Contact us at: sooddram@gmail.com

 

சிரிய அரச படையின் தாக்குதலை தவிர்க்க கிளர்ச்சியாளர்கள் ஆயுத கோரிக்கை

சிரிய அரச படை அந்நாட்டின் மிகப்பெரிய நகரான அல்ப்போ மீது கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சிரிய எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்ஸில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும்படி சர்வதேச நாடுகளை கோரியுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத் படுகொலை ஒன்றுக்கு முயற்சிப்பதாகவும் எனவே அலப்போவில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்குமாறும் சிரிய தேசிய கவுன்ஸிலின் தலைவர் அப்துல் பாசித் செய்தா எச்சரித்துள்ளார். ஜெட் விமானங்கள் மற்றும் டாங்கர்களின் தாக்குதலை தடுக்க எமக்கு ஆயுதம் வேண்டும். தற்போது எமக்கு அதுதான் தேவைஎன்று செய்தா ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அரபு சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சுயாதீன சிரிய படைக்கு ஆதரவளிக்கும் படியும் அவர் அழுத்தம் கொடுத்தார். சிரிய அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு சர்வதேச நாடுகள் தற்போது நேரடியாக எந்த ஆயுத உதவியும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கிளர்ச்சியாளர்களின் சுயாதீனப் படைக்கு சம்பளம் வழங்கும் திட்டத்தை வளைகுடா நாடுகள் கடந்த ஏப்ரலில் கொண்டுவந்தது. அந்த நிதி கறுப்பு சந்தையில் ஆயுதம் வாங்க உதவும் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் யெமனின் அமைதி முயற்சி சிரியாவில் கைகூடாது என செய்தா குறிப்பிட்டுள்ளார்.

யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை பதவியிலிருந்து அகற்றியது போல் சிரியாவில் செய்ய முடியாது. இங்கு படுகொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன. பஷர் அல் அஸாத் அதற்கு திட்டமிட்டு வருகிறார். அவர் ஒரு குற்றாவளி. அவருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடாது என்றும் செய்தா குறிப்பிட்டார்.

சிரிய எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்ஸில் ஏற்கனவே சிரியாவில் இடைக்கால அரசொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தலைவர் செய்தா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிரியாவின் வர்த்தக நகரின் மீது அரச படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து அவதானமாக இருப்பதாக ஐ. நா. விசேட தூதுவர் கொபி அனான் குறிப்பிட்டுள்ளார். இந்த இராணுவ குவிப்பானது சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நிர்ப்பந்தத்தையே காட்டுகிறது.

சிரய இராணுவ யுத்த டாங்கிககள் அலப்போ நகரின் தென்மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்துவருவதாக செயற்பட்டாளர்கள் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தனர். இங்கு கிளர்ச்சியாளர் பகுதிக்கு நாள் முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதோடு இராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்து தாக்குதல்களை நடத்துகின்றன என்று செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அலப்போ நகரின் சலாஹுத்தீன் மற்றும் ஹம்தனியா பகுதிகளில் வன்முறைகள் பதிவாகியுள்ளன. எனினும் அங்கு கிளர்ச்சியாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் அலப்போ நகரின் மூன்றிலிருந்து மூன்றரைப் பங்கு பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக நகரின் வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் கிளர்ச்சியாளர்களே அதிக்கம் செலுத்துகின்றனர்.

எனினும் அலப்போவில் சிரிய இராணுவத்தின் தாக்குதலில் பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுவதை தாம் கண்டதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்கள் போதிய ஆயுதங்கள் இன்றி இருப்பதாக பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அலப்போ நகரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வெளியேறிவ வருகின்றனர்.

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த கிளர்ச்சியாளர்கள் தமது தீவிரவாத செயற்பாடுகளுக்காக அலப்போ நகரை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சிரிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று அரச பத்திரிகையான அல்வதான் வெளியிட்டுள்ள செய்தியில் அலப்போ மோதல் அனைத்தையும் விட பிரதானமானது என குறிப்பிட்டுள்ளது

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரொவ் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கூறியதாவது, அலப்போவில் சோகம் தொடரும் நிலையில் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பாளர்களை சிரிய அரசு ஏற்கும் என எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல என கூறியுள்ளார். எனினும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ரஷ்ய அரசு ஆலோசிக்கவில்லை என லவ்ரொவ் குறிப்பிட்டார்.

சிரியாவில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜுலை 18 ஆம் திகதி தலைநகர் டமஸ்கஸ்ஸில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டு தாக்குதலில் சிரிய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் நால்வர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து சிரிய சுயாதீனப் படை தலைநகர் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். எனினும் சிரிய இராணுவம் தலைநகரில் இருந்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்தனர். மறுப்புறத்தில் சிரியாவின் பல எல்லை முகாம்களையும் கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். துருக்கி, ஈராக் எல்லையின் பெரும் பகுதியை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்க அறிவித்தனர்.

இதனிடையே அயல் நாடான ஜோர்தான் சிரிய அகதிகளுக்கான தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. ஜோர்தான் அரசினால் அமைக்கப்பட்டுள்ள சாதரி முகாமில் 10 ஆயிரம் அகதிகள் தங்க முடியும் என்று ஐ.நாவின் அகதிகளுக்கான நிலையம் கூறியுள்ளது. எனினும் இந்தமுகாமில் ஒரு இலட்சம் அகதிகள் தங்க வசதிசெய்யப்பட்டிருப்பதகா கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிரியாவில் இருந்து 15000 அகதிகள் ஜோர்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011 மார்ச்சில் ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இதுவரை 20,000 பேரளவில் கொல்லப்பட்டிருப்பதாக சிரியா தொடர்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு கூறியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com