Contact us at: sooddram@gmail.com

 

சுவிஸில் நடைபெற்ற வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடாந்தம் நிகழ்த்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம , தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜுலை 13 ம் திகதி முதல் 19 ம் திகதி வரையான நாட்கள் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு, போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராளிகள் பொதுமக்கள் வருடந்தோறும் நினைவு கூரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த அரசியல் கட்சித் தலைவர்கள , போராளிகள் , பொதுமக்களின் திருவுருவப் படங்களுக்கான மலரஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. திருவுருவப்படங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் , ஜேர்மன் கிளை உறுப்பினர்கள் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பாக கிளையின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு. மனோ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்;த்தினார். தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களின் நினைவுரையை சுவிஸ் கிளை உறுப்பினர் திர . சிவானந்தசோதி அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையிலிருந்து திர . ஜெகநாதன , சுவிஸ் கிளையிலிருந்து திரு. கலாமோகன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக திரு. பெர்ணாண்ட , சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தின் சார்பாக திரு. விஜயநாதன் இரட்ணகுமார , இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக திரு. நந்தன ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு ஜெகநாதன் அவர்கள் பேசுகையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராட்ட இயக்கங்கள் யாவுமே மக்களுக்கு தவறு இழைத்திருக்கின்றது எனவும், இப்போராட்டத்தின் ஆரம்ப சக்தியாக புளொட் இயக்கத்தினராகிய தாம், போராட்டத்தின் பெயரால் இடம்பெற்று முடிந்துள்ள இழப்புக்களுக்கும் தவறுகளுக்குமான பொறுப்பின் பங்கினை ஏற்றுக்கொள்ளவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இப்போராட்டமானது தனியே தமிழீழத்திற்கான போராட்டமாக அமைந்திருக்கவில்லை எனவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சகலரும் சமத்துவமாக வாழ்வதற்கானதோர் நிலைமையினை உருவாக்குவதற்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. இவ்விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் காத்திரமான பங்கினை ஆற்றியுள்ளனர். அத்துடன் இன்று போராட்டம் ஓய்ந்திருந்தாலும் அது முற்றுப்பெறவில்லை என தெரிவித்த அவர் தொடர்ந்தும் எம் மக்களின் தேவைகளுக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

திரு. இரட்ணகுமார் அவர்கள் பேசுகையில், சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றம் எனும் அமைப்பு சுமார் கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான சேவையினை செய்து வருவதாகவும,; இவ்வமைப்பு இலங்கையில் இருந்திருந்தால் அது நேரகாலத்துடன் மரணித்திருக்கும் எனவும் சுவிற்சர்லாந்தின் சட்டதிட்டங்களானது தாம் தொடர்ந்தும் செயற்படுவதற்கு வழிவிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமது செயற்பாடுகளை பாசிசம் முடக்க முற்பட்டபோது அதற்கு உதவியாக நின்று எம்மீது சேறுபூசிய ஊடகங்கள் இன்று எமது சேவையினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் எம் நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்ய தாமாகவே முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையர் புலம்பெயர் சம்மேளனம் சார்பாக பேசிய திரு நந்தன அவர்கள் பேசுகையில : இலங்கை என்பது இங்கு வீற்றிருக்கின்ற அனைத்து மக்களதும் தாய்நாடு எனவும் அங்கு இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்துள்ளவர்கள் அனைவரும் இலங்கையரே எனக்கூறிய அவர் அவ்வாறு உயிரிழந்த ஒரு தொகுதியினரை நினைவுகூரும் இந்நிகழ்வில் பங்கு கொள்வதில் தான் மகிழ்சி அடைவதாக தெரிவித்தார்.

அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பாக பேசிய திரு. பெர்ணாண்டோ அவர்கள், போராடப் புறப்பட்ட இயக்கங்களை பாசிசம் ஒடுக்கியதன் கொடுமைகள் என்றும் மறக்க முடியாதவை என தெரிவித்ததுடன், வீர மக்களுக்கு அஞ்சலியாக கவிதை ஒன்றையும் அங்கே சமர்ப்பணம் செய்தார்.

