Contact us at: sooddram@gmail.com

 

நாட்டுக்குத் தேவை அரசன் அல்ல, உண்மையான மனிதனே அவசியம்”
தேசிய அரசு அமைக்க சகல கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்

* நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு

* பாராளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறைக்கு அதிகாரங்கள் மாற்றம்


தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்தார். இன்று வாழ்கின்ற மக்கள் போன்று நாளை பிறக்க இருக்கின்ற பிள்ளைகளுக்காகவும் நாட்டில் நல்லாட்சியின் ஊடாக வறுமையற்ற சுதந்திரமான ஜனநாயகத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துப் பலப்படுத்தவும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6வது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, கண்டி தலதாமாளிகை புனித பூமியிலிருந்து நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன, ஆர்.பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதிகளாகப் பதவியேற்ற பின்னர் தலதாமாளிகையின் பத்திரிப்பு மண்டபத்திலிருந்து உரையாற்றியிருந்தனர்.

அதன் பின்னர் தலதா மாளிகையின் புனித பூமியிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமைக்குரியவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திரிப்பு மண்டபத்திலிருந்து உரையாற்றாமல் மண்டபத்துக்கு கீழே தலதா மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகே விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தவாறே உரையாற்றினார்.

அத்துரலிய ரத்ன தேரர், முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரட்ன, லக்ஷ்மன் கிரியல்ல எம்பி, விஜயதாச ராஜபக்ஷ உட்பட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாவது,

தலதாமாளிகை புனித பூமியிலிருந்தவாறு நாட்டு மக்களுக்கு உரையாற்றக் கிடைத்தமை எனக்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மக்களின் சேவகனைத் தெரிவுசெய்வதற்காக ஜனாதிபதித் தேர்தலில் என்னை அமோக வெற்றியீட்டச் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் குறிப்பிட்டவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த என் அன்பு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றிக்கு, எமது வெற்றிக்கு நாட்டு மக்களின் வெற்றிக்காக வாக்களித்த, வாக்களிக்கத் தவறிய, எதிர்த்தரப்புக்கு வாக்களித்த அனைத்து இலங்கைவாழ் மக்களுக்கும் எனது கெளவரமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமக்கு அமைதியான ஒரு தேர்தல் ஊடாக நாட்டின் எதிர்கால சமூகப் பொருளாதார, கலாசார மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இதனூடாக வழி ஏற்படும் என நான் நம்புகிறேன். நல்லெண்ணங்களுடன் செயற்படுதல் நல்லது. நல்லெண்ணங்களுடன் இவ்வாறு செயற்படுவதன் மூலம் சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியும்.

நாம் மனிதன் மீதும் மட்டும் அன்பு செலுத்தக் கூடாது. மரம்செடி,கொடி சுற்றுச்சூழல் உட்பட ஏனைய உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

நாம் ஏற்கனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போல நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் நாளைய சந்ததியினருக்காகவும் நல்லாட்சி மிகுந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த ஒரு தேசிய அரசொன்றை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். என்னுடைய இந்த அழைப்பை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்.

என்னுடைய முதல் கடமையாக நான் முன்னெடுக்கவிருப்பது மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம். வறுமையொழிப்பு போன்றவற்றுக்கு ஒரு திடமான திட்டத்தை உருவாக்கி பொருளாதார வளத்தை ஏற்படுத்துவதே. இது தேவையான முதல் நடவடிக்கையாக இதனை முன்னெடுப்பேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் காணப்படும் எல்லைகளற்ற அதிகாரத்தை இல்லாமல் ஒழித்து, பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் நீதித்துறைக்கும் மாற்றுவதோடு ஆணைக்குழுக்களை நியமிப்பதை எனது அடுத்த நடவடிக்கையாக முன்னெடுப்பேன். இதற்கு சகலரினதும் ஒத்துழைப்புக்களைப் பெற்று இதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தேசிய இனம் என்ற ரீதியில் சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பை பெற்று இந்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து நாட்டைக் கட்டியெழுப்புவேன். எமது நாடு ஒரு பெளத்த நாடு. பெளத்த சாசனத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒரு நாடு. அதேபோன்று இந்த நாட்டிலுள்ள ஏனைய மதங்களான இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்துவதுடன் மதங்களுக்கிடையே இனங்களுக்கிடையே ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

இது ஒரு விவசாய நாடு. நாட்டின் விவசாயத்தை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி நவீன முறைகளை அறிமுகப்படுத்தி உற்பத்தித் துறையில் விவசாயிகளை ஊக்குவித்து பொருளாதார ரீதியில் விவசாயிகளை மேம்படுத்துவதுடன் அவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் வகையில் பொலிஸ் ஒரு நடுநிலை வகிக்கும் நிறுவனமாக ஏற்படுத்தப்படும். அரச சேவை திருப்திகரமாக செயற்படக்கூடிய விதத்தில் சுதந்திரமாக சேவையாற்றக்கூடிய மனநிலையை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்படும். தனியார்துறை ஊழியர்கள் சுமார் 50 இலட்சம் பேர் வரை இந்த நாட்டில் உள்ளனர். அவர்களது பொருளாதார வளத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.

எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தருகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள பணிப்பெண்களின் எதிர்காலத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டினை அபிவிருத்தி செய்து நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டுக்குத் தேவையான ஒரு அரசாக, உலகத்தில் ஒரு முதன்மை நாடாக மாற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். இந்த நாட்டில் நிலவுகின்ற ஊழல், மோசடி, இலஞ்சம் போன்றவற்றை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்கம் மிக்கதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டுக்குத் தேவையானது அரசன் அல்ல. உண்மையான மனிதனே தேவை. நான் உங்களுடைய சேவகனாகவே இருப்பேன். நான் எனது தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் கூறியதை போன்றே எனது முதலாவது ஜனாதிபதி தேர்தலும், இறுதி ஜனாதிபதித் தேர்தலும் இதுவே. என்னை அர்ப்பணித்து உயிர்த்தியாகம் செய்தாவது எனக்கு வழங்கப்பட்டுள்ள சேவையை நான் செய்வேன்.

நாம் பெற்ற வெற்றியென்பது உண்மையானது. எனவே மக்கள் அமைதியாக நடக்க வேண்டும். இதன் மூலமே உண்மையான வெற்றியாகும். இந்தத் தேர்தல் வெற்றியுடன் சிறுசிறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு மக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

மக்களை அமைதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் பணித்துள்ளேன். அனைவரும் மனிதத்துவத்தை மேம்படச் செய்து ஜாதி, மத பேதங்களின்றி அரசியல் ரீதியான மத ரீதியாகப் பிரிந்து நிற்காமல் சகோதரத்துவத்துடன் உண்மையான மனிதர்களாக இருப்போம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com