Contact us at: sooddram@gmail.com

 

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண தடையாக இருக்கும்  ராஜபக்சே ராணுவமய போக்கு -பிரகாஷ் காரத் கடும் விமர்சனம்

ராஜபக்சேவின் ராணுவமயமாக் கல் நடவடிக்கைதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண பெரும் தடையாக இருக்கிறது. இலங் கை அரசின் எதேச்சதிகார நடவடிக் கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து செயல்பட முன்வரவேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அறை கூவல் விடுத்தார். மேலும், அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து உயர்மட்டக் குழு விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வு காணவும், மறுவாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெறவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழர் சமஉரிமை - அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு சனிக் கிழமையன்று (ஜூலை 30) சென்னை யில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்தி ருந்த இந்த மாநாட்டில் உரையாற்றும் போது பிரகாஷ்காரத் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரி மையும் சம வாய்ப்பும் வழங்கவேண் டும் என்ற முக்கியமான கோரிக்கை எழுந்துள்ள நிலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழ்மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இலங்கை யில் இனப் பிரச்சனையால் ரத்த ஆறு ஓடியதும், அதனால் ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்டதும் நாமறிவோம். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக அந்த நாட்டில் நீடித்து வரும் பிரச்சனையாகும். இலங்கை யின் வரலாற்றை நாம் உற்று நோக்கிப் பார்த்தால் அந்த நாட்டில் சுதந்திரத் திற்கு பின்னர் சிங்களர், தமிழர் என இரு பிரிவு மக்கள் வசித்து வந்தாலும் தமிழர்களுக்கு சமவாய்ப்பும் சம உரி மையும் வழங்கப்படவில்லை. தமிழர் களின் சமூக கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்றால் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் குறிப் பாக தமிழ்மக்களுக்கு சம வாய்ப்பும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண் டும். அப்பகுதிகளுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இதை செய்யமறுத்து வருவதால் தான் நமது அண்டை நாடான இலங்கை யில் ஆயுத மோதல் ஏற்பட்டது. ஜன நாயக முறைப்படியான கூட்டாட்சி அமைப்பு முறை அங்கு ஏற்படுத்தப் பட்டால் தான் அடிக்கடி எழும் ஆயுத மோதல் பிரச்சனைக்கு முற் றுப்புள்ளி வைக்கமுடியும்.

ராணுவமயமாக்குவதே மையப்பிரச்சனை

2009 ஆம் ஆண்டு ராணுவ மோதல் முடிவுக்கு வந்தபின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என்று அதிபர் ராஜபக்சே அறிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்றார். பின்னர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக் கப்படும் என்றும், அந்த குழு அளிக் கும் பரிந்துரைகளை அரசு அப்ப டியே நிறைவேற்றும் என்றும் கூறி னார். ஆனால் இதை அவர் செய்ய மறுத்ததோடு, ஆயுத மோதல் முடி வுக்கு வந்து 2 ஆண்டுகளில் ராணுவத் தின் செயல்பாட்டை தான் வலு வாக்கியுள்ளார். சிங்கள மொழி பேசும் இனவாத அமைப்புகளின் பார் வையில் தமிழர்கள் பிரச்சனையை ராஜபக்சே அரசு அணுகுவதால் தான் தீர்வு இன்னும் ஏற்படவில்லை. அர சியல் ரீதியாக இது ஒரு மக்கள் பிரச் சனை என்பதை அவர் காண மறுக் கிறார். இதுதான் இலங்கை பிரச்சனை தீராமல் இருக்க மூலவேராக உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனை நீண்ட காலமாக நீடிப்பதால் அதற்கு விரிவான அணுகுமுறையுடன் தீர்வு காணப்படவேண்டும். ஆனால் அதை செய்யாமல் ராஜபக்சே அரசு அதிகா ரங்கள் முழுவதையும் தன்னிடமே வைத்துக்கொண்டு, வேண்டுமென்றே காலதாமதம் செய்வதால் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனால் சிங்கள இனவாத குழுக்க ளின் பிடிமானமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்களர்-தமி ழர் இடையே மோதல் தீவிரமாக தூபமிடப்படுகிறது.

