Contact us at: sooddram@gmail.com

 

17 அரசியல் தலைவர்களால  ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப் பாலம்

வடக்கு மக்களின் கனவு நனவானது, யாழ் - கொழும்பு பயணம் 120 கிலோ மீற்றரால் சுருங்கியது

கடந்த காலங்களில் தேர்தல் பிரசார வாக்குறுதியாக 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி பால நிர்மாண கனவை நாமே நனவாக்கி இருக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். மக்களுக்கான அபிவிருத்திகளை, தேர்தல் வாக்குறுதிகளாக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். அரசாங்கம் நாடெங்கிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகவே வடக்கில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனவும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

சங்குப்பிட்டிப் பாலத்தை தேர்தல் பிரசார வாக்குறுதியாக 17 அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் முன்வைத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். நாம் அவ்வாறில்லை. ஒரு வருட குறுகிய காலத்தில் பாலத்தை நிர்மாணித்து, அதனை மக்களுக்குக் கையளித்தும் விட்டோமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

வடக்கு மக்களும் அபிவிருத்தியின் முழுமையான பங்காளிகள் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிரித்தானிய நிதியுதவி மூலம் 1032 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இப்பாலத்தின் நீளம் 288 மீற்றர். அகலம் 7.4 மீட்டர் பூநகரியையும் யாழ்ப்பாண நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் இரு வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளது. தெற்கிலிருந்து 320 கிலோ மீற்றர் என்ற குறுகிய தூரபயணத்தில் மக்கள் யாழ்குடா நாட்டை அடைய இப்பாலம் வழி வகுக்கின்றது.

கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், மன்னார் ஊடான இப்பாதையில் யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பயணம் செய்வோர் ஏ 9 பாதையினூடாக செல்வதைப் பார்க்கிலும் சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும்.

வரலாற்று சிறப்பு மிக்க சங்குப்பிட்டி பாலத்தின் திறப்பு நிகழ்வு நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்:- சங்குப்பிட்டி பாலம் இன்று திறக்கப்பட்டதன் மூலம் வடக்கு மக்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளது.

கடந்த காலங்களில் பொன்னம்பலம் போன்றோர் இந்தப் பாலத்தை நிர்மாணித்துத் தருவதாக மக்களுக்கு தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எதிர்கால சந்ததிக்காக ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. அவர்கள் இந்த நாட்டில் சந்தேகம், பயமின்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையினை ஆரம்பித்தார்.

இதுவரை ‘ஏ 9’ வீதியூடாக மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு பயணிக்க முடிந்தது. இன்று முதல் ஏ -32 சங்குப்பிட்டிப் பாலம் ஊடாகவும் குறைந்த நேரத்திற்குள் யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும். வடக்கின் வசந்தம் வழங்கிய வரப்பிரசாதம் இது.

எமது அரசாங்கம் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே சொல்வதைச் செய்பவர்கள். அதே போன்று செய்வதையே சொல்பவர்கள் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வடக்கின் வசந்தம் மூலம் வீதி, வீடு, மின்சாரம், கல்வி, சுகாதாரம் என சகல துறைகளிலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. அரசாங்கம் இதற்கென பல கோடி ரூபாவினை செலவிட்டுள்ளது.

எதிர்காலத் திலும் பெருமளவு நிதியை செலவிடவுள்ளது. வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பல வருட காலங்கள் மக்கள் காணாத அபிவிருத்தி தற்போது வடக்கில் நடைபெறுகிறது.

மக்களாகிய நீங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை ஆசியாவின் உன்னத நாடாகக் கட்டியெழுப்பு வோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com