Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முட்டி மோதி அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை

கிழக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு

மிழ், முஸ்லிம் உறவு குறித்து காத்திரமான கருத்துகளை முன்வைத்து வந்த அண்ணன் சம்பந்தன் இப்பொழுது காட்டமான விமர்சன ரீதியான கருத்துகளை கூறிவருவது ஏன்? இந்த விரிசல் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாக வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசப்படுகின்றதா? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

எதிர்வரும் (பெப்ரவரி) 28 ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா “பீ” முகாம் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட முன்னாள் உறுப்பினர் நஜாத் உட்பட கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களும் பொதுமக்களும், வாக்காளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது :-

சம காலத்தில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரான முஸ்லிம்கள் பற்றிய பிரஸ்தாபம் குறித்து எமது மக்கள் மிகவும் ஆதங்கத்தோடு இருக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தனது முதலாவது உத்தியோக விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்துக் கொண்டனர். இவ்வாறான சூழ்நிலையில் பலவிதமான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. இரண்டு நாடுகளுக்குமான இரு தரப்பு பிரச்சினைகளுக்கான தீர்வு மாத்திரமல்ல இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பது குறித்து விஷயங்களும் பேசப்படலாம் என நம்பப்படுகின்றது.

ஆனால் அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சில விஷயங்களைப் பற்றி எங்களுக்கே வியப்பாக இருக்கின்றது. எதற்காக இவ்வாறு நாங்கள் விமர்சிக்கப்படுகின்றோம்? ஏன் தமிழ் தேசியத் தலைமைகள் கொஞ்சம் தாறுமாறாகக் காட்டமாகப் பேசி வருகின்றன என்பதில் எனக்கு இன்னும் சரியாக தெளிவு இல்லை. இவ்வளவு நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்ற பொழுது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற போது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் என்பன ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாக காட்டமாக இருக்கின்றன என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அவை ஆற்றாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என எங்களை நாங்களே சமாளித்துக்கொள் கின்றோம்.

ஏன் அந்த ஆற்றாமை ஏற்பட்டது என்பதற்கு அவர்களிடத்திலே தான் விளக்கம் கோர வேண்டும். குறிப்பாக அண்மையில் எழுந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அந்த முதலமைச்சர் பதவியை பெற்றிருக்கின்றது என்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவரான நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக ஒன்றைச் சொல்லியிருப்பதை இன்றும் கூட நான் பார்த்தேன்.

அண்ணன் சம்பந்தன் கூட வழக்கமாக அவரது உரைகளில் காணப்படும் தமிழ் - முஸ்லிம் உறவு குறித்த அம்சங்களை விடுத்து, மிக காட்டமான விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைப்பது குறித்து நாம் வேறெதுவுமல்ல, வேதனையடைகின்றோம். இந்த விரிசல் வேண்டுமென்றே ஏதாவது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாக வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசுகின்றனரா? என்று யோசித்தாலும் கூட அவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதனால் என்ன நன்மை கிடைக்கப் போகின்றது என்று எங்களுக்குப் புரியவில்லை.

முதலமைச்சர் விவகாரத்தில் இவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டதா? முதலமைச்சர் விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். சில நியாயங்களை நாங்கள் பேச வேண்டும். வெறும் அறிக்கை விடுவதில் பயனில்லை. அவர்கள் விடும் அறிக்கைக ளுக்கு மாற்று அறிக்கை விடுவதைக் கூட நான் தவிர்த்துக் கொண்டு வருகின் றேன்.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நி¨யில் அந்த மண்ணைச் சேர்ந்த உங்கள் மத்தியில் நான் இதனைக்கூற வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்போடு முட்டி மோதிக்கொண்டு அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, கிழக்கு மாகாணத்திலும், கண்டி, கொழும்பு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுகின்ற தலைமையொன்றல்ல. முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களையும் மனதில் கொண்டு தான் நான் பேச வேண்டும். எனவே எனது வார்த்தைகளில் பக்குவம் பேணப்பட வேண்டும். நேர்மையும் தூர நோக்கும், சாணக்கியமும் இருக்க வேண்டும்.

ஆனால் இவை எவையுமே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பேச்சுக்களில் தென்படவில்லை என்றுதான் நான் இன்று இந்த விஷயத்தை நோக்குகின்றேன்.