பிரச்சனை குறித்து பேச தமிழர் குழுக்கள் உள்ளன. தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசலாம். இப்போது கூட இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவர்களின் பிரதிநிதி களை அழைத்து பேசலாம். ஆனால் அதை செய்ய ராஜபக்சே அரசு தவறிவிட்டது.

கொடுமையிழைத்தது ராணுவம்

இலங்கையில் ராணுவமோதல் தீவிரமாக இருந்தபோது தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் கொடு மைகளை இழைத்தது.
அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. போர் காலத்தில் பின்பற்றக் கூடிய விதி முறைகளைக்கூட, அந்நாட்டு ராணு வம் மீறியது. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் என குண்டு வீச தடைசெய்யப்பட்ட பகுதி களில் கூட ராணுவ விமானங் கள் குண்டுகளை வீசின. நிவாரண முகாம் கள் என்ற பெயரில் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி யால் சாகடிக்கப்பட்டனர். சரண் அடைய வந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோது நடை பெற்ற இந்த கொடுமைகளை ஐநா பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆவணப்படுத்தியுள்ளது. இந்த குற்றங்கள் எப்படி நடந்தது? இந்த குற் றத்தை செய்தவர்கள் யார்? அவர் களுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தரப்போகிறோம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளை யும் இலங்கை அரசும் அதிபர் ராஜ பக்சேயும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தொடர்ந்து மறுப்பு தெரி வித்து வருகிறார்.

எனவே இந்த கொடுமைகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண் டும். குற்றமிழைத்தவர்கள் தண் டிக்கப்படவேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கும் மக்கள் அவர்களது இருப்பிடங் களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெறவேண்டும். ஆனால் அந்த பணிகள் மிக தாம தமாகவே நடைபெறுகின்றன. மேலும் இலங்கைத் தமிழ் மக்க ளுக்கு வீடுகள் கட்டித் தர இந் திய அரசு அனுப்பிய உதவிகள் போய் சேரவில்லை. உயர் பாது காப்பு மண்டல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. எல்டிடிஇ அமைப்போடு தொடர்பு இருப்பவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண் டும்.

30 ஆண்டுகால மோதலுக்குத் தீர்வு எப்போது?

தமிழ்மக்கள் சுதந்திரமாக வும் கவுரவத்துடனும் வாழ ஏற் பாடு செய்யவேண்டும். அவர்கள் இழந்த அமைதியான வாழ்க்கை யை மீட்டெடுக்க இயல்பு நிலை திரும்ப வழிசெய்யவேண்டும். போர் முடிந்த பிறகும் தமிழர் பகு தியில் ராணுவம் முகாம்களை அமைத்துவருகிறது. இதற்காக அரசு நிலம் மட்டுமல்ல, தனி நபர்களின் நிலமும் கையகப் படுத்தப்படுகிறது. இது பிரச்ச னைக்கு தீர்வுகாணாமல் மீண் டும் மோதல் ஏற்படவே செய் யும். ராணுவமயமாக்கல் நடவ டிக்கை என்பது தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்லாமல், எதிர் காலத்தில் இலங்கையில் உள்ள அனைத்து மொழிபேசக்கூடிய மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத் தக்கூடியதாகும். எனவே ராணுவ மயமாக்கலை அனைத்து ஜன நாயக சக்திகளும் எதிர்க்கமுன் வரவேண்டும். ராஜபக்சே அர சின் இந்த நடவடிக்கைகள் அர சியல் ரீதியாக தமிழர் பிரச்ச னைக்கு தீர்வு காண தடையாக இருக்கிறது. 30ஆண்டுகளாக நீடித்துவரும் அரசியல் பிரச்ச னைக்கு எப்போது தீர்வு என்ப தும் இப்போதைய முக்கிய கேள் வியாகும்.