வீரமக்கள் தினம் வீரமறவர் தினம்

விடியல் நெஞ்சில் சுமந்து
வீரவாகை தலையில் ஏந்தி
வீரத்தின் மறவர்களாக
வீற்றிருந்த தோழர்கள் மறைந்த தினம்

வெற்றி மாலை கழுத்தில் சூடி
வேலும் வாளும் கரத்தில் ஏந்த
விடுதலை தனயன்களை
வித்தாக தரைக்குத் தந்த
வீரமிக்க மக்கள் மறைந்த தினம்

காவியங்கள் பல படைக்க
காத்திருந்த கவரிமான்களை
கறைபடிந்த மனிதர்கள்
கல்லறைக்குள் மறைத்த தினம்

வாழேந்தி பகைமுடித்து
வழிகளில் புகழ் ஏந்தி
வழிகாட்டிக் கற்களாக நிற்க வேண்டிய உத்தமர்களை
வஞ்சகர்கள் தாம்வாழ அன்று
வாள்கொண்டு வெட்டிவீழ்த்தி மறைத்த தினம்

தலைதனில் முடிசூடி
தரணிதனை அளந்த
தன்னலமற்ற தோழர்கள் இவர்கள்
தலைக்கனம் பிடித்து வெறிதனை தீர்க்கும்
தரை கெட்ட மனிதர்களால் அனுப்பிய தினம்

நெஞ்சத்தில் விடுதலை ஏந்திய தோழர்களை
நெருப்பில் இட்டு கருக்கிய வரலாறு நம்மினத்தில்
நெஞ்சம் கனக்கிறது தோழர்களே என்றும்
நெடுந்தூரம் பயணிக்கும் தினம்

விரல் தனை விந்தை காட்டி
விவேகத்துடன் சிந்தை நோக்கி
வீரத்தின் அரசிகளாக வலம் வந்த
வீரத்திண்ணம் தலையில் சுமந்த
விவேகிகள் விதைக்கப்பட்ட தினம்

கைகோர்த்த தோழர்களை
கைத்துப்பாக்கியால் அழித்த வடுக்கள்
கைதனை தூக்கி நின்ற வேளை
கணப்பொழுதில் கருக்கிபாசிசப்புலிகள்
கண்ணை விட்டு அழியாத தினம்

உன்மக்கள் மனங்களை நேசிக்கத் தெரியாத
உவர்ப்பான நெஞ்சம் கொண்டோரே
உள்ளம் கையில் எதிர்பாராதே
ஊற்றெடுக்கும் நல்லெண்ணம் தனை
உரிமையோடு நாங்கள் சந்திக்கும் தினம்

காவியங்களை கல்லறைக்கு
களப்பலிகளாக வசைபாடிய வஞ்சகர்கள்
கரங்களில் இருக்கும் கறைகளை
கழுவ மறந்ததினால் காவியங்கள் சிறைகளில்
கட்டுப்பாட்டுடன் அடைக்கப்பட்ட தினம்

கண்ணின் கருமணிகளை
கயவர் கருக்கியதால்
கனவாய் போகவில்லை இலட்சியங்கள்
கனிந்து வரும்காலம் இது எங்கள் தினம்

தோல்வியில்லாத நம்பயணம்
தொடர்ந்து பின்பற்றிச் செல்லும்
தோழர்களின் வழியில் என்றும்
தோகை மயிலும் விரித்தாடும் தோகைதனை

சூனிய எண்ணங்களை
சுயநலவாதிகள் அன்று
சுட்டெரித்து தெளிவடைந்திருந்தால்
சுடுசோறு பதமாய் நம்கைகளில்

சிந்திய குருதி வெள்ளத்தின் மீது
சிந்தித்து என்றென்றும் செயல்படுவோம்
சிறகுடைக்கப்படும்மண்ணில் புதைக்கப்பட்ட
சிந்தையில் வாழும் எங்கள் தோழர்கள் மீது..

(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை தோழர்கள்.)..

அத்துடன் பல பெரியோர் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும், இறுதியாக 27.06.2010 அன்று நடைபெற்ற பரீட்சையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com