Contact us at: sooddram@gmail.com

 

அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்குப் பின்னதான மீள்குடியேற்ற நடவடிக்கை, மக்களின் நலன்கள், வடக்கு அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு, பாடசாலை செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற் பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளார்.

இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் வட மாகாண மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளடக்கிய யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் மகஜர் ஒன்றும் அபுல் கலாமிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற் கொண்டார். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் விரிவுரையாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கலையரங்கு நிரம்பி வழிந்ததோடு பலருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசிய அவர், இங்கு மனங்களின் ஒற் றுமை என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார். இதன் போது புகழ்பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாம் பொன் னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுச் சின்னமும் வழங் கப்பட்டது.

இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் யாழ். டில்கோ ஹோட் டலில் நடைபெற்ற மதிய போசன விருந்து பசாரத்தில் அப்துல் கலாம் கலந்து சிறப் பித்தார். வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு கலந்துரை யாடப்பட்டது. இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம், ரயில் பாதை நிர்மாணம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து பேசப் பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

கலுணவு விருந்துபசாரத்தின் பின்னர் அப்துல் கலாம் அடங்கலான குழு யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தது. பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் போன்றோரை அவர் சந்தித்தார்.

தனது யாழ்ப்பாண விஜயத்தை நிறைவு செய்த அவர் மாலை கொழும்பு திரும்பினார். தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு அப்துல் கலாம் இன்று இந்தியா திரும்புகிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com