Contact us at: sooddram@gmail.com

 

எதிர் கட்சியினர் சமர்பிப்பு _

ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரம்

ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தொகுதிவாரி முறைமையையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியம் என்று சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட செனட்சபை, இந்திய வம்சாவளி மக்களுக்கு சமூக சபை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய, மாகாண உயர்பதவி நியமன சபை அமைக்கப்படுதல் போன்ற யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வகட்சிக் குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் இதனை இன்று சமர்ப்பிக்கவுள்ளார். இதுகுறித்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தச் செய்தியாளர் மாநாட்டில் சர்வகட்சிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களான ஆர். யோகராஜன் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சர்வகட்சிக் குழுவின் அறிக்கை கடந்தவருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரணவினால் கையளிக்கப்பட்டிருந்தது. இதனை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் கோரியிருந்தபோதிலும் இதுவரை அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த இறுதி அறிக்கையினை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமனற் உறுப்பினர் ஆர். யோகராஜன் அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யோகராஜன் எம்.பி., ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி சர்வகட்சி ஆலோசனைக் குழுவும் நிறுவப்பட்டது. அந்த மாநாட்டிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவிர ஏனைய சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அங்கம் வகித்தபோதிலும் ஆலோசனை குழுவிலிருந்து இடைநடுவிலேயே விலகிக்கொண்டன.

சர்வக்கட்சி ஆலோசனை குழுவிற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் இரண்டு நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது அந்த குழுவின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டே இந்த இறுதியறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை குழுவில் பங்கேற்ற சகல கட்சிகளினதும் ஆலோசனைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் 12 கட்சிகளும் எதிர்க்கட்சி தரப்பில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர . இந்த குழு 128 தடவைகள் கூடியதுடன் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையாளர்களினால் ஒவ்வொரு கூட்டமும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டபோது அவர் அதனை பகிரங்கப்படுத்துவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் பகிரங்கப்படுத்தவில்லை ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கூட வழங்கப்படவில்லை. யுத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்பட்டது. ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அரசியல் தீர்வு தொடர்பிலும் சர்வக்கட்சி ஆலோசனை குழுத்தொடர்பில் பெரிதாக பிரஸ்தாபிப்பார். அதேபோல வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சர்வக்கட்சி ஆலோசனை குழுதொடர்பில் கருத்துரைப்பார்.

13 மாதங்களாகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை

2009 ஜூன் 30 ஆம் திகதி சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 14 மாதங்கள் கடந்து விட்டநிலையில் ஜனாதிபதியிடம் இறுதியறிக்கை கையளிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துவிட்டது இன்னுமே அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கின்ற கட்சி பிரதிநிதிகளுக்கேனும் வழங்கப்படவில்லை.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில்

இந்த ஊகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதிலளிக்கையில், சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது சாதாரணமானது என்றும் இதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

இறுதி அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் அந்த அறிக்கையின் சாரம்சம் உத்தியோகபற்றற்ற ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் அக்கட்சி சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் யோசனைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் கலந்துரையாடவேண்டும்.

எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் இறுதியறிக்கையை வெளியிடுவது சால சிறந்தது என்றே கருத்துகின்றோம். இதனை இதற்கு முன்னரே வெளியிட்டிருக்கலாம். இறுதியறிக்கையை அரசாங்கம் இதுவரையிலும் சமர்ப்பிக்காமை அரசாங்கத்தின் கண்துடைப்பாக இருக்கலாம் ஆனால் தீர்வு திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.

வடக்கு மக்கள் அரசியல் தீர்வையல்லை சீமெந்து மூடைகளையும் அபிவிருத்தியையுமே எதிர்பார்க்கின்றனர் என்று கூறுவதில் அர்த்தமில்லை அவையாவும் தேவையாகும். ஆனால் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். ஜனாதிபதி அறிக்கையை வெளியிடால் விடுவதற்கு அரசாங்கத்திலிருக்கின்ற பௌத்தவாத கட்சிகளின் செயற்பாடுகளுக்கு அவர் அச்சம் கொண்டிருக்கின்றமை காரணமாக இருக்கலாம்.

பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவிருக்கின்ற இறுதி அறிக்கையின் முக்கியமான அம்சங்கள் வருமாற ;

அரசின் தன்மை:

இலங்கைக் குடியரசானது ஒற்றையாட்சி அரசாகும் என்பதால் உணரப்படுவது யாதெனில் எங்கே அரச அதிகாரமானது மாகாணங்களுக்கிடையே பகிரப்பட்டிருக்க அரச கட்டமைப்பானது பிரிபடாததும் ஒன்றிணைக்கப்பட்டதுமான கட்டமைப்பாக கருதப்படல் வேண்டும்.

அரசாங்கத்தின் வடிவம்/முறைமை

இலங்கை, மத்திய மட்டத்தில் பாராளுமன்ற முறைமை கொண்ட அரசாங்கத்தைக் கொண்டிருக்கும்.

புத்த மதத்தின் அந்தஸ்து

இலங்கை குடியரசு புத்த மதத்திற்கு அதி உன்னதமான இடத்தை வழங்கல் வேண்டும். அத்தோடு அதன் பிரகாரம் அரசாங்கத்தின் கடப்பாடானது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 10, 14 (1) (உ) ஆல் அனைத்து மத உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிரகாரம் புத்த சாசனத்தை பாதுகாத்தலோடு பேணிப் போற்றலும் வேண்டும்.

அரச
கரும மொழியும் தேசிய மொழியும்


தேசிய மொழியான தமிழும் சிங்களமும் இலங்கையின் அரசகரும மொழியாகவும் இருக்கும்.

