Contact us at: sooddram@gmail.com

 

பாராளுமன்ற அதிகாரங்களை பலப்படுத்தி மக்களின் இறைமைக்கு முன்னுரிமை

வடக்கு, தெற்கு உள்ளங்களை இணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கூடிய கரிசனை

நடுநிலை வெளிநாட்டுக் கொள்கை ஊடாக நாட்டை கட்டியெழுப்புதல்


வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்களின் உள்ளங்களை இணைத்து சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே எமக்கு முன்னிருக்கும் பாரிய சவாலாகும். தேசிய நல்லிணக்க செயற்பாட்டினூடாக தேசிய ஜக்கியத்துடன் எமது நாட்டை மனிதாபிமான நாடக முன்னேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு வறுமையை ஒழிப்பதாகும் என்று குறிப்பிட்ட அவர், நடுநிலையான வெளிநாட்டு கொள்கையூடாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று உலகில் தலைசிறந்த நாடாக எமது நாட்டை கட்டியெழுப்புவ தாகவும் அவர் குறிப்பிட்டார். 67 ஆவது தேசிய சுதந்திர தின விழா நேற்று பாராளுமன்ற பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, அரசியல், பொருளாதார, சமூக கலாசார ரீதியிலான மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்துவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்ற அரசியலமைப்பு திருத்தத்தினூடாக பாராளுமன்ற அதிகாரங்களை பலப்படுத்தவும் நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கும் கூடுதல் அதிகாரங்களை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் உரையாற்றி அவர், 67 ஆவது சுதந்திர தினத்தை மிக அபிமானத்துடன் இன்று கொண்டாடுகிறோம். வரலாற்று முக்கியத்துவம் மிக்க அடித்தளமும் முக்கியத்துவமும் கொண்ட ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை பிரதேசத்தில் பாராளுமன்றத்திற்கருகில் இருந்து உரையாற்ற கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 67 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க போராடிய வீரர்களை நினைவு கூர வேண் டியது எமது பொறுப்பாகும்.

1815 இல் காலனித்துவ ஆட்சிக்காலம் நாட்டிற்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான காலப்பகுதியாகும். 1818, 1848 இல் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களினால் தாய் நாட்டில் இரத்த ஆறு ஓடியது. போராட்ட வீரர்கள் தியாகிகளினால் தாய் மண் இரத்தத்தினால் நனைந்தது. 1948 வரை எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 1818 முதல் 1848 வரை எமது நாட்டிலிருந்து தேசிய வீரர்கள் தேசிய போராட்டத்திற்கு பெரும் பங்காற்றி சுதந்திரத்திற்கு பங்காற்றினர்.

அவர்கள் முன்னெடுத்த போராட்டம் பல சந்தர்ப்பங்களில் அமைதியான சொரூபத்தை கொண்டிருந்தது. சில நேரம் அகிம்சை போக்கை காட்டியது எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மூலம் மேலைத்தேய ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரண்டார்கள். தேசிய சுதந்திரப் போராட்டத்தின் பயனாக டொனமூர் ஆணைக்குழு மற்றும் சோல்பரி ஆணைக்குழு என்பன எமது நாட்டில் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்தை வென்றெடுக்க டி.எஸ். சேனாநாயக்க, எப்.ஆர். சேனாநாயக்க, பீ.டீ. ஜெயதிலக, பொன்னம்பலம் ராமநாதன், டீ.பி. ஜாயா, எஸ்.டபிள்யு.

ஆர்.டி.பண்டாரநாயக்க, என்.எம். பெரேரா, பிலிப் குணவர்தன, லெஸ்லி குணவர்தன போன்ற வீரர்கள் பங்காற்றினார்கள். குறிப்பாக அநகாரிக தர்மபாலவையும் நினைவுகூர வேண்டும். அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த இலக்கிய வாதிகள் தமது பேனாக்களினூடாக தமது தேசிய பொறுப்பை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றியிருந்தார்கள்.

1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் அரசாங்கம், கட்டுநாயக்க மற்றும் திருகோணமலை பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுத்தது.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் 1972 மே மாதத்தில் குடியரசு யாப்பொன்றை உருவாக்கி குடியரசு மேலும் ஜனநாயகமும் சுதந்திரமும் கொண்ட நாடாக மாற்றியது. 1970 களின் பிற்பகுதியில் ஆரம்பமான 30 வருட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத யுத்தத்தினால் எமது முழு தேசமும் அழிவுக்குள் தள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நஷ்டத்தை கணிப்பிட இயலாது.

நாட்டின் எதிர்காலத்துக்கும் எமது நாடு எழுச்சி பெறவும் இந்த குரூர யுத்தம் பெரும் தடையாக அமைந்தது.2009 ஆம் ஆண்டில் 30 வருட யுத்தத்திற்கு முடிவு காண முடிந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின் ஜெனரல் சரத் பொன்சேகா போன்ற படை வீரர்களுடன் எமது வீரம் மிக்க படை வீரர்கள் உயிர் தியாகத்தினால் 2009 மே மாதத்தில் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க முடிந்தது.

தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்த படை வீரர்களை இந்த சுதந்திர தினத்தில் நினைவு கூருவது எமது பொறுப்பாகும். 2009 ஆம் ஆண்டாகும் போது புலிப்பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி நாட்டில் அமைதி நிலையை ஏற்படுத்தி நாட்டின் பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்ய முடிந்தாலும் வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்களின் உள்ளங்களை இணைக்க முடியாதிருந்தது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுச் சத்தம் எமது படையினரின் சூட்டுச் சத்தத்தினால் மெளனமாக்கப்பட்டது.

பெளதீக ரீதியில் யுத்தம் முடித்து வைக்கப் பட்டது. ஆனால் எமக்கு இன்றிருக்கும் பாரிய சவால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் உள்ளங்களை இணைத்து சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாகும். தேசிய நல்லிணக்க செயற்பாட்டினூடாக தேசிய ஐக்கியத்துடன் எமது தாய் நாட்டை மனிதாபிமான தேசமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

நாட்டை இவ்வாறு முன்னேற்றுகையில் எம்முன் பல பொறுப்புக்கள் காணப்படு கின்றன. 67 வருட கடந்த காலம் குறித்து திரும்பிப்பார்க்கையில் எமக்கு உண்மையில் மகிழ்ச்சி அடைய முடியுமா? இது தொடர்பில் மாறி மாறி விரலை நீட்டிக் கொள்வது எமது பொறுப்பல்ல. 67 வருடங்கள் நாட்டை ஆட்சி புரிந்த சகல அரசியல் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் இன்று வரை தாம் செய் பணி குறித்து தமது பக்கம் விரலை நீட்டி சிந்திக்க வேண்டும். தமது பொறுப்பு குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். எமக்கு எங்கு தவறு நடந்தது? அவற்றை நாம் எவ்வாறு திருத்திக்கொள்வது என சிந்திப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும்.

67 வருட சுதந்திரத்தின் பாதையை போன்றே 2009 ஆம் ஆண்டின் பின் நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்ட பின்னர் உள்ள நிலை குறித்து எம்மால் மகிழ்ச்சி அடைய முடியுமா? மக்களுக்கிடையில் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வு, வறுமை என்பன மிகப்பெரும் பிரச்சினை போன்றே பாரிய சவாலாகவும் உள்ளது. இது நாம் கட்டாயம் தீர்க்க வேண்டிய பிரச்சினையாகும்.

ஜனவரி 8 ஆம் திகதி புதிய அரசாங்க மொன்றுக்கு மக்கள் ஆணையை வழங்கினார்கள். எமது நாட்டில் புதிய மாற்றமொன்றை ஏற்படுத்துவதாக நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தோம். அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்து வதாக கூறியிருந்தோம். அவற்றை நிறைவேற்ற நாம் கட்டுப்பட்டுள்ளோம். கடந்த 03 வார காலத்தில் அதற்கான ஆரம்ப அடித்தளம் இடப்பட்டது.

எமது நாட்டின் வறுமை வீதம் 6.7 ஆக காணப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்தி அதனை மட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நம்பிக்கை வைத்துள்ள புதிய அரசாங்கம் பிரதானமாக மக்களின் வறுமை நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையை ஒழித்து உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

விவசாய நாடு என்ற வகையில் தேசிய விவசாயத்துறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் முன்னேற்ற வேண்டும். அரச துறையை பலப்படுத்தி பக்கச்சார்பின்றி செயற்படும் நிலையை உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு திருத்தத்தி னூடாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு இருக்கும் கூடுதல் அதிகாரங்களை அகற்றுவதினூடாக நாட்டு மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்ய நாம் கட்டுப்பட்டுள்ளோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நாம் இவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

தேசிய ரீதியிலான பிரச்சினைகளை தீர்க்கவும் திருத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பது போன்றே எமது வெளிநாட்டு கொள்கையை பலப்படுத்தி நடுநிலையான வெளிநாட்டு கொள்கையினூடாக சகல இனங்களுக்கிடையிலும் நல்லுறவையும் நட்புறவையும் கட்டியெழுப்பி புதிய உலகில் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு என்பவற்றை பயன்படுத்தி எமது தாய் நாட்டை பரந்த அளவில் அபிவிருத்தி செய்ய நாம் அர்ப்பணிப்புடன் செயற் படுவோம்.

புதிய சந்ததியினரை நவீன தொழில் நுட்பத்துடன் இணைப்பது போன்றே நவீன உலகுடன் புதிய சந்ததியை இணைப்பது அவசியமாகும். புதிய சந்ததியின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்ட அரசாங்கம் என்ற வகையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் சர்வதேச மட்டத்தில் சகலரதும் ஒத்துழைப்பை பெற்று ஐ.நா. சபையின் கொள்கைகளை பின்பற்றி எமது நாட்டை உலகில் தலை சிறந்த நாடாக கட்டியெழுப்பும் பணியை நாம் மேற்கொள்வோம். கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது போன்றே எமது புதிய அரசாங்கம் எமது அன்பான மக்களுடன் எமது மேலான தாய் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com