Contact us at: sooddram@gmail.com

 

கண்டி மாவட்ட மலையக மக்களின் பிரதிநிதித்துவமும் சவால்களும்

கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தலைப்பிலான கருத்துக் களம் நாளை ஞாயிற்றுக்கிழமை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெறும். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கலாநிதி சந்திரபோஸ் ஆகியோர் பங்குபற்றும் இக் கருத்து களத்தில் அமைப்புக்களும் பொது மக்களும் கலந்து கொள்ளுமாறு கண்டியில் இயங்கும் மனித அபிவிருத்தித் தாபனத்தின் தலைவர் பி. பி. சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலையக சிறு அரசியற் கட்சிகளின் ஜனநாயக உரிமை அவர்கள் அரசியலில் போட்டியிடுவது. ஆனால் அது கண்டி மாவட்டத்தில் வசிக்கும் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களது பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் சிவப்பிரகாசம் கண்டியில் உள்ள மக்கள் ஒத்துழைப்பிற்கான நிதியக்கட்டத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி தமிழ் மக்கள் 154321 பேர் வசிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் முதல் ஒரு இலட்சத்து பத்தாயிரம் தமிழ் வாக்காளர்கள் வரையில் உள்ளனர். ஆனால் பாராளுமன்றத்தில் கண்டி தமிழ் மக்களின் குரல் ஒலிக்க ஒரு பிரதிநிதி இல்லை. இதனை விட சற்று அதிகமான முஸ்லிம் சகோதர இனத்திற்கு கண்டி மாவட்டத்தில் மட்டும் நான்கு பிரதிநிதிகள் உள்ளனர். இந்த வேறுபாடு கண்டி மாவட்ட தமிழ் மக்களின் சிந்தனையை கிளறவேண்டும் என்பதே எமது நோக்கம். அரச சார்பற்ற ஒரு அமைப்பு அரசியல் பேசலாமா? என சிலர் சிந்திக்கலாம். எமக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. ஆனால் கண்டி மாவட்டத்தின் தமிழ் மக்களது பரிதாபத்தை பற்றிப் பேசுவதற்கு, விவாதிப்பதற்கு, கருத்து வௌியிடுவதற்கு ஒரு மேடை அல்லது களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதனையே எம்போன்ற அமைப்புக்கள் செய்ய வேண்டிய ஒரு பணியாக உள்ளது.

எனவே 8ஆம் திகதி கண்டி இந்து கலாசார மண்டபத்தில் பொதுக் கருத்துப் பகிர்வு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தலைப்பிலாகும். இது பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 வரை நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ், சட்டத்தரணி எஸ்.பரஞ்சோதி, பேராதனைப் பல்கலைக்கழக துணை நூலகர் ஆர்.மகேஸ்வரன், உட்பட பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றி கருத்துரை வழங்க உள்ளனர். இது அவசரமும் அவசியமுமான ஒன்றாகும். தற்போதைய அரசு நடைமுறைப்படுத்திவரும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 23 தினங்கள் கழிந்து விட்டன. அதன்பின் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். அது ஏப்ரல் 23ஆம் திகதிக்குப் பின் எப்பொழுதும் அது நடக்கலாம் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் மீள வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும் போது அது கட்டுக்கடங்காது போனால் மேலே குறிப்பிட்ட திகதி வரையில் தாக்குப் பிடிக்க வைப்பது ஒரு பாரிய சவாலாக இருக்கப் போகிறது. அதாவது பாராளுமன்றத் தேர்தலுக்கு கட்டியம் கூறுவதை யாரும் மறுக்க முடியாது. இதையே கடந்த வரவு–செலவுத்திட்டமும் கட்டியம் கூறியது. எனவே, அரசு ஒரு பொதுத்தேர்தலுக்குத் தயார் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தயாரா? என்றால் கடந்த கால வரலாறுகள்தான் நினைவிற்கு வருகிறது.

இந்நிலையில் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு சிந்தனையை தமிழ் பல் ஊடகங்கள் நினைவு படுத்தி வருகின்றன. இவ்வாறு எம்மை சிந்திக்க வைத்துள்ள தமிழ் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதனை நடைமுறைப் படுத்த ஒரு கருத்து மேடை தேவை. அதனையே நாம் செய்கின்றோம்.
அது மட்டுமல்ல கண்டி மாவட்டத்தில், வெறுமனே தோட்டத் தொழிலாளர்களை மட்டும் வைத்து அரசியல் செய்ய முடியாது. ஏனெனில் தோட்டப் பகுதியில் ஒருகாலத்தில் 99 முதல் 100 சதவீதம் தோட்ட மக்களே இருந்தனர்.

இன்று நிலைமை மாறி 40 சதவீதமானவர்கள் அல்லது அதிலும் குறைந்தவர்கள்தான் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். இதனை வேறு விதம் கூறுவதாயின் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு துறைகளில் உள்ளனர். தொழிலாளி என்ற எல்லையைக் கடந்து அவர்கள் மத்திய தர வர்க்கமாக உருவாகி வருகின்றனர். ஆசிரியர்கள், இலிகிதர்கள், அரச சேவையாளர்கள், சிறிய அளவிலான வர்த்தகர்கள், மற்றும் பெருந் தோட்டங்களுக்கு வெளியே வந்து தொழில் புரிபவர்கள் போன்றோரே தற்போது தோட்டங்களைவிட்டு வெளியேறி விட்டனர். அவர்களும் படிப்படியாக நகர மயமாக்கலில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். நகரப் பகுதிகளை அண்டி வாழும் தமிழ் வர்த்தகப் பிரமுகர்களும் தாம் தோட்டப் பரம்பரை அல்லது இந்திய வம்சாவளி என்று தம்மை அடையாளப்படுத்தினாலும் அவர்களை தொழிலாளி என யாரும் கணிப்பதில்லை. அப்படி கணிக்கவும் முடியாது. ஏனைய மக்களும் இவர்களை தோட்டத் தொழிலாளிகள் என்று அடையாளமிடுவதும் இல்லை.

எனவே, பழைய சம்பிரதாயப்படி தோட்டங்களை மட்டும் இலக்காகக கொண்டு அரசியல் செய்ய முற்பட்டால் அது தோல்வியில் முடியலாம். தோட்டத் தொழிலாளர்களை மட்டும் இலக்கு வைத்து கண்டி மாவட்டத்தில் அரசியல் மேற்கொள்ளவது அல்லது முன் நகர்வுகள் எடுப்பது தமிழ் பிரதி நிதித்துவத்திற்கு பயன் அளிக்காது. இதனை கடந்த ஜனாதிபதித் தேர்தல் நன்கு வெளிப்படுத்தி உள்ளதைக் காண முடிகிறது. கை, யானை, நாற்காலி, வெற்றிலை சின்னங்கள் என்ற சம்பிரதாயங்கள் மாறி மலையக மக்களும் அன்னப் பட்சிக்கும் வாக்களித்த நிலையை அறிய முடிகிறது. எனவே பழைய அரசியலை விட்டு மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டனர். இதனை சாதகமாக்கி எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க வேண்டும் என்றார்.
(நன்றி  வீரகேசரி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com