Contact us at: sooddram@gmail.com

 

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேசிய வேலைத்திட்டம் - அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரித்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார். இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றின் ஒத்துழைப் புடன் இதற்கான வேலைத் திட்டங்கள் பரவலான முறையில் துரிதப்படுத்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார். அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இணைந்து வெளிவிவகார அமைச்சில் நேற்று இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது பரிந்துரைகளுக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான நிதியினை திறைசேரியினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்திருப்ப தாகவும் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார்.

கடந்த ஏழு வார காலப்பகுதிக்குள் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றக் கூடிய வேலைத் திட்டங்கள் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுக்கள் குறிப்பிட்டுக் கூறும்படியாக முக்கிய பங்கினை நிறைவேற்றியிருப்பதாகவும் செயலாளர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வு

அத்துடன், காணிப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் நான்காவது ஆணைக்குழுவொன்றினை விரைவில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்ட செயலாளர் வீரதுங்க, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைக் கண்டுவிட முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒவ்வொரு பரிந்துரையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட தாகவே அமைத்திருப்பதனால், இவை தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கூடாக அதன் செயற்பாடுகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசாங்க அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படையினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களது ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.

இச்செயற்திட்டம் தேசிய வேலைத் திட்டமாக கருதப்படுவதனை யடுத்து ஒவ்வொரு செயன்முறைக்கும் காலவ ரையறை, முக்கிய பொறுப்புக் கூறும் நிறுவனம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் முகவர் அமைப்புகள் ஆகியனவும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், பரிந்துரைகளில் இனங்காணப்பட்டுள்ள குறுகிய கால வேலைத் திட்டங்களை பரவலாகவும் துரிதமாகவும் இலகுவாகவும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்குமெனவும் செயலாளர் வீரதுங்க கூறினார்.

மேற்படி செயற்பாடொன்றில் ஈடுபடும் அமைச்சு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் திறைசேரியை தொடர்புகொண்டு தமது செயற்பாடுகள் குறித்து விளக்க மளிப்பதன் மூலம் அதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சமயம் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏற்கனவே வரையப்பட்டிருந்ததனால், இதற்கென விசேட நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தக் கூடிய பரிந்துரைகளை இயலுமானவரை முன்னெடுத்துள்ளோம்.

பரிந்துரைகளின் மிகுதி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் 2013ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்ய திறைசேரி இணங்கவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவினால் 285 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை குறுகிய இடைக்கால மற்றும் நீண்டகால செயற்பாடுகளாக வகுக்கப் பட்டுள்ளன.

அந்த வகையில் குறுகிய காலப்பகுதிக்குள் பாதுகாப்பு அமைச்சும் காணி மறுசீரமைப்பு அமைச்சும் தமது பொறுப்புகளை இயலுமான வரை நிறைவேற்றியுள்ளன வென்றும் அவர் கூறினார்.

காணி மறுசீரமைப்பு அமைச்சு இடம்பெயர்ந்தோரது காணிப்பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வரு கின்றது. எதிர்வரும் 12 மாத காலங்களில் இது தொடர்பான கற்கைகள் முடிவ டைந்ததும் நான்காவது ஆணைக்குழு வொன்று நியமிக்கப்படும். இதன் உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவர். எதிர்வரும் 2 வருடங்களுக்குள் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமெனவும் கூறினார். பரிந்துரைகளில் சுட்டிக்காட் டப்பட்டுள்ள அநேக விடயங்களுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவினூடாகவே தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டமென்பதனையும் அவர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவது பெரும் உந்துசக்தியாக விருக்கும் அதேவேளை, பரிந்துரைகளின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரது கருத்துக்களை உள்வாங்க தாம் தயாரெனவும் அவர் கூறினார்.

பரிந்துரைகளின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி அவர்கள் கடந்த மே மாதமளவில் நியமித்திருந்தார். இக்குழுவினரது சிபாரிசுக்கேற்ப அமைச்சரவைக்கு முன்வைக்கப் பட்டதற்கமையவே இச்செயற்பாடு தேசிய வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய மோதல்களின்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் 98 சதவீதமானோர் தற்போது மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் பீரிஸ் கூறினார்.

மோதல்கள் காரணமாக 2009 மே மாதமளவில் 2 இலட்சத்து 97 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்ததாகவும் +ரிw குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் புலி உறுப்பினர்களுள் 90 சதவீதமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பதாகவும், கண்ணிவெடியகற்றும் பணிகள் முடிவடையும் தறுவாயிலிருப்பதாகவும், மொழிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பாடசாலை மட்டத்திலிருந்தே சிங்கள மாணவர்களுக்கு தமிழும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது கூறினார்.

அமைச்சரவையில்

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது பற்றி அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலும் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் கீழும் பிரிவு பிரிவாக பெரும் எண்ணிக்கையான பரிந்துரைகள் உள்ளன.

குறுகிய, மத்திம, நீண்டகால என்ற அடிப்படையில் பதிர்துறைகள் அமுல்படுத்தப்படவேண்டும். எனினும் குறுகிய கால, மத்திய கால என்ற அடிப்படையில் சுமார் 60 வீத பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்ற நாடுகளுக்கு இவை பற்றி நாம் தெரிவிக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவில் குறித்துறைக்கப்பட்டுள்ள 285 பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்த இயலாத பரிந்துரைகள் ஏதேனும் உண்டா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது:

இருக்கலாம், நாம் இன்னும் அவ்வாறான ஒரு கட்டத்துக்கு வரவில்லை. குறிப்பாக அரசியல் யாப்பு தொடர்பான சில திருத்தங்கள், தேசிய கொள்கைகள் தொடர்பாக வரலாம். எனினும் நாம் அவ்வாறான ஒரு கட்டத்தை இன்னும் எட்டவில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com