ஏனென்றால் இந்த கரைதுறைப்பற்று தேர்தலை எடுத்தாலும் இதற்கு முன்னர் நடந்த வட மாகாண சபைத் தேர்தலை எடுத்தாலும், பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலை எடுத்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்திருந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்தோம் என்பதைக் குத்திக் காட்டிப் பேசுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், அந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் இரண்டறக் கலக்காது தனித்துப் போட்டியிட்டதன் உள் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த அரசின் வற்புறுத்தல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்தும் எமது தனித்துவத்தை தக்க வைத்துக் கொண்டு போராடினோம் என்பதை குறைந்த பட்சம் அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவர் மூன்று முறை பதவியை விட்டு வெளியேறியதை காட்ட முடியுமா என நான் கேட்கின்றேன். இதைப்பற்றி நான் தமிழ் பேசும் தலைமைகளிடம் கேட்க விரும்புகின்றேன்.

அவர்கள் எங்களை கடிந்து பேசுகின்றார்கள் என்பதற்காக நான் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை.

எங்களது அரசியல் நேர்மையென்பது முக்கியமானது. நீங்கள் நினைக்கின்ற மாதிரி நாங்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பிழையான விஷயமாகும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதை தலைமை தான் தீர்மானிக்க வேண்டும். எமது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இழுக்கின்ற பக்கம் எல்லாம் நாங்கள் போக வேண்டும் என்ற ஒரு நியதி கிடையாது.

நாங்கள் தவறான முடிவெடுத்திருக்கலாம். அந்த தவறை நினைத்து நாங்கள் வருந்தியிருக்கலாம். கிழக்கு மாகாண சபை முடிவுற்ற தறுவாயில் அந்த முடிவை எடுப்பதற்கு சில நியாயங்கள் இருந்தன. அதிகாரத்தைக் கண்டு எங்களில் சிலர் அள்ளுண்டு சோரம் போகின்ற நிலைமை இருந்தது.

சமுர்த்தி நியமனம் மற்றும் வேறு அதிகாரங்கள் என்று பின்னால் போனவர்கள் எதுவுமே கிடைக்காமல் ஏமாந்து போய் எங்களோடு மீண்டும் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சிலருக்கு தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான தடுமாற்றங்களிலிருந்து இந்த முழு இயக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற சவாலுக்கு நான் அடிக்கடி உட்படுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையப் போகின்ற வெற்றிக்குக் குறுக்காக நிற்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. வடக்கில் தேர்தலை நடத்தக் கூடாது என்று ராஜபக்ஷ அரசாங்கம் என்னென்ன வெல்லாமோ செய்யப் பார்த்தது. அதற்காக அமைச்சரவைக்குள் மஹிந்த ராஜபக்ஷவோடு ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்கள் நான் வாதாடியிருக்கின்றேன்.

ஜோர்தானுக்குப் போயிருந்த நான் உடனடியாக நாடு திரும்பி, விமான நிலையத்திலிருந்து நேராக அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்று 13வது சட்டத் திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்த்து ஒன்றரை மணி நேரம் வாதாடியிருக்கின்றேன். மஹிந்த ராஜபக்ஷவும் நானும் மாறி மாறி ஒன்றரை மணி நேரம் வாதாடியிருக்கின்றோம் அந்த வாரத்தில் வெளிவந்த எல்லாப் பத்திரிகைகளிலும் அதனைப் பிரசுரித்திருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வெற்றிக்குக் குறுக்கே நின்று மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்குச் சாமரம் வீச வேண்டுமென்று நாம் அவரது அரசாங்கத்தில் சேரவில்லை. அவரது அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் தனித்துவமாகப் போட்டியிடுவோம் என பிடிவாதமாக இருந்த காரணத்தினால் பூநகரியில் மட்டுமல்ல, மன்னார் மாவட்டத்திலும் சில பிரதேச சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கு நாங்கள் காரணமாக இருந்தோம். மஹிந்த ராஜபக்ஷவிடம் எங்களைக் காட்டிக் கொடுத்தவர்களும் எப்பொழுது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியுள்ள அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள்.

முதலமைச்சர் பதவிக் காலத்தின் முதல் பகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நஜீப் ஏ. மஜீதிற்கு கொடுத்துவிட்டு எங்களது பங்கை அனுபவிப்பதற்கான கட்டம் வந்தபோது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் எங்களுக்குக் கிடைக்க இருந்த முதமைச்சர் பதவியைப் பறித்துத் தங்களுக்குத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிடிவாதமாக இருந்தனர்.

