Contact us at: sooddram@gmail.com

 

சிறப்புரிமையை பயன்படுத்தி
'என் மீது வீண்பழி சுமத்த சிலர் முயற்சி'  -
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த

பாராளுமன்ற சிறப்புரிமையை தவறாகப் பயன்படுத்தி ஒரு சில உறுப்பினர்கள் என் மீதும், எனது கட்சி மீதும் உண்மைக்கு புறம்பான அவதூறுகளை பரப்புகின்றனர். இனிமேலும் இந்த உயரிய சபையை மேடையாக பயன்படுத்தி வீண் பழிகளை சுமத்த அனுமதிக்கக் கூடாது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 க்கு கூடியது. வரவு - செலவுத் திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான நேற்று சபையின் வழமையான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பான அறிவித்தல்கள் நேரத்தின் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் (விஜயகலா மகேஸ்வரன் தனது கணவர் அமரர் மகேஸ்வரனின் படுகொலை மற்றும் சாவகச்சேரி மாணவன் படுகொலை தொடர்பாக ஈ. பி. டி. பி.யின் மீதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டியே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சிறப்புரிமை மீறல் தொடர்பாக அறிவித்தலை முன்வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் உரையாற்றுகையில :-

எமது கட்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதயில் அனைத்துத் தரப்பினரதும் அங்கீகாரமும் தமிழ் மக்களின் பேராதரவும் பெருகி வரும் ஒரு சூழ்நிலையில் இதனைக் கண்டு சகிக்க முடியாதவர்களே எமது கட்சி மீது உண்மைக்குப் புறம்பான கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

ஈ. பி. டி. பி. மக்களிடம் இருந்து கப்பம் வரி போன்ற மக்கள் விரோத அறவீடுகளிலோ அன்றி கொள்ளை, கொலை போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளிலோ எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபட்டது கிடையாது.

இந்த நிலையில் எம் மீது வீண் அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் தங்களது அரசியல் பிழைப்பை சிலர் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே எங்கள் மீது குற்றச்சாட்டி நடாளுமன்றத்தில் நீதிமன்றத்தையே அவமதிக்க எத்தனித்துள்ளனர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த வகையில் கடந்த 2010.06.30 ஆம் திகதி யாழ். மாவட்ட ஐ. தே.நடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தனது கணவர் அமரர் மகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி மாணவன் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது கொலைகள் தொடர்பாகவும் வட மாகாணத்தில் நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பாகவும் என்னைச் சம்பந்தப்படுத்திக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன்கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஸ்தலத்தில் வைத்தே இக்கொலை தொடர்பில் ஒருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டமை எல்லோரும் தெரிந்த உண்மையாகும். இவர் புலிகள் இயக்க பிஸ்ரல் குழு உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதனை திருமதி மகேஸ்வரனும் நன்றாக அறிவார்.

அமரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. ஆயினும் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என புலிகளால் எச்சரிக்கப்பட்ட பின்னர் அவர் புலிகளின் எச்சரிக்கையினையும் மீறி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த வேளை புலிகளால் சுடப்பட்டு படுகாயமுற்றதன் பின்னர் அதாவது அவரது இறுதிக் காலங்களில் அவருக்கும் எனக்கும் உறவுகள் இருந்து வந்தன.

இதன் தொடர்ச்சியாக, அமரர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவரை ஊடகம் ஒன்று செவ்வி கண்டிருந்தது. இதன் போது எமக்கும் எமது கட்சிக்கும் எதிராக மகேஸ்வரன் கருத்துக்களை கூறுவதற்கு குறித்த ஊடகத்தின் நிகழ்ச்சியாளரால் திட்டமிட்ட வகையில் தூண்டிவிடப்பட்டிருந்தார் என்றே நான் கருதுகின்றேன். இந்தக் கருத்தையே அந்த செவ்வியைப் பார்த்தவர்கள் பலரும் கூறியிருந்தனர்.

குறித்த மேற்படி ஊடக நிகழ்ச்சியாளருக்கும் ஊடாக மக்கள் அரங்கில் திட்டமிட்ட வகையில் எமக்குள் இருந்த முரண்பாட்டை தூண்டி விட்டிருந்த புலிகளின் தலைமை நாம் மகேஸ்வரன் மீது விமர்சனங்களை முன்வைக்கும்வரை காத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து அவரைப் படுகொலை செய்திருந்தது. இது சகலரும் அறிந்த உண்மை.

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் எமது ஜனநாயக வழிமுறைப்படி இப்போது அந்த அடிப்படையிலேயே இந்த உயரிய மன்றத்திலும் நான் கருத்துக்களுக்குப் பதிலாக எமது கருத்தை முன்வைக்கின்றேன். கருத்துக்களுக்குப் பதிலாகக் கருவிகளை ஒருபோதும் நாம் எடுக்கவில்லை.

புலிகளின் தலைமை எவ்வாறு திட்டமிட்டு படுகொலைகளை செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் அவர்களது சகல படுகொலை முயற்சிகளில் இருந்தும் நான் தப்பித்து வந்திருக்கிறேன்.

அதேபோன்று சாவகச்சேரிப் பகுதியில் திருச்செல்வம் கபில்நாத் எனும் மாணவனின் படுகொலை குறித்த விசாரணையும் தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரான ஜீவன் என்பவர் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தக் கொலை தொடர்பிலும் எமது கட்சி மீது திருமதி மகேஸ்வரன் அபாண்டமாக குற்றச்சாட்டினை இந்த நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

அண்மையில் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவால் இலங்கையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற நடவடிக்கையின் போது வட மாகாணத்திலும் நீதிபதிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த இடமாற்றத்தைக் கூட தவறான கற்பனை கதையாக உருவாக்கி அரசியல் தலையீடு காரணமாக இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாக இவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயற்பாடுகளை அவமதிக்கும் செயலாகும். இதேவேளை அமரர் மகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது வழக்கு விசாரணைகளை துரிதமாக்கி உண்மையான குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் இச்சபையின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இனிமேலும் என்மீதும் எனது கட்சி மீதும் உண்மைக்குப் புறம்பான வீண் பழிகளைச் சுமத்த இந்த கெளரவமான சபையைப் பயன்படுத்துவதற்குத் தாங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையின் போது குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com