Contact us at: sooddram@gmail.com

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்   பிரதமருக்கும் சிதம்பரத்திற்கும்   எல்லாம் தெரியும்: ராசா அதிரடி

இந்திய அரசின் கருவூலத்தில் சேர்ந் திருக்க வேண்டிய ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன் னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச் சர் ஆ.ராசா முன்வைத்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், தற்போதைய உள்துறை அமைச்சரும் அப்போதைய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என்று அப்போது பகிரங்கமாக கூறினார்.

இந்த ஊழல் வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக, மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மத்திய குற்றப்புலனாய்வுக்கழகத்தால் (சிபிஐ) குற்றம் சாட்டப்பட்டு ஆ.ராசாவும், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவர்களும், இந்த ஊழலின் ஒரு பகுதியாக கலைஞர் டி.விக்கு லஞ்சப்பணம் பெற்ற குற்றச் சாட்டின் பேரில் திமுக எம்.பி., கனிமொழி என 14 பேர் கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்டுள்ளனர். திமுகவின் மற்றொரு முக்கியப் பிரமுகரான முன் னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சிபிஐ யின் விசாரணை வளையத்தில் சிக்கி யிருக்கிறார்.

இந்த வழக்கை சிறப்பு சிபிஐ நீதி மன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை முதல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் துவங்கியது.

ஆ.ராசா வாதம்

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள ஆ.ராசாவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதா டினார்.
அப்போது அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இந்த உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்தது என அனைத்தும் பிரதமருக்கும், அப்போ தைய நிதியமைச்சருக்கும் தெரியும் என்பதே தனது கட்சிக்காரரின் வாதம் என்று குறிப்பிட்டார்.

ராசா அமைச்சராக இருந்தபோது, ஏலம் எதுவும் விடப்படாமல், முதலில் வந்தோருக்கு முன்னுரிமை என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை டி.பி.ரியாலிட்டி நிறுவனமும், யுனிடெக் நிறுவனமும் ஒதுக்கப்பெற்றன. விலை மதிப்புமிக்க ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிக மிகக்குறைந்த விலை கொடுத்து இந்நிறுவனங்கள் வாங்கின. உரிமங்கள் கிடைத்தவுடனே, தங்களது நிறுவனப் பங்குகளை மிகமிக அதிகமான விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டின. ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வைத் திருந்ததால்தான் அந்த நிறுவனங்களின் பங்குகள் மிக அதிகமான விலைக்கு விற் பனையாகின. அந்த அளவிற்கு விலை மதிப்புமிக்க ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிகக்குறைந்த விலைக்கு மேற்கண்ட நிறுவனங்களுக்கு ராசா ஒதுக்கித்தந்து, இந்நிறுவனங்கள் கொள்ளைலாபம் அடிக்க உதவினார் என்பதும், இவ்வாறு ராசா செய்த உதவிக்கு கைமாறாக அவ ருக்கு இந்த நிறுவனங்கள் ஏராளமான கோடிகள் அள்ளித்தந்தன என்பதும், அந்த லஞ்சப்பணம் மொரீஷியஸ், செஷல்ஸ் போன்ற தீவுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு அங் கிருந்து லண்டன், சிங்கப்பூர் வங்கிகள் வழியாக ராசாவின் பினாமிகளுக்கு வந்து சேர்ந் தன என்பதும் சிபிஐயின் வாதமாகும்.

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டுக் களை மறுத்த ஆ.ராசாவின் வழக்கறிஞர், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்ய ஏலம் எதுவும் விடுவதில்லை என்ற முடிவை ராசா எடுக்கவில்லை; முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி யில் தளர்த்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே இவரும் ஸ்பெக்ட்ரம் உரிமங் களை ஒதுக்கீடு செய்தார்; இதில் ராசா எந்தத்தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, முதலில் வந்தோ ருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை யும் முந்தைய பாஜக கூட்டணி அரசால் பின்பற்றப்பட்ட நடைமுறையே என்றும் அவர் கூறினார்.