கிழக்கின் முதலமைச்சர் பதவியின் இரண்டாவது பகுதியை எங்களுக்குத் தருவதாக உடன்பாடு காணப்பட்ட போது தாமும் உடனிருந்ததாக நினைவுபடுத்தி எங்களுக்கு அதனைத் தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருமனதுடன் முன்வந்ததற்கு நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் கிழக்கு மாகாண சபையில் கூடுதலான உறுப்பினர்கள் எங்களோடு இருப்பதை ஆளுநருக்கு ஒப்புவித்துச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஓர் இணக்கப்பாட்டைக் காண்பதற்கு அவர்களுடன் மூன்று, நான்கு தடவைகள் கதைத்தோம். அவர்களது பிடிவாதப் போக்கில் எந்த விதமான தளர்வும் இல்லாத நிலையில், இறுதியில் நாங்கள் முதலமைச்சர் நியமனம் பற்றி முடிவெடுத்த போது அவர்களது மாகாண சபை உறுப்பினர்கள் கூட எங்களோடு உடன்பாடு காண வந்தார்கள். அதையும் இப்பொழுது தலைமையின் அங்கீகாரமின்றி நடந்ததாக அவர்கள் கூறலாம்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை தலைமையின் அங்கீகாரத்துடன் தான் எல்லாம் நடக்கின்றன என்ற நம்பிக்கையில் அவர்களோடு நாங்கள் சில உடன்பாடு களுக்கு வந்தோம். உடன்பாடுகளை நாம் நிச்சயமாக கெளரவிப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, கிழக்கில் எமது தலைமையில் ஒரு தேசிய அரசாங்கம் அமைந்தது என்ற பெருமையை நிலைநாட்டுவோம்.

இன்னும் பக்குவம் தவறி எடுத்தெறிந்து பேசுகின்ற நிலைமை தொடர்வது மிகவும் வேதனைக்குரியது.

ஏனென்றால் அண்ணன் சம்பந்தன் மூத்த அரசியல்வாதி. அவரோடு என்னை ஒப்பிடுவது மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம். அவரிடமிருந்து படிக்க வேண்டியவை நிறைய உள்ளன. அவரை நான் நொந்து கொள்ள விரும்பவில்லை.

நான் அவரை விமர்சிப்பதன் மூலம் என்னை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. அந்த மூத்த அரசியல் தலைமைக்கு முழுமையாக மதிப்பளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நிலையில் அண்ணன் சம்பந்தனை எங்களது குருவாகத்தான் நான் பார்க்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் இந்தக் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை நாங்கள் கிழக்கில் பறிகொடுத்திருந்தால் எவ்வளவு தூரம்’ பாதிக்கப்பட்டிருப்போம். அது எங்களுக்கு வாக்களித்த மக்களும், எங்களுக்கு எதிராக இயங்குகின்றவர்களும் எங்களைத் தூற்றுவதற்கு வாய்ப்பாகப் போய்விடும்.

அரசியலில் மூத்தவராக இருப்பதால் அண்ணன் சம்பந்தனை நான் குருவாகப் பார்க்கின்றேன். வில் வித்தை கற்றுக் கொடுத்து விட்டு கட்டை விரலை கேட்பது போலத்தான் அண்ணன் சம்பந்தன் இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கின் முதலமைச்சர் பதவியைக் கேட்பது அமைகின்றது. இதற்கப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நீண்ட, நெடிய பயணத்தை நாங்கள் தொடர வேண்டியிருக்கின்றது.

கரைத்துறைபற்று பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுவரை வென்றெடுக்கும் வாய்ப்பு உள்ளது. துரதிஷ்டவசமாக இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பு 2014 ஆண்டுக்குரியது என்ற காரணத்தினால் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதால் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது.

அல்லாது விட்டால் இன்னும் உறுப்பினர்களைப் பெற முடியும். முல்லைத்தீவு முஸ்லிம்கள் தனித்துவமான வாழ்வியலைக் கொண்டவர்கள், போர்ச் சூழலில் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள். துன்ப, துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்களது வாழ்வாதாரத்திலும். இவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் மாற்றங்களையும். அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com