Contact us at: sooddram@gmail.com

 

நூறு நாட்களில் பொதுத் தேர்தல் புது அரசு புதிய மந்திரிசபை - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடிய வர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும் எச்சமயத்திலும் தமது பதவியையும், அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக வேண்டுமென்றும் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்றைய தினத்தை இந்த நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக நான் கருதுகின்றேன். கடந்த 8ஆம் திகதி நாட்டின் சேவகன் என்ற வகையில் மக்கள் வாக்களித்து தேர்தலில் எம்மை வெற்றிபெறச் செய்தனர்.

அதன்மூலம் மைத்திரி அரசாங்கமொன்றை அமைக்க முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் நாம் அனைத்து மேடைகளிலும் புதிய அரசாங்கமொன்றை அமைப்போம் என்று மக்களிடம் தெரிவித்தோம். மக்கள் அதற்கான ஆசீர்வாதத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இதற்கிணங்க இன்று அமைச்சரவையொன்று நியமனம் பெறுகிறது. ஜனாதிபதியாக நானும் பிரதமராக ரணிலும் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என இன்று நியமனம் பெற்றுள்ளனர். நான் இந்த அமைச்சர்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புவது, எமது வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையே இது.

நூறு நாள் வேலைத்திட்டங்களையடுத்து நாம் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்லவுள்ளோம். அதனூடான அமைச்சரவைமூலம் அமைக்கப்படுவதே நிரந்தர அரசாங்கமாகும். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்குத் தெரிவித்த கொள்கைகளுக்கு இணங்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலமும் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான பொறுப்பை மக்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நாங்கள் இன்னும் நூறு நாட்களில் நாம் தேர்தலொன்றுக்குச் செல்லப்போகின்றோம் என்ற உறுதியான மனப்பாங்கோடு செயற்படுவது முக்கியமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்யாத மக்கள் கட்சிகளின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் போன்றோரை எங்களோடு நிரந்தர தோழமை உள்ளவர்களாக மாற்றவேண்டியது எமக்கான முக்கியமான பொறுப்பாகும். தேர்தலுக்குப் பின்னர் கடந்த இரண்டொரு தினங்களில் சில சில வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கேள்விப்பட நேர்ந்தது அதற்காக நான் வருத்தமடைகின்றேன்.

தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் இடம்பெற்றுள்ள வன்முறைகளில் சம்பந்தப்பட்டோர் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், யாருடைய ஆதரவாளராக இருந்தாலும், என்ன பதவியில் அவர் இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள பொறுப்பை நாங்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளும்போது மக்கள் எம்மீது கொள்ளும் நம்பிக்கை அதிகரிக்கும். எவராவது வன்முறையில் ஈடுபட்டால் வேறு எவரையும் தம்மோடு இணைத்துக்கொள்ள முடியாமல் போகும். அதனால் பொதுமக்களின் மனதை அறிந்து நாம் செயற்படுவது அவசியமாகும். மக்களோடு சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.

நாம் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதாகவே தேர்தலின் போது வாக்குறுதி அளித்தோம். அது தேசிய அரசாங்கமாக இருக்க வேண்டும். தேசிய அரசாங்கம் என்பது ஒரு கட்சிக்கு மாத்திரம் உரிய அரசாங்கம் இல்லையென்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது. அதற்கு அனைவரினதும் முன்மாதிரியான செயற்பாடு அவசியமாகும்.

அரசியல்வாதிகளை மோசமானவர்களாக மக்கள் நோக்கிய காலம் உள்ளது. அதற்கான பல காரணங்கள் உள்ளன. தமது செயற்பாட்டு முன்மாதிரியை மறந்தவர்களாக செயற்பட்டமையே இதற்குக் காரணம். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்க தாகும். அதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

நாம் 30 பேர் அடங்கிய அமைச்சரவையொன்றை அமைப்பதாகவே மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தோம். நாம் அதனை உறுதியாக நிறைவேற்றியுள்ளோம். அமைச்சர்கள் அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்கும் போது தமக்குக் கிடைத்துள்ள பொறுப்புக்கள் போதாது என சிலர் நினைக்கலாம். தம்மீது இதைவிட கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கருதலாம். எனினும் இது ஒரு தற்காலிக வேலைத்திட்டம் என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நான் ஒரு பெளத்தன் என்ற வகையில் பதவி மற்றும் அதிகாரத்தை எந்த நேரத்திலும் கைவிட்டுச் செல்லக் கூடிய மனோபாவம் அனைவருக்கும் முக்கியம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் சுகாதார அமைச்சுப் பொறுப்பையும் பதவியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு இருந்திருந்தால் நான் இன்னும் அந்த நிலையிலேயே இருந்திருப்பேன். அவற்றைக் கைவிட்டதால்தான் மக்கள் எனக்கு பெரும் பதவியொன்றை வழங்கியுள்ளனர். இன்று எமக்குக் கிடைக்கும் பதவி நாளை இல்லாமல் போகலாம் என சிந்தித்து செயற்படுவது முக்கியமாகும்.

இந்த அமைச்சரவையில் உட்படுத்தாத மேலும் பல விடயங்கள் உள்ளன. அது தொடர்பில் நானும் பிரதமரும் எதிர்வரும் தினங்களில் அதற்கான தீர்மானங்களை எடுப்போம். மக்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கெளரவமான முறையில் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.

எப்போதும் முன்மாதிரியானவர்களாக செயற்படுங்கள். எமது அரசாங்கமும், நானும் பிரதமரும் எமது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் எவராவது ஒருவர் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டால் ஊழல் மோசடியில் ஈடுபட்டால் அவர் அமைச்சராக இருந்தாலும் சரி அதற்கு எதிராக செயற்படத் தயங்க மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com