மேலும், மேற்கண்ட நடைமுறைக ளின்படி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்ட டி.பி.ரியாலிட்டி நிறு வனத்தின் பங்குகளை அந்நிறுவனம் மற்றவர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கிற்கும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கும் நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்ட ராசாவின் வழக்கறிஞர், “ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்க ளின் பங்குகள் விற்கப்படுவது தொடர் பான விஷயம் பிரதமருக்கும், அப்போ தைய நிதியமைச்சருக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில், தற்போது உள்துறை அமைச்சராக இருக் கிற அப்போதைய நிதியமைச்சர் (ப.சிதம் பரம்), கார்ப்பரேட் சட்டத்தின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம்பெற்ற நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்வது, அந்த உரிமங்களையே விற்பனை செய்கிறது என்று அர்த்தமாகாது என பிரதமரின் முன்னிலையில் கூறினார்என்று வாதிட்டார்.

பிரதமருக்கு இந்த விஷயம் தெரியும்; முடிந்தால் அவரை மறுக்கச்சொல்லுங் கள்என்றும் வழக்கறிஞர் சவால் விடுத் தார். நிறுவனத்தின் பங்குகளை விற்றது, அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்றதாகாது எனும்போது. அந்த நிறுவனம் லாபம் சம்பாதித்துவிட்டது என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படியானால் இதில் ஊழல் எங்கே இருக்கிறது?” என்று கேட்ட ராசாவின் வழக்கறிஞர், “நான் பின் பற்றிய நடைமுறைகள் தவறானவை என் றால், அதே நடைமுறைகளை ஏற்கெ னவே பின்பற்றியவர்கள் என்ற முறை யில் 1993ம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த எல்லோரும் என்னுடன் சிறை யில் தள்ளப்படவேண்டியவர்களேஎன்று தனது கட்சிக்காரர் ராசா குறிப்பிடு வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான அரசில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, 26 ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கு அனுமதியளித்தார்; அதன்பின்னர் தயாநிதி மாறன் 25 உரிமங் களை விநியோகித்தார்; நான் 122 உரிமங் களை அனுமதித்தேன். அவர்கள் தவறு செய்யாதவர்கள் என்றால், என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? நான் செய்தது போலவே தாங்கள் செய்யவில் லை என்று அவர்கள் மறுத்துப்பார்க்கட் டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஏலம் விடுவதில்லை என்பது 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. நான் அந்த முடிவை அப்படியே பின்பற்றி னேன். அப்படியானால் நான் சட்டத்தை பின்பற்றியுள்ளேன்; எனவே நான் விசாரிக்கப்படவேண்டிய நபரல்ல. உண்மையில் எனக்கு பரிசளித்து கவுர வித்திருக்கவேண்டும்என்று ராசாவின் வாதத்தை அவரது வழக்கறிஞர் முன் வைத்தார்.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீட் டால் நாட்டின் கருவூலத்திற்கு எவ்வ ளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து சிபிஐ தீர்மானிக்க முடியாது என்றும், அதை அரசாங்கமே சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சிபிஐ இந்த விசாரணையில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டிய அவர், “டி.பி.ரியாலிட்டி நிறுவனம், தனது துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திலுள்ள பங்குகளை விற்றதன் மூலம் லாபம் பார்த்துவிட்டது என்று சிபிஐ கூறுகிறது. ஆனால் இதேபோல டாடா டெலி சர்வீ சஸ் நிறுவனம் தனது பங்குகளை விற் றதை சிபிஐ கண்டுகொள்ளவில்லைஎன்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள யுனிடெக் நிறுவனம் தனது 67சதவீதப்பங்குகளை விற்று ரூ.6 ஆயிரத்து 120 கோடி ஈட்டியது; அதே நேரத்தில் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது வெறும் 27 சதவீதப் பங்குகளை விற்று ரூ.13 ஆயிரத்து 973 கோடி ஈட்டியது என்று குறிப்பிட்ட ராசாவின் வழக்கறிஞர், ஆனால் டாடா நிறுவனம் எந்த குற்றமும் செய்யவில்லை என்று சிபிஐ கூறுகிறது என வாதிட்டார். மேலும், இதில்இவர்களில் யார் சிறந்த தொழிலதிபர்-யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவா அல்லது டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் ரத்தன் டாடா வா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com