Contact us at: sooddram@gmail.com

 

மாற்றத்தை விரும்பிய மக்களது மனங்களுக்கு மதிப்பளிப்போம் -EPDP

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இலங்கைத்தீவின் அரசியல் மாற்றத்திற்கான களமாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது.
மாற்றத்தை விரும்பிய மக்களது உணர்வுகளுக்கு நாம் தலைவணங்குகின்றோம். எமது கோரிக்கையை ஏற்று வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாற்றத்தினூடாக அவர்கள் தேடுகின்ற எதிர்பார்ப்புகளுக்கு, பதவியேற்றுள்ள இந்த புதிய ஜனாதிபதியினூடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிகளை விரைவுபடுத்தி தமிழ் மக்களது உரிமைகளுக்கும் வாழ்வியல்த் தேவைகளுக்கு நிரந்தரமாக தீர்வுகளை பெற்றுத்தரும் தார்மீக கடமைகளை அனைவரும் மேற்கோள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாற்றத்தினூடாகத்தான் எமது நாட்டின் நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் என இலங்கை வாழ் மக்கள் விரும்பியதன் வெளிப்பாடுதான் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறாக அமைந்துள்ளது. இது எமது நாட்டின் வளர்ச்சிப்பாதையின் புதிய ஆரம்பமாக அமையுமென எதிர்பார்க்கின்றோம்.

இன்று ஏற்பட்டுள்ள மாற்றமானது தேசிய அரசியலில் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. எந்தவகையிலும் இது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான மாற்றமாக எவரும் கருதிவிட வேண்டாம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (பா.உ) அவர்களது அரசியல் தூரநோக்குடன் வீணைச் சின்னத்துடன் நாங்கள் எதிர்கால மக்கள் சேவைகளை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

நாங்கள் என்றும் அரசியல் வாதியாக இருந்தது கிடையாது. அரசியல் போராளிகளாகவே எமது மக்கள் மத்தியில் சேவைகளைச் செய்து வருகின்றோம். தோற்றவர்கள் ஜெயிப்பதும் ஜெயிப்பவர்கள் தோற்பதும் உலக நீரோட்டத்தில் இயற்கையானதுதான். இதுதான் உண்மையும் கூட. இந்த உண்மையை எவரும் மறந்துவிடக்கூடாது. இன்று எம் அனைவர் முன்னும் உள்ள விடயம் மக்களது உரிமைகளும் வாழ்வியலும் அவர்களது எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது மக்களின் உரிமைகள் மீது யார் அதிகம் அக்கறை காட்டுகிறார்களோ அவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு எமது மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (பா.உ) தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் மத்தியில் இணக்கமான ஒரு அரசியலையே இதுவரைகாலமும் மேற்கொண்டு வந்துள்ளார். அதையே தொடர்ந்தும் மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினாலும் மக்களது எதிர்பார்ப்புகளை வெற்றியீட்டிய சில நிமிடங்களிலேயே புதைந்து போகச்செய்யும் செயற்பாடுகள் குடாநாட்டின் பல பாகங்களில் ஒரு சிலர் மேற்கொண்டு வருவது வேதனையாக உள்ளது.

வெற்றி பெற்றவர்கள் தமது வெற்றியை கொண்டாடுவது இயல்பானதுதான். வெற்றிக்களிப்பில் பட்டாசு கொளுத்துவது இன்று மக்களிடையே கலாசாரமாகிவிட்டது. அந்த வெடியோசைகள் விரோதங்களை தூண்டிவிடுவதாக ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கு காரணமற்றவர்கள் வெற்றிக்கு உரிமை கொண்டாடி அதில் குளிர்காய்ந்து மற்றவர்களது உணர்வுகளை தூண்டிவிடும் செயற்பாடுகளை மேற்கோள்வது மீண்டும் பிரச்சினைகளை வளர்ப்பதற்கு வழி கோலுவதாகிவிடும். ஒவ்வொருவரும் தாங்கள் கொளுத்துகின்ற வெடிகள் தம்மை சுடாதிருக்க பாதுகாத்துக்கொள்வதும் மிக அவசியமானதாக இன்றைய சூழலில் உள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவரது கால்களிலிலும் வீழ்ந்து பணத்துக்காகவும் பதவிக்காகவும் அவர்களுக்கு சாமரம் வீசுபவர்களாக ஒருபோதும் இருந்தது கிடையாது. எந்தவொரு கட்சியினதும் ஆதரவை எதிர்பார்ப்பதும் கிடையாது. நாங்கள் எமது மக்களது ஆதரவை மட்டும் நம்பியே எமது தனித்துவமான அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். அதில் சில வேளைகளில் மாற்றங்களும் மாறுதல்களும் ஏற்படலாம்.

சில ஊடகங்களில் தெரிவித்திருப்பது போல நாங்கள் எமது அலுவலகங்களை மூடிவிட்டு எங்கும் ஓடி ஒளிந்துவிடவில்லை. நாம் எமது அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களில் இருந்து எமது உள்ளூராட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். திட்டமிட்டு பரப்பப்படும் இவ்வாறான போலி செய்திகளை ஊடகங்கள் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வதை காணமுடிகின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (பா.உ) அவர்களது சிந்தனையின் அடிப்படையில்
"உரிமைக்கு குரல் கொடுப்போம்,
உறவுக்குக் கரங்கொடுப்போம்",
"மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி",
"வீணையே உங்கள் சின்னம்,
சேவையே எங்கள் எண்ணம்
என்ற எமது கோட்பாடுகளின் அடிப்படையில் எமது பயணத்தை மக்களுக்காக சேவை செய்துகொண்டு வருகின்றோம்.
.
கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com