Contact us at: sooddram@gmail.com

 

மக்களுக்கு அதிகளவு நிவாரணம் வழங்கிய வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும்

விவசாயிகளின் கடன்கள் 50 வீதத்தினால் குறைக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு 50 வீத சலுகை வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உர மானியம் தொடர்ச்சியாக வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளார். தேயிலை கொழுந்து மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலைகள் நிர்ணயிக்கப்படும் தெரிவித்துள்ளார். தேயிலை கொழுந்து ஒரு கிலோ 80 ருபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 13 அத்தியாவசிய பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளது. 13 அத்தியாவசிய பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை குறைப்பதன் மூலம் இவ்வாறு விலைகள் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருட்களுக்கான விலை குறைப்பு உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.


சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பால் மாவின் விலை 61 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாகவும், இதன்படி, 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 325 ரூபாவிற்கு விற்கப்படும்.

ஒரு கிலோ கிராம் பயறின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.

கோதுமை மா விலை குறைப்பிற்கு நிகராக பாணின் விலை 6 ரூபா வரையில் குறைக்கப்பட உள்ளது.

டின் மீனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.

நெத்தலி, கொத்தமல்லி, உழுந்து, மாசி, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட 13 பொருட்களுக்கான வரி அறவீடு குறைக்கப்பட்டுள்ளதனால், இதன் நன்மைகள் மக்களை சென்றடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த அனைத்து பொருட்களுக்கும் விலைகள் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிதுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, சமையல் எரிவாயுவின் விலைகள் 300 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது, இதற்கு அமைய சமையல் எரிவாயுவின் விலை 1596 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களுக்கு அதிகளவு நிவாரணம் வழங்கிய வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும்:-

மக்களுக்கு அதிகளவு நிவாரணம் வழங்கிய வரவு செலவுத் திட்டமாக இன்றைய இடைக்கால வரவு செலவுத் திட்டம் அமையும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மாற்றமொன்றை விரும்பி மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்திருந்தனர்.

மக்களின் இந்த நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் வரவு செலவுத் திட்டம் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால சிரேஸ்ட நிதி அமைச்சர்களின் அடிப்பாதையை பின்பற்றி இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க கிட்டியமை பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பற்றிய போலியானப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதிலும் உண்மை நிலைமைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் பொய்யான புள்ளி விபரத் தரவுகளை உள்ளடக்கி எமது வரவு செலவுத் திட்டம் அமையாது என அவர் தற்போது சமர்த்து வரும் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தனியார் ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படும்


அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5000 ரூபா சம்பளம் உயர்த்தப்படும் எனவும், ஜூன் மாதம் மீண்டும் 5000 ரூபா உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை குறைந்தபட்சம் 2500 ரூபாவினால் உயர்த்துமாறு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.


தனியார் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் நெருக்கடிகளை பிரயோகிக்காது எனவும், இதனால் அந்த நலன்களை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


'இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கும் திட்டம்'

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும்.

எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும்.

நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும்.

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

மக்கள் சேவையை மக்கள் சேவையாகவே கொண்டு நடத்துவதற்கு நாம் முன்னிற்போம்.

சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை.

ஜனாதிபதி பதவியேற்புக்கு 6,000 ரூபாய் மட்டுமே செலவு.

அமைச்சரவையை 71 இலிருந்து 31ஆகக் குறைத்தோம்.

கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய், வரி வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த வரவு – செலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த தேசிய உற்பத்தியின் 4.6 சதவீதமாகும்.

ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது.

ஜனாதிபதியின் செலவு விவரங்கள்

2008ஆம் ஆண்டு - 634 கோடி ரூபாய்

2009ஆம் ஆண்டு - 765 கோடி ரூபாய்

2010ஆம் ஆண்டு - 5063 கோடி ரூபாய்

2011ஆம் ஆண்டு - 5,063 கோடி ரூபாய்

2012ஆம் ஆண்டு - 5,936 கோடி ரூபாய்

2013ஆம் ஆண்டு - 6,244 கோடி ரூபாய்

2014ஆம் ஆண்டு - 10,497 கோடி ரூபாய்

2015ஆம் ஆண்டு - 9,593 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.

தற்போதைய ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே முன்னெடுப்போம்.

அரச ஊழியர்களின் சம்பளம் பெப்ரவரியில் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஜூன் மாதம் முதல் இன்னும் 5,000 ரூபாய் அதிகரிக்கப்படும்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடனை இந்த அரசாங்கம் செலுத்தவேண்டியிருக்கிறது.

தனியார் துறையின் மாதாந்த சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க கவனம் செலுத்துமாறு கோரிக்கை.

100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட வேண்டியுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5,000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஓய்வூதியக் கொடுப்பனவு 1,000 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

சமுர்த்திக் கொடுப்பனவு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

புதிதாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு 2 வருடங்கள் வரை கொடுப்பனவு.

