Contact us at: sooddram@gmail.com

 

வட பகுதி மக்கள் துரித அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு வரவேற்பு

ஆரம்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றி சந்தேகங்கள் தோன்றியிருந்தபோதிலும் இன்று ஜனாதிபதியின் நல்லாட்சி நடைபெறுகிறது என்ற நல்லெண்ணம் யாழ்ப்பாண மக்களின் மனதில் வலுவூன்றியுள்ளது. இதுவரையில் ஜனாதிபதியின் நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் சிறப்பாக இருப்பதனால் தாங்கள் எதிர்காலத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள். கிளிநொச்சியில் சர்வதேச விளை யாட்டரங்கை அமைப்பதற்கு அரசாங்கம் 360 மில்லியன் ரூபாவை செலவிடவிருப்பது குறித்தும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி அவர்கள் பக்கச்சார்பற்ற முறையில் நடந்துகொள்வதை நாம் வரவேற்கிறோம் என்று வடபகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கச் சென்ற ஊடக வியலாளர்களிடம் இளைஞர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பிரதான சந்தையிலுள்ள 29 வயதுடைய வர்த்தகரான ரூபன், தமது வர்த்தகம் இன்று களைகட்டியிருக்கிறது என்றும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை யாழ்ப்பாணத்து மக்களும், தெற்கிலிருந்து வரும் நண்பர்களும் பெருமளவு வாங்குகிறார்கள் என்றும் கூறினார். யுத்தம் முடிவுற்ற பின்னர் தனது வர்த்தகம் தளைத்தோங்குகிறது என்றும், இப்போது தாம் வன்முறைகளின்றி நிம்மதியாக வாழ்வதாகவும் கூறினார்.

வரணியென்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இவ்வளவு அபிவிருத்தி ஏற்பட்டும் மகிழ்ச்சியடையவில்லை. சாமாதானம் மாத்திரம் எங்களுக்கு கைகொடுத்து உதவவில்லையென்று கூறுகிறார். ஜனாதிபதியின் திட்டங்கள் மிகவும் உன்னதமானவை. நாம் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் வாழும் கிராமங்களைப்போன்ற இடங்களுக்கும், அவரது நற்சேவையின் பயனை பெறுவதற்கு ஜனாதிபதி அவர்கள் உறுதுணை புரியவேண்டுமென்றும் இந்த இளைஞர் வேண்டுகோள்விடுத்தார்.

எங்கள் கிராமத்தின் வீதிகள் திருத்தப்படவில்லை, மின்சார இணைப்பு தொடர்ச்சியாக கிடைப்பதுமில்லை. எமக்கு குடிநீர் தேவைப்படுகிறது. எங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பாரிய திட்டங்களை வகுத்திருப்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஜனாதிபதி அவர்கள் ஒரு நல்ல மனிதர். அவர்கள் எங்களுக்கு நேசக்கரத்தை நீட்டி உதவிசெய்ய முன்வந்துள்ளார். அவரது நற்பணிகள் வெற்றியடையுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என அந்த இளைஞர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் மீன்பிடித்துறை முக்கியத்துவம் பெறுகின்றது. யாழ். குடாநாட்டில் மீன்பிடித்துறையை அபிவிருத்திசெய்து பாக்குநீரிணையிலும் வடபகுதியின் கரையோரப் பிரதேசத்திலுமுள்ள மீன்வளங்களை பயன்படுத்தி நன்மையடைவதற்கும் இப்போது அரசாங்கம் அதிகரித்த வாய்ப்புக்களை வழங்கிவருகிறது.

ஆர்.அருளபுணாபன், தன்னையொரு மீன்முதலாளி என அறிமுகம்செய்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையில் இப்போது நாளாந்தம் கூடுதலான மீன்கள் பிடிக்கப்படுகின்றன என்று சொன்னார். நான் நாளாந்தம் பெருமளவில் மீன்விற்பனை செய்கிறேன். என்னைபோன்ற மீன்முதலாளிமார் யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து ஷி>x 7 லொறிகளில் மீனை கொழும்புக்கு நாளாந்தம் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு மொத்த விற்பனை மீன்சந்தையொன்று இங்கில்லை. இதில் ஒன்று சின்னக்கடையிலும் மற்றொன்று மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலும் இருக்கின்றது. இப்போது எனக்கு வயது 30. இது என்னுடைய குடும்ப வர்த்தகமாகும். ஜனாதிபதி அவர்கள் தமிழ் மீனவர்களும் நன்மையடையவேண்டுமென்ற எண்ணத்துடன் செயற்படுவது குறித்து நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு முழுமையான சுதந்திரத்தை மாத்திரம் கொடுப்பது போதாது. கடற்றொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு படகுகள், மீன்பிடி வலைகள், ஐஸ் கட்டிகள் மற்றும் உப்பு போன்றவை அவர்களின் தொழிலை சிறப்பிப்பதற்கு அவசியமாகும். நாம் அரசாங்கத் தொழில்களை எதிர்பார்க்கவில்லை.