ஆங்கில மொழியின் பிரயோகம்:

ஆங்கிலமானது உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.

அரசியலமைப்பின் மீயுயர் தன்மை/ இறையாண்மை:

அரசியலமைப்பின் இறையாண்மையானது தற்போது காணப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்குட்பட்டதும் ஆனால், உயர் நீதிமன்றத்திலிருந்து வேறானதுமான ஓர் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பாதுகாக்கப்படுவதுடன் அங்கீகரிக்கவும் படல் வேண்டும். அரசியலமைப்போடு முரண்படுகின்ற செயல் மற்றும் செய்யாமை தொடர்பான மத்திய மற்றும் மாகாணங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் வெறிதானதாகும்.

(மத) பேதமைகளுக்கு/ பிரிவினைகளுக்கு எதிரான பாதுகாப்பு:

அரசினது ஒற்றுமை, இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் (மத) பேதமை/ பிரிவினைப் பாங்கான போக்கை நலிவடையச் செய்வதற்குமான ஆழமான பொறிமுறைகளை கொண்டிருக்க வேண்டும். மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் குடியரசினுடைய தேசிய ஒற்றுமையையும் பிரிபடாத்தன்மையையும் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாக கட்டளைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

தேர்தல் முறைமை:

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை காணப்படத்தக்கதாக, தேர்தல் தொகுதி அடிப்படையிலான தொகுதிவாரி முறைமையையும் கட்சி அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்டதான இரண்டு வாக்குச் சீட்டுகளுடனான ஒரு கலப்புத் தேர்தல் முறைமையை ஏற்றுக் கொள்கிறது.

அதிகாரப் பகிர்வு:

மக்களின் அதிகாரமானது அரசாங்கத்தின் மூன்று மட்டங்களிடையே பகிரப்பட்டிருக்கும். குறிப்பாக மத்திய அரசாங்கம், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களிடம் ஒவ்வொரு மட்டமும் வேறான அதிகாரப் பட்டியல்களை அரசியலமைப்பின் ஊடாக கொண்டிருக்கும்.

ஆட்சிப் பேரவை (செனட்):

தேசிய சட்டவாக்கத்தில் பொறுப்பு வகிக்கக் கூடியதான மாகாணங்களைக் கொண்டு ஆட்சிப் பேரவை ஒன்று அமைக்கப்படும். மாகாணங்களிடையே எதிரிடையான விளைவுகளைக் கொண்ட கவனயீனப் போக்கான சட்டங்களுக்கு எதிரான ஆழமான ஒரு பொறி முறையாக இது தொழிற்படும். இது முன்மொழிவது யாதெனில், ஒவ்வொரு மாகாணமும் 63 மொத்த உறுப்பினர்கள் அமைவான, அந்தந்த மாகாண சட்டவாக்கத்தின் உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு முறைமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரவையாளர்களால் பிரதிநிதித்துவப்படும். புறம்பாக 10 பேரவையாளர்கள் (வடக்கு, கிழக்குக்கு புறம்பாக வதியும் முஸ்லிம்களுக்கு ஏனைய ஒன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும்) சமூக சபைகளால் தெரிவு செய்யப்படுவார்கள். குடியரசின் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படாத சமூக குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்த இருவரை நியமிப்பார்.

சமூக சப :

இரண்டு சமூக சபைகள் காணப்படும், ஒன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும், மற்றொன்று வட கிழக்குக்கு புறம்பாக, சமூக அங்கத்தவர்களின் அபிவிருத்தி தேவைகளுக்காக வட கிழக்குக்கு வெளியே அவர்கள் எங்கு வசித்த போதிலும் ஆள்புல நோக்குகைகள் இன்றி செயற்படத்தக்க முஸ்லிம்களுக்குமாக காணப்படும். மத்திய மற்றும் மாகாணங்களுக்கிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல்

அதிகாரப் பகிர்வானது வெளிப்படையானதாகவும் முற்றிலும் கவர்பாடற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
ஒருங்கிய நிரல் இல்லாமலாக்கப்படுவதுடன் மேற்சொன்ன அதிகாரமõனது மத்திய நிரல் மற்றும் மாகாண நிரல்களுக்கிடையில் தகுந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படும். மூன்றாவது நிரலானது உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரங்களை வெளிப்படையாகக் கூறும் விதமாக தொகுக்கப்பட்டிருக்கும்.

தேசிய மற்றும் மாகாண உயர் பதவி நியமன சபை:

அரச சேவையினது நீதித் துறையையும் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் தேசிய பதவி நியமன சபை காணப்படும்.இந்த தேசிய சபையானது பிரதமர், சபாநாயகர், பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். இதில் மூன்று பேர் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக குறித்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

ஒரு மாகாண உயர் பதவி நியமன சபையானது முதலமைச்சர், சபைத் தவிசாளர் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினால் பிரேரிக்கப்படுகின்ற ஆளுனரால் நியமனம் செய்யப்படுகின்ற வேறுபட்ட ஆறு பேரைக் கொண்டதாக இருக்கும். மாகாண சபை கூட்டமைவானது இயன்ற வரை மாகாணங்களின் இனங்களின் சேர்மத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.

சீர்திருத்த நடபடிமுறைகள்:

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 82 (5) மற்றும் 83 ஆகியன நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அல்லது வேறு அரசியலமைப்பை கொண்டு பிரதியீடு செய்வதற்கான சட்ட மூலமானது பாராளுமன்றத்தினது இரண்டு சபைகளினதும் 2/3 பெரும்பான்மையான உறுப்பினர்களினது வெவ்வேறான அமர்வு மற்றும் வாக்களிப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com