Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்கா கோரிய ரகசிய தகவல்கள் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக்

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கோரிய ரகசிய தகவல்கள் குறித்த பட்டியலை கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களாக கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் நிறுவனங்களிடம் இருந்து பெருவாரியான ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு அமைப்புகள் உறிஞ்சி எடுத்துள்ளன. அந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுசெயல்படுகின்றன. இதனால் வெளிநாட்டு உளவு பார்ப்பு சட்டத்தின் (எப். ஐ. எஸ். ஏ.) மூலம் பெரும்பாலான நிறுவனங்களை மிரட்டி கொத்து கொத்தாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உலகம் தழுவிய உளவு வேட்டையை அந்நாட்டின் உளவு அமைப்பான என். எஸ். ஏ. வின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இணையதளங்கள், அமெரிக்க அரசை எதிர்த்து அந்த நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்துக்கும் இணையதள நிறுவனங்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் அண்மையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி அமெரிக்க அரசு கோரிய ரகசிய தகவல்கள் குறித்த விவரங்களை இணையதள நிறுவனங்கள் பகிரங்கமாக வெளியிட நீதித் துறை அனுமதி அளித்தது. எனினும் முழுமையான விவரங்களை வெளியிடாமல் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிட வேண்டும். அதுவும் 6 மாதங்களுக்கு முந்தைய புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதித்தறை அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து பேஸ்புக், கூகுள், மைக்ரோசொப்ட் ஆகிய இணையதள நிறுவனங்கள் அமெரிக்க அரசு கோரிய தகவல் புள்ளிவிவரங்களை திங்கட்கிழமை வெளியிட்டன.  கடந்த 2013 ஜனவரி முதல் ஜூன் வரை மைக்ரேசொப்ட் நிறுவனத்தின் 15,000 கணக்குகள் தொடர்பாக 1000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோரிக்கைகளை எப். பி. ஐ. புலனாய்வு அமைப்பிடம் இருந்து வந்துள்ளன. இதே காலகட்டத்தில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திடம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சார்பில் 7000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. மிக அண்மைக் காலத்தில் கோரப்பட்ட தகவல்கள் குறித்த 2014 பிற்பாதியில் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 2013 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 10,000 பயன்பாட்டாளர்களின் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் 2012 ஆம் ஆண்டில் 13 ஆயிரம் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் வந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாகூ நிறுவன பயன்பாட்டாளர்களில் மிக குறைவான தகவல்களை மட்டுமே கோரப்பட்டன. என்று அந்த நிறுவனம் விளக்கமளித்துள்து. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கோடிக்கணக்கில் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அவை மூடி மறைக்கப்படுகின்றன என்று பன்னாட்டு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com