விவசாயிகள், வர்த்தக வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடனில் 50 சதவீதம் தள்ளுபடி.

தேயிலை, இறப்பருக்கு நிவாரண விலை.

சிறிய ரக உழவு இயந்திரங்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும்.

உரமானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

தூய பால் லீற்றரொன்றுக்கு 70 ரூபாய் நிவாரண விலை.

கொழும்பு நகரில் மீண்டும் குடியேறும் மக்களுக்கு நிவாரணம்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதி 5 மில்லியனிலிருந்து 10 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

தயட்ட கிருலயில் ஊழல் மோசடி, அதை நிறுத்துவதற்கு யோசனை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.

சிறுநீரக நோயாளிகளின் கொடுப்பனவுக்காக 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

சுகாதாரத்துறைக்கான செலவு 3 சதவீதத்தால் அதிகரிக்கும்.

வெளி நோயாளர் பிரிவு 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

மண்ணெண்ணெய் விலை லீற்றரொன்றுக்கு 6 ரூபாவால் குறைப்பு. தற்போதைய விலை 59 ரூபாய்.

அத்தியாவசியப் பொருட்கள் 13இன் விலைகள் குறைக்கப்படும்.

சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

400 கிலோகிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு

கோதுமை மாவின் விலை ரூ.12.50 குறைப்பு

நெத்தலி கருவாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்படும். இதன்மூலம் 15 ரூபாவால் குறைக்கப்படும்.

பாசிப்பயறு 1கிலோவின் விலை 30 ரூபாவால் குறைப்பு.

டின்மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு

கொத்தமல்லிக்கான விஷேட பண்ட வரி 30 ரூபாவால் குறையும்.

உழுந்து கிலோவொன்று 60 ரூபாவால் குறையும்.

சமையல் எரிவாயுவின் விலை 300ரூபாவால் குறைப்பு.

மாசி கிலோவொன்று 200ரூபாவால் குறைப்பு.

அரசவங்கிகளில் ரூ.2லட்சத்துக்கு குறைவாக நகை அடகுவைத்திருப்பவர்களுக்கான வட்டி தள்ளுபடி.

அதிசொகுசுவாய்ந்த வீடுகளுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் ரூபாய் இல்ல வரி.

இலங்கை பிரஜாவுரிமையை கைவிட்டு செல்கின்றவர்கள் கொண்டுசெல்லும் பணத்துக்கு 20 சதவீதம் வரி.

சொகுசு வீடுகளுக்கு ஒருதடவைமட்டும் வரி அறவிடப்படும்.

2,000 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலாக வருமானம் பெறுவோருக்கு 20 சதவீதம் வரி.

உற்பத்தியின் போது செலுத்தப்படும் ஆகக்குறைந்த வரிமட்டம் 750,000 வரை உயர்த்தப்படும்.

1,000 இயந்திரவலுவுக்கு குறைவான வாகனத்துக்கான வரி 15 சதவீதம் குறைப்பு.

சீமெந்து மற்றும் உருக்குக்கான தீர்வை குறைப்பு. இதன் மூலம் சீமெந்து மூடையொன்றின் விலை 90 ரூபாவால் குறையுமென எதிர்பார்ப்பு.

மோட்டார் வாகனங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் செலுத்தாத வரிகளை மீளப்பெற யோசனை. இதன் மூலம் 12,000 மில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டிய வரிக்கு தள்ளுபடி.

எதனோல் இறக்குமதியை கட்டுப்படுத்த சுங்க பிரிவுகளில் ஸ்கேன் இயந்திரம் பொருத்த நடவடிக்கை.

5,000 ரூபாவாக இருந்த திருமண மற்றும் பதிவுக்கட்டணம் 1,000 ரூபாவாக குறைப்பு.

25 சதவீதமாக இருந்த அலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைக்கான வரி குறைப்பு.

விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு 1,000 மில்லியன் ரூபாய் வரி.

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு விலைமனுக்கோரல். ஒருவருக்கு 3 அனுமதிப்பத்திரமே வழங்கப்படும். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்.

அங்கவீனமடைந்த இராணுவவீரர்களுக்கு, ஆகக்குறைந்தது 5 இலட்ச ரூபாய் கடன்.

மஹாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவால் அதிகரிப்பு.

அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 200 ரூபாய் கொடுப்பனவு.

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் நட்டத்தை நாட்டால் தாங்க முடியவில்லை. இவ்விரு நிறுவனங்களால் ஏற்பட்ட நட்டம் 100 பில்லியனை தாண்டிவிட்டது. ஆகையால் இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கின்றோம்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 சதவீதத்தால் குறைப்பு.

மீனவர்களுக்கு ஆயுட் காப்புறுதி.

முற்பணமின்றி வங்கிக்கணக்கு ஆரம்பிக்க நடவடிக்கை.

அரச நிறுவனங்கள் அரசசெலவில் விளம்பரம் செய்தல் நிறுத்தப்படவேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டமானது இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கும் திட்டமாகும் என்று பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com