Contact us at: sooddram@gmail.com

 

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு! பொலிஸ் அதிகாரத்திற்கு இடமில்லை! தமிழ் கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஜனாதிபதி

அரசியல் தீர்வானது 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமான அதிகாரங்களுடன் அமையும். ஆனாலும், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நான் தெரிவித்துள்ளேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர ெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான கால எல்லையினை கூறமுடியாது. மாகாண அரசாங்கங்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் பொலிஸ் அதிகாரங்கள் எவ்வகையிலும், பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. பொலிஸ் அதிகாரங்கள், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நான் தெரிவித்துள்ளேன். அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


அலரி மாளிகையில் நேற்று வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது: இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கடற்படையினரின் தரவுகளுக்கு அமைவாக அவ்வாறனதோர் தாக்குதல் சம்பவம் இடம் பெறவில்லையென தெரிகின்ற போதிலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமக்கிடையில் முன்னர் சில ஏற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அமைதிச்சூழல் அடிப்படையில் இத்தகைய ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.


மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அவர்களால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடிகிறது. அந்தவகையில் இரு நாடுகளின் மீனவர்களுக்குமிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இவ்வாறான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கிடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியமை முக்கியமானதாகும். இரு நாடுகளும் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இசைவாகவே இந்த செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்திய அரசினால் இலங்கைத் தூதுவர் அழைத்து விளக்கம் கோரப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கத்திற்கும் அவ்வாறான உரிமை காணப்படுகின்றது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறும் இதனை அத்தியாவசிய சேவையாக கருதி செயற்படுத்துமாறும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். மோசமான காலநிலை காரணமாக மட்டக்களப்பிற்கான எனது விஜயம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றேன். இந்தியா வெள்ள நிவாரண உதவி வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். இலங்கை வேண்டுகோள் விடுக்காத நிலையிலேயே இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்தது.


மேற்குலக நாடுகளுடனான உறவு தொடர்ந்தும் வலுவாகவே உள்ளது. சில நாடுகளில் இலங்கை தொடர்பான சாதகமான போக்குக்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. குடிவரவு தொடர்பான கனடாவின் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள், மற்றும் சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும்.

 
புலம் பெயர்ந்த மக்களுடனான உறவினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே புலம் பெயர்ந்த மக்களில் சிலர் இங்கு அழைக்கப்பட்டு உண்மை நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில தரப்பினர் எதிர்காலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முனையக்கூடும். அத்தகையவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாவர்.


விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். 30 வருட காலமாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் 6 மாதமளவிளான குறுகிய காலப்பகுதியில் முன்னாள் போராளிகளை விடுவிக்க முடிந்துள்ளமை இலகுவான காரியமல்ல. வேறெந்த நாட்டிலும், இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்ததில்லை. தடுத்து
வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடயத்தில் சான்றுகள் இருந்தால் அதனடிப்படையில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com