Contact us at: sooddram@gmail.com

 

சமூகம் வழங்கியுள்ள உயர்ந்த அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தும் மதகுருமார்

மதகுருமார் தமது மதம் சார்பான விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தாம் அரசியலில் நேரடியாகக் களமிறங்கி அரசியல்வாதியாக தம்மை மாற்றிக் கொண்டு ஓர் அரசியல்வாதி போன்று அரசியலில் ஈடுபட வேண்டும். இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இல்லாத பொல்லாத சோடிக்கப்பட்ட பொய்களைக் கூறி நாட்டின் தலைமைக்கும், இறைமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்துவது எந்தவொரு மதகுருவினதும் பணியல்ல. அது வீம்பிற்காகச் செயற்படும் எதிர்க்கட்சியினரது பொய்ப் பிரசார வேலை எனச் சர்வமதத் தலைவர்களும், கல்விமான்களும், சிவில் சமூகத்தினரும் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு பயங்கரவாதப் பிடியிலிருந்த போது கொடூரமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முனைந்த சில மதகுருமார் இப்போது மீண்டும் அதேமாதிரியான தொழிலில் ஈடுபட்டு வருவதனைக் காண முடிகிறது. இவர்களுக்குத் தாளம் இசைக்கும் வகையில் சில தமிழ் இணையங்களுடன் சேர்ந்து சில உள்ளூர் தமிழ் ஊடகங்கள் சிலவும் துணை நிற்பது மேலும் கவலை தரும் விடயமாகும் எனப் புத்திஜீவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதகுருமார் தமது பணியை மறந்து தடம்மாறி அரசியல் நோக்குடன் பயணித்து தமக்கும், தமது மதத்திற்கும் பிரசாரம் தேட முயல்வது எவ்வகையிலும் பொருத்தமற்ற செயற்பாடாகும். அதிலும் இந்நாட்டுப் பிரஜை களாக இருந்து கொண்டு தமது தாய் நாட் டையே காட்டிக் கொடுத்துச் செயற்பட்டு வருவது மிகவும் பாரதூரமான விடய மாகும் எனக் கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் போன்று யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் வகைகள், மாதிரிகள் பற்றியும், யுத்த களத்தில் நின்று கணக்கெடுத்தவர்கள் போன்று இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடமும், ஐ.நா. பிரதிநிதிகளிடமும் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து வருவதானது இவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருந்து வந்ததை உறுதி செய்வதாகவே உள்ளது. அத்துடன் இவர்களில் சிலர் புலத்தில் வாழும் புலி ஆதரவாளர்களின் டொலர்களுக்காக இங்கே குழப்பதை விளைவிப்பவர்களாகச் செயற்பட்டு வருகின்றனரோ எனும் பெருத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது எனச் சிவில் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். தாம் சார்ந்த மதம் தொடர்பாக மக்கள் மதகுருமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவே உணரமுடிகிறது. எந்தவொரு நாட்டிலும் தமது சொந்த தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு மதகுருமாரையும் காண முடியாது. அதிலும் இங்குள்ள சில மதகுருமார் நடக்காத விடயங்களை நேரில் நின்று பார்த்து நடந்தது போன்று காட்டிக் கொடுப்பில் செயற்பட்டு வருவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும்.

குறுகிய நோக்குடன் செற்படும் இத்தகைய மதகுருமார் தொடர்பாக சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மதகுரு எனும் சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் அதிஉயர்ந்த அந்தஸ்தை இன்னொருவரது அல்லது குழுவினரது தேவையை நிறைவேற்றுவதற்காக ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அது அவர்கள் சார்ந்த மதத்தையும், அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் குறைத்து மதிப்பிடச் செய்யும். எனவே இனிமேலாவது அரசியல் விவகாரங்களில் மதகுருமார் ஈடுபடுவதாயின் அவர்கள் அரசியலில் நேரடியாக இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என சர்வமத குருமார் சிலர் தெரிவித்தனர்.

இதேவேளை மதகுருவாக இருந்து தமது சமயப் பணிகளுடன் சமூகப் பணியாக நாட்டினதும், தாம் சார்ந்த சமூகத்தினதும் நன்மைக்காக தமது மதகுரு எனும் அந்தஸ்த்து எல்லைக்குள் நின்று உண்மையாகச் செயற்பட்டு வரும் பல மதகுருமார்களை நாம் உண்மையில் பாராட்டவே வேண்டும். அவர்களது தேசப் பற்று, சமூகப் பற்று, சமயப் பற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று, ஆனால் மதகுருமார் சிலர் மேற்கொள்ளும் குறுகிய செயற்பாடு நல்லவர்களான இவர்களையும் பாதிப்படையச் செய்வது துரதிஷ்டமே எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில அரசியல்வாதிகள் தமது சுயநல, சுயலாப அரசியலுக்காக இவ்வாறு காட்டிக் கொடுப்புக்களில் ஈடுபடுகிறார்கள் எனில் ஏன் ஒரு தேவையுமில்லாத மதகுருமார் இத்தகைய செயல்களில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் எனச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com