இலங்கையில் ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோதும் பல ஆண்டுகளாகவும் அவசர நிலை அமலில் இருந்தது. மோதல் முடிந்த பிறகும் அவசர நிலை முழுவதுமாக விலக்கிக்கொள் ளப்படவில்லை. எனவே இலங்கை அரசின் எதேச்சதிகார நடவடிக் கையை இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இலங்கையில் அமைதியை விரும் பும் சக்திகளும் இணைந்து எதிர்க்க முன்வரவேண்டும்.

இந்தியா- இலங்கை உடன் படிக்கையின் முக்கிய அம்ச மான, தமிழர்களுக்கு அதிக அதி காரங்கள் வழங்கும் 13வது அர சியல் சட்ட திருத்தத்தை அந் நாட்டு அரசு அமல்படுத்தவில்லை. இதுகுறித்து அரசு அளித்த உறுதி மொழியில் இருந்து விலகி விட்டது. இந்தியாவில் மாநிலங் களுக்கு அதிக தன்னாட்சி இல்லை என்றாலும், இருக்கிற அதிகார வரம்புப் படி சட்டம்- ஒழுங்கு என்பதும் காவல்துறை யும் மாநில அரசின் அதிகாரத் தில் உள்ளன. ஆனால் இலங்கை அதிபர் சமீபத்தில் அளித்த பேட் டியில் காவல் துறையும் நிலம் தொடர்பான அதிகாரங்களும் தேசிய அரசாங்க கட்டுப்பாட்டி லேயே இருக்கும் என்று கூறியுள் ளார். இது அதிகார பரவலுக்கு தேவையான நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும். இது போன்ற நடவடிக்கைகள் சிங் களர்- தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவாது. இலங்கை யில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேசினால் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்த புரிதல் ஏற் படும். அவர்களுக்கு அதிகார பர வல் ஏன் வழங்கவேண்டும் என் பதை உணர்ந்து கொள்ளவும் அது உதவும். அத்தகைய பேச்சு வார்த்தை தான் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய அர்த்த முள்ள தீர்வாக இருக்கும். இதை முதலில் இலங்கை அரசு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குடியிருப்பு களை இழந்துள்ள மக்கள் அனை வரையும் அவர்களது பகுதியில் மறுகுடியமர்த்தம் செய்ய வேண் டும். மூன்றாவதாக, ராணுவ மோதலின் போது தமிழர் களுக்கு இழைக்கப்பட்ட கொடு மைகள்- சித்ரவதைகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப் படவேண்டும். நான்காவதாக, வடக்கு மற்றும் வட கிழக்கு பகு திகளில் நிர்வாகத்தில் ராணு வத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும். அவசர கால சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். தமிழர் பகுதியில் ஜனநாயக முறை திரும்பி இயல்பு நிலை ஏற்பட வேண்டும். தமிழ் மக்கள் அதிக அதிகாரத்துடனும் சுதந்திரமாக வும் கவுரவமாகவும் வாழ வழி வகை காண வேண்டும். இதை செய்தால் தான் இலங்கைத் தமி ழர் பிரச்சனைக்கு அர்த்தமுள்ள தீர்வை காண முடியும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரா தமிழில் மொழி பெயர்த்தார்.

இந்த மாநாட்டிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிரேமசந்திரன், சிஐடியு மாநில பொதுச் செய லாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சந்திரா, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.தமிழ்ச் செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக கட்சியின் வடசென்னை மாவட் டச் செயலாளர் டி.கே.சண்முகம் வரவேற்றார். சட்டமன்ற உறுப் பினர் க.பீம்ராவ் நன்றி கூறினார்.
 

நாடாளுமன்றம் முன்பு ஆக. 9 ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை வெறுமனே தமிழர் பிரச்சனையாகவோ, தமிழ்நாடு மாநில பிரச்சனையாகவோ பார்க்காமல், ஒரு அகில இந்திய பிரச்சனையாக அணுக வேண்டுமென இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை பிரகாஷ் காரத் ஏற்றுக் கொண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி தமிழ்நாட்டில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் அதே நேரத்தில் தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பும் இதே பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கொல்கத்தாவில் கூடவுள்ள கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதித்து, இதனை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என உறுதியளித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com