Contact us at: sooddram@gmail.com

 

கொல்வின்.ஆர்.டி.சில்வா கேட்டதற்கிணங்க

நிறைவேற்று அதிகார முறையை ஜே.ஆர் இல்லாமல் செய்திருக்க வேண்டும் - சி.வி

நிறைவேற்று அதிகாரமுறையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய போது, அதனை அவரது ஆட்சிக்காலம் முடிவடைய இரத்துச் செய்து நாடாளுமன்ற அதிகாரத்தை நிலைக்க வழி செய்யுமாறு சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான கொல்வின்.ஆர்.டி.சில்வா, ஜே.ஆர் ஐ கேட்டிருந்தும் அதனை அவர் நடைமுறைப்படுத்தவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோரின் வருட இறுதி கருத்துப் பரிமாற்றக் கூட்டம் 'வடமாகாண சபையின் குறுங்கால, இடைக்கால சவால்கள்' எனும் தொனிப்பொருளில் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்விலே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

1956ஆம் ஆண்டில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது 'இரு மொழிகள், ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடுகள் என்று கூறிய கலாநிதி கொல்வின்.ஆர்.டி சில்வா, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி என்ற பதவியை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கியபோது, உன் காலத்தில் இந்தச் சட்டத்தை வேண்டுமானால் நீ நடைமுறைப்படுத்து. ஆனால் நீ போகும் போது இந்த சட்டத்தை இரத்துச் செய்து நாடாளுமன்ற அதிகாரம் நிலைக்க வழிவகுத்து விட்டு செல். உனக்கு பின்வரும் ஒருவன் உன்னை போல் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டான். கொடூரமாக அவன் இதனை நடைமுறைப்படுத்தக்கூடும் என்று கூறினார்.

அதாவது அதிகாரம் என்பது ஒருவர் வசம் இருந்து அந்த அதிகாரத்தைப் பாவிக்கும் போது சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மனிதஉரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் விதத்தில், மனிதாபிமான முறையில் பாவிக்கத் தலைப்பட்டால், சட்டம் எவ்வாறு அமைந்திருந்த போதும் அங்கு நல்லாட்சியும் நீதியும் நிலைக்கலாம்.

ஆனால் தான்தோன்றித்தனமாக, ஒருதலைப்பட்சமாக சிந்திக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அங்கு வல்லாட்சி நிலைக்கும். அதனால்தான் சட்டம் எமது உரித்துக்களை இன்னொருவரின் தன்னிச்சைக்கு ஆட்படுத்தி அமைந்திருப்பதை நாம் எதிர்க்கின்றோம்.

அண்டிவாழ நாம் ஆசைப்படாதிருப்பது இந்தக் காரணத்தினால் தான். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அண்டிச்சென்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடிச்சென்று, அவரது சகோதரர்களுக்கு பல்லிளித்துப்பல நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது உண்மைதான்.

ஆனால் அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல. பல் இளிக்கும் வரை தான் பலன் கிடைக்கும். நாடும் வரையில் தான் நன்மை கிட்டும் என்றென்றும் அண்டி வாழ்ந்தால் தான் அதிக நன்மை அடையலாம்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் உயிர்த்தியாகம், உடல் ஊனம் அடைந்தமை, காணிகளைப் பறிகொடுத்தமை, பெண்கள் தம் வாழ்வை இழந்தவை, எமது இளைஞர்கள் இன்றும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு நிற்பது எல்லாம் அதற்காக இல்லை.ஆகவே உண்மையான அதிகாரப்பகிர்வை எதிர்பார்த்தே எமது மக்கள் நிற்கின்றனர். நாங்கள் சலுகை அரசியலுக்கு சரிந்துவிடாமல் சட்டவாக்க நிவர்த்தியை நாடி நிற்கின்றோம்.

மேற்கு மாகாண ஆளுநர்கள் பலர் என் நண்பர்களாக இருந்தவர்கள். பிரதம நீதியரசர் சர்வானந்தா, நீதியரசர் விக்னராஜா, தற்போதைய ஆளுநர் அலவி மௌலானா, எல்லோருமே மேல் மாகாண அன்றாட நிர்வாக விடயங்களில் தலையிடாது தமது கடமையை செய்துவந்தனர். வருபவர்கள். இங்கும் கிழக்கிலும் மட்டும் படைப்பிரிவில் பதவி வகித்தவர்களை பாவித்து மத்திக்கு சார்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது தற்போதைய அரசாங்கம்.

பொது மக்கள் வாழ்க்கையில் இராணுவம் உள்நுழைவதை உடனே நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரத்துடனும் பயப்பீதி இல்லாமலும் தமது மண்ணில் நடமாட இடமளிக்க வேண்டும். போர் முடிந்தும் போர் வீரர்கள் தொடர்ந்து இங்கிருப்பது, எப்பொழுதேனும் வன்செயல்களில் அவர்களோ மற்றவர்களோ ஈடுபடக்கூடும் என்பதை எடுத்துக் காட்டும்.

பொலிஸார் இங்கு பெருமளவில் கொண்டுவரப்பட்டு இராணுவத்தினர் படிப்படியாக குறைக்கப்பட்டாலும் பொலிஸார் இடையே தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பது மிக அவசியமாகும். அவ்வாறு இருந்தால் தான் அவர்கள் மக்கள் மனமறிந்து, தேவைகள் அறிந்து செயற்பட முடியும்.

மக்களின் காணிகளை மக்களுக்கே இராணுவம் மீளக் கையளிக்காது இருப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காணியில் போய் திரும்பவும் குடியிருக்க வழி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

எமது காணிகளை அரசாங்கமும், அரசியல்வாதிகளும், இராணுவமும் கையேற்பதை அடியோடு நிறுத்த வேண்டும். மில்ரோய் பெர்ணாண்டோ என்ற ஒரு தெற்கத்தைய அரசியல் வாதி வவுனியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றிக் காணியைத் தனக்குத் தருமாறு நிர்ப்பந்தித்துக் கொண்டு வருகின்றார் என்று கேள்விப்படுகின்றேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com