Contact us at: sooddram@gmail.com

 

உள்ளுக்குள் நகமும் தசையும் மாதிரி, வெளியே வந்தால் நான் தேசியவாதி! (படம் பார்த்து கதை சொல்லுங்கள். )

தமிழ் தேசியம் பேசுவதில் இன்று முன்னிலையில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அண்மையில் அவரது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என இருவர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெடி மருந்துகளுக்கு அப்பால் மீட்கப்பட்ட ஆபாச சீடிக்கள , பிரதேச யுவதிகளின் புகைப்படங்கள், வகைவகையான பிரிதிப்பக்கட்டுக்கள் மக்களின் புருவங்களை உயர வைத்தது.

ஆனால் மேற்படி அத்தனையும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மீட்கப்பட்டபோதும், அது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயலாம் என்றும் விடயத்தினை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு ஊடகவியலாளர்களாம் என்றும் சொன்னார் சிறிதரன். கேள்வி கேட்க திராணயற்ற ஊடவியலாளர்கள் களவாணிப்பயல் கூறும் கதையை அப்படியே தட்டச்சு செய்து பிரசுரித்துவிடுவார்கள் அல்லது களவாணிப்பயலே தட்டச்சு செய்து கொடுப்பதை பிரசுரித்து மக்களை ஏமாற்றிவிட்டோம் என சுய இன்பம் கண்டுகொள்வார்கள்.

அலுவலகத்தினுள் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை திட்டமிட்டு வைத்து விட்டது என்று சிறிதரன் சொல்ல அவற்றை அப்படியே பிரசுரித்த ஊடகங்கள் எவ்வாறு வைத்தார்கள , உங்கள் பிரத்தியேக செயலாளரின் மடிக்கணினியினுள் பிரதேச யுவதிகளின் படங்களும் , ஆபாசி வீடியோ கட்சிகளும் இருந்துள்ளனவே? எவ்வாறு மற்றவர்கள் அவரது கணினியினுள் நுழைய முடியும , அவ்வாறு ஊடுருவ முடியுமென்றால் இலங்கை அரசிற்கு எதிராக திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை செய்துகொண்டிருக்கின்ற தங்கள் சகோதரனின் கணினியினுள் ஊடுருவி இணையத்தை முடக்கலாம் அல்லவா என்ற கேள்விகளை கேட்கவும் இல்லை அதற்கு திராணியும் இல்லை. சரி, நாங்களேனும் ஐயாவிடம் இவற்றை கேட்போம் என அழைப்பை ஏற்படுத்தி இலங்கைநெற் இல் இருந்து பேசுகின்றோம் என்றால், 'நான் இப்ப சிக்கன் குறைவான இடத்தில் நிற்கின்றேன் லைன் கிளியர் இல்லை என்பது நல்ல கிளியராக கேட்கும். பின்னர் சில செக்கண்கள் ஐயா ஹலோ ஹலோ எனக் கத்துவார். தொடர்ந்து இணைப்பு துண்டிக்கப்படும்.'

மேலும் சிறிதரனுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஊடகங்கள் தொடர்ந்து மக்களை மந்தைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியம் பேசுவதில் சம்பந்தன , மாவை , சுரேஸ் பிறேமச்சந்தின் போன்றோரிலும் சிறிதரன் வல்லவராம் அதனால்தான் சிறிலங்கா அரசாங்கம் சிறிதரனை இலக்கு வைக்கின்றதாம் என தங்கட சகாக்களுக்கே ஆப்பு வேறு. அத்துடன் சிறிதரன் நான் இவ்வாறான மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டேன் என்று கூறியதுடன் தனது சகாவான சப்ரா சரவணபவானிடமும் நீயும் ஒருக்கா சொல்லன் எனக்கேட்டு அவரும் சிறிதரன் அடிபணிய மாட்டார் என்றார்.

ஆனால் இங்கே என்ன நடக்கின்றது பாருங்கோ.
தமிழ்த்தேசியவாதி யாருடன் நகமும் தசையும் போல் இருக்கின்றார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ..

 

நாம் ஒன்றும் இது தவறு, இலங்கை இராணுவத்துடன் நீங்கள் ஒய்யாரம் செய்வது தப்பு என்று சொல்லவரவில்லை. இதை சாதாரண மக்கள் செய்தால் அதை தவறு என்று அதற்கு எத்தனையோ கோணங்களில் கதைகள் சொல்லிக்கொண்டு நீங்கள் ஒழிந்திருந்து அதைச் செய்கின்றீர்களே அதைத்தான் தப்பு என்கின்றோம்.

தமிழ் தேசியம் என மூச்சுக்கு ஒருமுறை சொல்லுகின்ற சிறிதரன் மாத்திரம் இவ்விடயத்தினை செய்யவில்லை. மூத்த தலைவர்கள் கொழும்பில் அரச மாளிகைகளிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இதையே செய்கின்றார்கள். சிறிதரன் இன்னும் அரசியலில் கற்றுக்குட்டி என்ற காரணத்தினாலும் முள்ளுக்கரண்டி பிடித்து சாப்பிடத்தெரியாது என்ற காரணத்தினாலும் ஓலைக் குடிசைக்குள்ளே ஒய்யாரம் செய்கின்றார் அவ்வளவுதான் வித்தியாசம்.

மேற்படி தமிழ் தேசியத் தலைவர்களுக்கும் அரச உயர் மட்டத்திற்குமிடையே உள்ள உறவு பற்றி இலகு வழியில் விளங்கப்படுத்துவதானால்.

'அங்கிள் மை டாட் இஸ் நொட் டேக்கிங் மீ ரு யப்னா'

என்று மஹிந்தரிடம் முறையிட்டிருக்கின்றாள் சப்ரா சரவணபவானின் மகள். இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன. அந்தக்குழந்தைக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது தனது தந்தையின் உற்ற நண்பன் யார் என்பதும் யாருக்கு மாத்திரம் தனது தந்தை கட்டுப்பட்டவன் என்பதும். அதனால்தான் அந்தக்குழந்தை குடும்ப விருந்தொன்றில் அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது, அங்கிள் என்னுடை அப்பா என்னை யாழ்பாணம் கூட்டிக்கொண்டு போகின்றார் இல்லை என முறையிட்டுள்ளது.

அதாவது யாழ்பாணச்சமுதாயம் கேடுகெட்ட சமுதாயம் அங்கெல்லாம் எங்கள் பிள்ளைகளைக் கூட்டிச்செல்லக்கூடாது. கொழும்பே வாழ்வதற்கு சிறந்த இடம் சிங்கள நண்பர்களே சிறந்தவர்கள் என தமது வாரிசுகளுடன் கொழும்பில் உல்லாசமாக இருக்கின்ற தமிழ் தலைவர்கள் பாமர மக்களை எத்தனை காலம்தான் தொடர்ந்தும் இவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதே மேலுள்ள படங்களை பார்த்த உங்களிடம் நாம் கேட்கும் கேள்வி.

(நன்றி: இலங்கைநெற்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com