Contact us at: sooddram@gmail.com

 

யாழ் வடமாராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகல்வுக்கு இடைக்காலத் தடை

யாழ்.வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் முறையற்றவகையில் பெறப்பட்டுள்ளதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கும், அகழப்பட்ட மணலை அள்ளுவதற்கும் காவல்துறை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குடத்தனை, அம்பன், நாகர்கோவில் பகுதிகளில் ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த சில வருடங்களாக சட்டத்திற்கு மாறான வகையிலும், வழங்கப்பட்ட நியமங்களை மீறியும் மணல் அகழப்பட்டுவந்ததாக மக்கள் மற்றும் அரசியல் தரப்புக்களால் குற் ற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் பகுதியில், தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து வடமராட்சி கிழக்கில் சட்டத்திற்கு மாறான வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை நடத்தியிருந்தனர்.

அப்போது அப்பகுதி மக்கள் மேற்படி இரு கட்சிகளிடமும் பலவிதமான முறைப்பாடுகளை முன் வைத்தனர். அதாவது எங்கள் பகுதியிலிருந்து பெருமளவு மணல் தினசரி எடுத்துச் செல்லப்படுகின்றது. ஆனால் எங்கள் பகுதியில் முறையான வீதியில்லை. எமக்கு முறையான வாழ்வாதாரம் இல்லை. இவை எல்லவற்றுக்கும் மேலாக குடத்தனையில் தொடங்கி தற்போது நாகர்கோவில் வரையில் மணல் அகழ்ந்திருக்கிறார்கள். அது போதாதென்று நாகர் கோவில் பகுதியில் எங்கள் மயானங்களையும் அழிக்கும் வகையில் மணல் அகழ்வதுடன், கடல் மட்டத்திற்கு கீழாக மணல் அகழ்வதனால் தண்ணீர் எங்கள் குடிமனைகளுக்குள் நுழைகின்றது. இதனால் மழை காலத்தில் நாங்கள் நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீருக்குள், நடந்துசெல்லவேண்டிய நிலையும் உருவாகின்றது. இந்த விடயத்தில் தங்கள் பகுதியான மருதங்கேணி பிரதேச செயலர் அக்கறையற்றிருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து மருதங்கேணி பிரதேச செயலரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது அந்தப் பகுதியில் மணல் சட்ட த்திற்கு மாறான வகையிலேயே அகழப்படுவதாகவும், அதற்கான அனுமதியினை தாம் வழங்காத நிலையில் அமைச்சர்கள் மட்டத்தில் அந்த அனுமதியினைப் பெற்று குறித்த மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

பின்னர் மேற்படி இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மீண்டும் வந்து பிரதேச செயலர் கூறிய விடயங்களையும், அடுத்தகட்ட நடவடிக்கைகள், குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென அப்பகுதிக்குள் சென்ற மகேஸ்வரி நிதியத்தினர் உழவு இயந்திரங்களை வீதியை விட்டு அகற்றுங்கள் நாங்கள் மணல் அகழ்வதற்கான கனரக வாகனங்களை உள்ளே கொண்டு செல்லப்போவதாக சத்தமிட்டனர். இதனையடுத்து மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து, உழவு இயந்திரங்களை வீதியை விட்டு அகற்றவோ, கனரக வானங்களை உள்ளே விடவோ அனுமதிக்கப ;போவதில்லையென கூறிய நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் எங்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ளது. நாங்கள் காவல்துறைக்கு விடயத்தை தெரியப்படுத்தி இருக்கிறோம். அதனால் எங்கள் பகுதியிலிருந்து உடனடியாக விலகிச் செல்லுங்கள் என கடும்தொனியில் கூறினர். இதனையடுத்து கூட்டமைப்பினர் உடனடியாக விடயத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அப்பகுதிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் உடனடியாக வருகைதந்தனர்.

மேலும் குறித்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற பகுதிக்குள் நுழையும் போதே மகேஸ்வரி நிதியத்தை இந்தப் பகுதிக்குள் நுழையவேண்டாம். என கூறினேனே! என கூறிக்கொண்டு சென்று மகேஸ்வரி நிதியத்தினருடன் பேசிய காவல்துறை அதிகாரி இவ்வளவு காலமும் மணல் அகழ்விற்கு நீங்கள் பயன்படுத்திய, அனுமதிப்பத்திரம் முறையற்ற வகையில் பெறப்பட்டதென முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில் நாங்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலர் ஆகி யோருடன் பேசியதன் அடிப்படையில் இந்தப் பகுதியில் மணல் அகழ்வதற்கும். அகழ்ந்த மணலை அள்ளுவதற்கும் நாம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கிறோமெனவும் தெரிவித்தனர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com