேனவின் தலைமையில் பேரணி நடைபெற்றது.

புத்தளம்

புத்தளம் நகர சபை மேயரின் தலைமையில் புத்தளம் நகரில் நடைபெற்றது. சிலாபம் நகரில் நடைபெற்ற பேரணிக்கு பிரதி அமைச்சர் நியூமால் பெரேரா தலைமை வகித்தார்.

கம்பஹா மாவட்டம்

ஜா- எல நகரில் அமைச்சர் பிலிக்ஸ் பெரேராவின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைக்கு எதிராக எத்தகைய சதி முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுபட்டால் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

கந்தானை பகுதியில் டாக்டர் சுதர்சினி ஜெராஜ் பெர்ணாந்து புள்ளேயின் தலைமையில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் சரத் குணரத்னவின் தலைமையில் நீர்கொழும்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு

கொழும்பில் பல்வேறு பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.

பம்பலப்பிட்டியில் இருந்து ஆரம்பமான பேரணியில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான உட்பட பெருந்திரளான மக்கள், மதத் தலைவர்கள் கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் வீதித் தடைகளை இட்டு அதனை தடுத்தனர். இதனையடுத்து ஒரு குழுவினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதோடு அவர்கள் அமெரிக்க தூதரகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.

வெலிகம

வெலிகம நகரில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள், அமைச்சர் மஹிந்த யாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு எதிரான சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் கோரினார். இந்த பேரணியின்போது அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. முலடியனவில் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் தலைமையில் பேரணி நடந்தது.

காலி

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்ற பாரிய பேரணியினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. காலி மாவட்ட எம்.பி.கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஹம்பாந்தோட்டை

பெலியத்தை பகுதியில் ஓழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட மதத் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கண்டி

தலதா மாளிகைக்கருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர் கண்டி நகரில் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. பிக்குமார் உட்பட பெருமளவு மக்கள் இதில் பங்கேற்றனர்.

வடக்கு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் வட மாகாண ஆளுநர் ஜி. எ. சந்ரசிரி, யாழ். சு.கா. அமைப்பாளர் அங்கஜன் உட்பட பெருமளவு தமிழ் மக்கள் கலந்துரையாடினர். பேரணி முடிவில் யு. என். டி. பி. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. மன்னாரில் நடந்த பேரணியில் மீனவர்கள் உட்பட பலர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

ஹுனைஸ் பாரூக் தலைமையில் பேரணி நடைபெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் நடந்த பேரணிகளிலும் அதிகமான தமிழ் மக்கள் பங்குபற்றினர். இலங்கை மீதான வெளிநாட்டுத் தலையீட்டைக் கண்டித்து அவர்கள், பெற்ற சுதந்திரத்தை மீளப்பெற இடமளிக்க முடியாது என்று கோஷமிட்டனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சட்டத்தரணிகள் சங்கம் ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.

நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டதோடு இன்றும் பேரணிகள் தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com