எங்களுக்கு அரசாங்கம் எமது தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உதவிவழங்க வேண்டுமென்றே நாம் கேட்கிறோம். சமாதானத்தின் மூலம் நாம் இதனையே எதிர்பார்க்கிறோம் என்று மீனவ சமூகத்தைச்சேர்ந்த ஒரு இளைஞர் தெரிவித்தார். மீன்விற்பனை தொழிலில் ஈடுபடும் இவர், அரசாங்கம் தங்களுக்கு யதார்த்தபூர்வமான முறையில் உதவிகளைச் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

லொறிகள் ஐஸ்பெட்டிகளில் மீன்களை கொழும்புக்கு எடுத்துச்செல்கின்றன. முகமாலைக்கு அப்பால் யாழ்ப்பாணம் கொழும்பு வீதியில் அதிக வாகன நெரிசல் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்டுள்ளது. எனவே தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாகனப்போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டால் தங்கள் தொழில் மேலும் வளர்ச்சியடையுமென்று இன்னுமொரு மீன் வர்த்தகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நேரக்கணிப்பாளரான ஸ்ரீவர்த்தன், கொழும்புக்கு பஸ்கள் இரவு நேரத்திலும், காலையிலும் செல்கின்றன என்றார். ஒவ்வொரு பஸ்ஸிலும் 40 பயணிகள் ஏற்றப்படுகிறார்கள் என்றாலும், கொழும்புக்கு செல்லும் ஆர்வத்தில் மேலும் பலர் நின்றுகொண்டு பயணம் செய்கிறார்கள்.

சாதாரண யாழ்ப்பாணத்து மக்கள் தனியார் பஸ்களில் பயணிப்பது அசெளகரியமாக இருப்பதென்றே கூறுகிறார்கள். அத்துடன் தனியார் பஸ்கள் அதிகரித்த கட்டணத்தையும் அறவிடுகின்றன. இது தங்களுக்கு கட்டுப்படியாகாது என்று தெரிவிக்கும் மக்கள் இதுகுறித்து இலங்கை போக்குவரத்துச் சபை ஏதாவதுதொரு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்கிறார்கள்.

கொழும்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்டவர்களை சந்தித்தார்கள். அந்த மக்கள் வடபகுதியில் நடக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நன்கு தெரிந்துவைத்துள்ளார்கள். வீதிகளை அமைத்தல், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்களை அமைத்தல் போன்ற பணிகள் இப்போது மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்து மக்களுக்கு சிறந்த ஒரு பஸ் சேவையைப் பெற்றுக்கொடுங்கள் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். யாழ்ப்பாணத்து மக்கள் தாங்கள் அபிவிருத்தியை ஆதரிப்பதாகவும், அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்களுக்குத் தேவையென்றும் கூறுகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் வடபகுதிக்கு கூடுதலான பஸ்களை அனுப்பிவைக்கவேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கான ஆயத்தங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன. அத்துடன் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளின் தேர்தலும் நடைபெறவுள்ளது. அன்று பயங்கரவாதிகளின் கோட்டையில் இருந்த மக்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அப்பிரதேசத்திலுள்ள கடைகளில் நல்ல முறையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் நல்ல பெறுபேறுகளை எங்களுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அபிவிருத்திப் பணிகள் மெதுவாக இடம்பெற்றாலும் அது நேர்த்தியாக இடம்பெறுகிறது என்று கிளிநொச்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் நடத்தும் சிற்றுண்டிச்சாலையின் முகாமையாளர் எஸ்.செல்வம் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

வடபகுதியில் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் குறித்து +ரிw மகிழ்ச்சி தெரிவித்தார். கூட்டுறவுத்துறை இளைஞர்களுக்கு வேலைவாய்பைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு மையமாக விளங்கலாம் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்டுவரும் கொள்கையை வடபகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்றும் கூறினார்.

அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளிலிருந்துவந்த வடக்கைச்சேர்ந்த தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வந்த மக்களுடன் நட்புறவுடன் பழகியதை தாங்கள் அவதானித்ததாகவும் கூறுகிறார்கள். ஜேர்மனியில் வாழும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற சாபின்ஸ் ஜெயசேகர, ஒரு கணனி தொழில்துறை பொறியியலாளரும் தகவல் தொழில்நுட்ப நிபுணருமாவார்.

இவர் ஜேர்மனியில் தமிழ் அகதிகளுக்கு ஒரு தொண்டராக இருந்தும் பணிபுரிந்திருக்கிறார். இந்த மனிதர் வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் வடஇலங்கையை குறிப்பாக யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இலங்கை எனது நாடு. நான் பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணத்தில். இங்கு பல இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இவர்களுக்கு என்னால் எவ்வாறு உதவமுடியும் என்பதே நான் எனக்குள் கேட்கும் கேள்வி. வடபகுதியையும் உள்ளடக்கியதாக முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை அறிந்ததும் அவருக்கு ஆதரவளித்து அவரின் கரத்தைப் பலப்படுத்தத் தீர்மானித்தேன்என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் 150 அறைகளைக் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டுவருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இதற்கு நான் 5 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளேன். ஜேர்மனியிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் நண்பர்கள் இத்திட்டத்தில் என்னுடன் பங்காளர்களாக உள்ளனர்.

எனது சொந்தக் கிராமத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நட்சத்திர விடுதியை அமைக்கும் திட்டத்துக்கு முதலீட்டுச் சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது மாத்திரமன்றி 5000 கோழிகளைக் கொண்ட கோழிப்பண்ணையொன்றையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக ஜேர்மனியிலிருந்து வந்திருந்த அந்த நபர் மேலும் தெரிவித்தார்.

எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்பதற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் வாழ் தமிழர்கள் உதவமுடியும். அவர்கள் உதவிசெய்வார்கள்என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com