Contact us at: sooddram@gmail.com

 

13ஆவது திருத்தத்தை திணிக்கவில்லை - சல்மான் குர்ஷித்


13ஆவது திருத்தத்தை இலங்கை அரசின் வேண்டுதலில்லாமல் நாங்கள் ஒருபோதும் திணிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை ஊடகவியலாளர்களை புதுடில்லியில் இன்று சந்தித்துரையாடும்போது தெரிவித்தார். இலங்கையிலுள்ள உயர்மட்ட ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் புது டில்லியை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இலங்கை ஊடகவியலாளர்கள் இன்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டம்

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது.
இச்சட்டத்திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனைதானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இருநாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆக, இணக்கமில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என்றார்.

87களில் இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கை அரசு கோரியது. நாங்கள் வழங்கினோம். மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள். எந்தவித மறுப்புமின்றி நாங்கள் அதனைச் செய்தோம்.

எமது இழப்புகளை காரணம்காட்டி, தீர்வொன்று காணும்வரை அமைதிகாக்கும் படை இலங்கையில்தான் இருக்குமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்கு நாங்கள் வரவேற்பளித்தோம். அதேபோல், இப்போது வீட்டுத் திட்டம் போன்றனவும் அப்படித்தான்.
ஆகையினால் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எம்மீது பழிபோடக் கூடாது. அச்சட்டமூலத்தினை ஆராய்ந்து பார்க்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் சிலர் 13 பிளஸ், 13 மைனஸ் என்று பலவிதமாக பேசிவருகிறார்கள். நடைமுறை சாத்தியங்களுக்கு இணங்க, எந்தவொரு அரசாங்கமும் தமது சட்டமூலத்தை மாற்றியமைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆகையினால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசுக்கு பரிசீலிக்கும் உரிமை இருக்கிறது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு

13ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வுபற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான். ஆனாலும், சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவருகிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து, அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடையமுனைவதே சிறந்தவழி எனத் தோன்றுகிறது.

ஐ.நா. மனிதஉரிமை பேரவையில்


இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது  பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. மனிதஉரிமை பேரவை என்பது தனியொரு நாட்டுக்குரியதல்ல. இதில் பல நாடுகள் இருக்கின்றன. ஆகையினால் அனைத்து நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.உயிரிழப்பு, மனிதஉரிமை மீறல்கள் என்பன சாதாரண விடயமல்ல. இதனை தாங்கிக்கொள்ளும் சக்தி எல்லோருக்கும் இருக்காது. ஆகையினால், அதற்குரிய நடைமுறைகள் இருப்பது அவசியம் தான். ஆனாலும், ஒரு நாட்டின் இறைமைக்கு பாதகம் இல்லாமல் அந்த நகர்வு இருக்க வேண்டும். இலங்கைக்குள் குழப்பம் நீடிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றார்.

30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் அந்த வரலாறு பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதைப் பின்னொட்டியே போர்க்குற்ற விசாரணை பற்றியும் பேசப்படுகிறது.

பயங்கரவாதத்தினை இல்லாதொழிக்க நீண்டகாலம் எடுத்தது உண்மைதான். அதற்காக, மனிதஉரிமை விவகாரங்களையும் நீண்டகாலம் இழுத்தடித்து, பதிலளிக்காமல் இருக்கலாம் என நினைப்பதும் சாத்தியமாகாது. அவ்வளவு காலத்திற்கு இந்த விவகாரத்தினை இழுத்தடிக்க முடியாது. ஆகையினால், உரியகாலத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்று கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.
பல நாடுகளை அணுகி, தமக்கான ஆதரவினைபெற இலங்கை முயற்சிக்கலாம். அது அவர்களின் உரிமை. அதுமட்டுமல்லாமல், அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய உறவினை பேணமுயல்வதே இலங்கை அரசுக்கு நல்வழியாக அமையும் என்றார்.

வந்தவுடன் விசா

இந்திய விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக விவாதித்து வருகிறோம்.
அதில் இலங்கை வர்த்தகர்கள், பயணிகள் வந்தவுடன் விசா ( on arrival visa) நடைமுறை பற்றி சங்கடப்படுகிறார்கள். ஆகையினால், இதுபற்றி நாங்கள் தொடர்ந்தும் நல்ல முடிவினை வழங்க விவாதித்து வருகிறோம். சில பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக, இவ்;வாறான விசா நடைமுறையினை இலங்கைக்கு வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com