Contact us at: sooddram@gmail.com

 

'இன ஒழிப்பு' சொற்பதம் வேண்டாம் - சி.வி


வடமாகாண சபையில் 'இன ஒழிப்பு' என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவொழிப்பு சொற்பதங்களைப் பயன்படுத்தினர். இதனையடுத்தே முதமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இனவழிப்பு என்பது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இனவழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும். அது வரையிலும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற வார்த்தை பயன்படுத்தவும் என்று எடுத்துரைத்தார்.

வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் 6 உறுப்பினர்கள் மற்றும் முதமைச்சரினால் 12 பிரேரணைகள் சபையின் முன்வைக்கப்பட்டு, சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் அனைத்து பிரேரணைகளும் ஏகமனதாக சபை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வடமாகாண சபையின் 5 ஆவது அமர்வு இன்று (27) கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தiஷமையில் நடைபெற்றது.

இதன்போது சபை உறுப்பினாஷகளினால் 12 பிரேரணைகள் ணின்வைக்கப்பட்டன.

1.    முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டும்.

2.    புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையினை நோயாளர்களின் எண்ணிக்கையினைக் கவனத்தில் கொண்டு அதனை ஆதார வைத்தியசானையாக மாற்றுதல்.

3.   முல்லைத்தீவில் காணியற்றவர்களுக்கு காணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு காணி கச்சேரி நடத்தி காணியை வழங்கக்கோரல்.

4.    தமிழ்த் தேசத்தின் இது நடத்தப்பட்டதும், நடந்து கொண்டிருப்பதும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை அனைத்துலக சமூகத்திற்கு நாம் சுட்டிக் காட்டவேண்டும்.

5.    இருந்தும் இந்தப் பிரேரணையிலிருந்த திட்டமிட்ட இன அழிப்பு என்ற வார்த்தையினை இனவழிப்புக்கு ஒப்பானது என்றும், தமிழ் மக்கள் என்பதனை எமது மக்கள் என்றும் விவாதங்களின் பின்னர் மாற்றம் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

6.    இஷங்கை அரசில் எமக்கு எவ்வளவு நம்பிக்கையும் இல்லை என்பதுடன் எந்தவிதமான உள்நாட்டு பொறிணிறைகளும் எமக்கு நீதியையோ அல்லது அரசியல் தீர்வையோ ஒரு போதும் கொடுக்குமென நம்பவே இல்லை. ஆகையால் அனைத்து உள்நாட்டுப் பொறிணிறைகளையும் அடியோடு நிராகரித்தல்.

7.     எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு ஒப்பானவற்றின் விசாரணைகளை செய்வதற்காக பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகத்தினையும் வேண்டுதல்.

8.    மன்னார், திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜ.நா.வின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9.    வடமாகாணத்தின் அரச திணைக்களங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழி முதலாவதாகவும், இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இடம்பெறவேண்டும்.

10.    முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்திற்கு மேற்காக படையினரின் பயிற்சித் தளத்திற்கு அருகில் தமிழ் மக்களின் 2000 இற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்ட பண்ணையினை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். இதனை வடமாகாண சபை பொறுப்பேற்று குறியிடப்பட்ட மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதுடன், மிகுதி மாடுகளை பண்ணை அமைத்து பராமரித்து வருமான ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

11.    வடமாகாணத்தில் கட்டாக்காலிகளாகத் திரியும் மாடுகள் களவாகப் பிடிக்கப்பட்டு இறைச்சியாக்கப்படுவதுடன், வீதிகளில் விபத்துக்களுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே அவற்றினை வடமாகாண சபை பிடித்து, உரிமை கோருபவர்களிடம் கொடுக்கவேண்டும். அத்துடன் மிகுதியினை பண்ணை அமைத்து வளர்க்க வேண்டும் - இருந்தும் இந்தப் பிரேரணையில் கட்டாக்காலிகள் மாடுகளினால் பெருமளவிற்கு பால் பெறணிடியாத நிiஷ காணப்படுவதினாலேயே அவை இவ்வாறு விடப்பட்டுள்ளதாகவும், எனவே அவை தொடர்பாக திட்டம் ஒன்று வகுத்து அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் பதிலளித்தார். இந்த இணக்கத்திற்கு அமைவாக அந்தப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

12.    வவுனியா  ூந்தோட்டத்தில் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி, மன்னார் கூட்டுறவுச் சபை அலுவலகம் ஆகியவற்றிலிருந்து படைத்தரப்பினர் வெளியேறி அவற்றினை கையளிக்கவேண்டும்.

பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டமை தொடர்பாக நன்றி தெரிவிக்கும் ணிகமான பிரேரணையினை முதலமைச்சர் சபையின் முன்வைக்க அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகள் கொலைகள் செய்தன.

ஏ.டி.தர்மபாலா தனது உரையின் போது, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் கொலைகளினைச் செய்து விட்டு அரசாங்கம் இது பழிகளைப் போடுகின்றது எனக்கூறிய விடயம் சபையில் பெரும் அமளி துமளியினை ஏற்படுத்தியது.

அந்தக் கருத்தினை வன்மையாகக் கண்டித்த எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரஷ இது தவறான வார்த்தைப் பிரயோகம், இதனை ஏ.டி.தர்மபாலா வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com