Contact us at: sooddram@gmail.com

 

இரட்டை பிரஜhவுரிமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையை உடனடியாக மீண்டும் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கடந்த (டிசம்பர் மாதம்) 29 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன தெரிவித்தார். இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் பொருட்டு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அமுலில் உள்ள சட்டத்திற்கு மேலதிகமாக புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலு ள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன மேலும் விளக்கமளிக்கையில் :- இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் பிரஜா உரிமை பெற்று வாழ்பவர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறை ஏற்கனவே அமுலில் இருந்தது.

நாட்டில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைய இரட்டை பிரஜா உரிமையை பெற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் முதலாவதாக ஐந்து ஆண்டு காலம் நிரந்தர வதிவிடத்திற்கான விஸாவை பெற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும். அப்போது நாட்டில் காணப்பட்ட நிலைமையும் இதற்கு காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் இது தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும் வெளிநாட்டில் வாழும் பலர் ஜனாதிபதியிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும் மீண்டும் இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்துவது என்று திட்டமிடப்பட்டு அது தொடர்பான கோரிக்கைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு இம் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தமக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் (நேற்று) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

அத்துடன் புதிய நிர்வாக நடைமுறை களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதற்கமைய ஏற்கனவே அமுலிலிருந்த ஐந்து ஆண்டு காலம் நிரந்தர வதிவிடத்திற்கான விஸாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக உலகின் ஏனைய சில நாடுகளைப் போன்று இதற்கு பின்னர் நேரடியாகவே இரட்டை பிரஜா உரிமை வழங்கப்படும். ஆனால் இது தொடர்பில் இரண்டு புதிய விதிமுறைகள் கையாளப்படும். முதலாவதாக இரட்டை பிரஜா உரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தாம் தற்போது வாழும் நாட்டிலுள்ள உயர் ஸ்தானிகர் அல்லது தூதுவர் ஊடாக தாம் சட்ட ரீதியாக வெளிநாட்டில் வசித்து வருகின்றவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவை முழுமையாக சரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டாவதாக மேற்படி இரட்டை பிரஜா உரிமையை வழங்குவதற்கு குறித்த நபர் தகுதியானவரா என்பது தொடர்பில் ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு முன் சென்று ஆவணங்களிலுள்ள விடயங்களை நாட்டிற்குள் மீண்டும் வருவதற்கான காரணங்களையும் உரிய முறையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குமாறு மேற்படி குழு பாதுகாப்புச் செயலாளருக்கு சிபாரிசு செய்யும் அந்த பெயர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் அவர் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பி அனுமதியை பெற்றுக் கொள்வார். இதுவே புதிய நடைமுறையாகும் என்றார்.

எந்த கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமதி தமயந்தி ஜயரத்ன :- யுத்தத்திற்கு பின்னர் நாடு அடைந்து வரும் அபிவிருத்தி பணிகளை அனுபவித்தல், நாட்டின் பொருளாதார நலனை கருத்திற் கொண்டு முதலீடு செய்ய முன்வருதல், தொழில் ரீதியாக தான் பெற்ற கல்வித்தரத்தை பயன்படுத்தி தாய் நாட்டிற்காக அரசாங்கத்திற்காக பொது துறை ஊடாக சேவையாற்றுதல் போன்ற நோக்கில் விண்ணப்பிப்பவர்களுக்கே இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கப்படும் என்றார். நாட்டிலிருந்து வெளியேறி அடைக்கலம் கோரியவர்களுக்கு இது வழங்கப்படுமா என்று மற்றமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் :-

நிச்சயம் அவ்வாறானவர்களுக்கு வழக்கப்பட மாட்டாது. ஏனெனில் அவர் எமது நாடு வாழ்வதற்கு பொருத்தமானதல்ல, துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டிற்கு எதிராகவே சென்றுள்ளார். எனவே நாட்டிற்கு எதிராக செயற்பட்டவர்கள், சட்டவிரோதமாக செல்பவர்கள் இதற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என்றார். விண்ணப்பிக்கப்படும் நாடுகளும் கொடுப்பனவுகளும் உலகிலுள்ள சுமார் 10 அல்லது 12 நாடுகளிலிருந்தே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகிறது. ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களிடம் இருந்தே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழ்கின்றவர்கள் இது தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதில்லை என்றார். இதேவேளை, ஏற்கனவே கிடைக்கப்பெற்ற சுமார் 1500 விண்ணப்பங்கள் உள்ளதாக தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம். என். ரணசிங்க, இந்த விண்ணப்பத்திற்கு மேலதிகமாக தேவைப்படும் விபரங்களை உள்ளடக்கி அவையும் குறித்த குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

குடும்பத்தின் பிரதான குடியிருப்பாளர் 2 இலட்சம் ரூபாவும் அவரது மனைவி 50 ஆயிரம் ரூபாவும். பிள்ளை 50 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக செலுத்த வேண்டும்.

இதேவேளை, தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுவதனாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் காலத்தில் தாம் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று முன்தினம் கூறியிருந்தது. இதுவே நல்லதொரு சான்றாகும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மையத்தின் பணிப்பாளர் பிரகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com