Contact us at: sooddram@gmail.com

 

பகிரங்க அரசியல் விவாதத்திற்கு வரத்தயாரா? ஸ்ரீரங்கா எம்பியிடம் ஜ. ம. மு. கேள்வி

கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் தொலைகாட்சி ஊடகவியலாளரான ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டும், அதில் அவரை கலந்து கொள்ளுமாறு கோரியும், பகிரங்க அழைப்பை ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக கட்சியின் ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீரங்கா எம்பியின் நலன் கருதி, அவர் தன்னை தயார் படுத்தி கொள்வதற்காக குறிப்பிட்ட விவாதத்தில் ஜமமு கலந்துரையாட விரும்பும் விடயங்கள் பற்றியும் ஸ்ரீரங்கா எம்பிக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே சமயத்தில் அரசியல்வாதியாகவும், ஊடகவியலாளராகவும் இருந்துகொண்டு நீங்கள் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். உண்மையில் உமது நிகழ்ச்சி நடைபெறும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், அந்த தொலைக்காட்சி மற்றும் பண்பலை அலைவரிசைகள், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தலைவர், நிர்வாகத்தினர், திறமைமிக்க இளம் மற்றும் அனுபவமிக்க நிகழ்ச்சி மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், தொழில்நுட்பகலைஞர்கள் ஆகியோர் தொடர்பில் நாம் நன்மதிப்பு கொண்டுள்ளோம். சக்தி தொலைக்காட்சி, பண்பலை அலைவரிசைகளுடன் எமக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால், ஊடக தர்ம நியாயங்களையும் மீறி நீங்கள் தன்னிச்சையாக நடத்துகின்ற, அரசியல் விவாத நிகழ்ச்சியே எமதும், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களினதும் கடும் அதிருப்திகளை சந்தித்துள்ளது.

நீங்களே கேள்விகளையும் கேட்டு, அதற்கான பதில்களையும் நீங்களே வழங்கி, நீங்களே அதிகம் உரையாடும் போக்கில் உமது நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. உம்மால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் பிரபல தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முன்னணி தமிழ் ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உமது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை. பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர்களை கடும் சொற்களால் தனிப்பட்டரீதியாக விமர்சனம் செய்கிறீர். அதேவேளையில் உம்முடன் இசைந்து செல்லும் ஒருசிலருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறீர். இவை ஊடக நியாயங்களை கடுமையாக மீறும் செயலாகும்.

ஆகவே நடுநிலையாளர் முன்னிலையில் நடத்தப்படக்கூடியதாக இந்த பகிரங்க நேரடி விவாதத்திற்கு வரும்படி உமக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். உமது பதிலின் பின்னர் உம்முடன் எமது கட்சியின் சார்பாக விவாதிக்கும் பிரதிநிதியை நமது கட்சி நியமிக்கும். உங்களுக்கு வாக்களித்து உம்மை தெரிவு செய்த நுவரேலியா மாவட்ட வாக்காளர்கள் மத்தியிலிருந்து உம்மிடம் கேள்வி கேட்பதற்கு ஆயிரகணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களது கேள்விகளையும், பின்வரும் நமது கேள்விகளையும் நாம் இந்த உத்தேச அரசியல் விவாதத்தில் உம்மிடம் எழுப்ப உள்ளோம். ஊடக நாகரீகத்தின் அடிப்படையில் உங்கள் நன்மையை கருதி எமது முக்கியமான சில கேள்விகள் உமக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.

நீங்கள் தற்போது ஆளும் கட்சி எம்பீயா அல்லது எதிர்க்கட்சி எம்பீயா? உமது கட்சியென சொல்லிக்கொள்ளும் பிரஜைகள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் அரசியல் குழு, மத்தியக்குழு அங்கத்தவர்கள் யார்? உமது கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே உள்ளது? உமது கட்சியின் ஸ்தாபகர் யார்? நீங்கள் எப்போது உமது கட்சியின் அங்கத்தவத்தை பெற்றீர்? நுவரெலிய மாவட்ட எம்பியான உமக்கு நுவரெலிய மாவட்டத்தில் அலுவலகங்கள் இருக்கின்றனவா? இருப்பின் அவற்றின் விலாசங்கள் என்ன? உமது கட்சிக்கு தொழிற்சங்க பிரிவு இருக்கின்றதா? இருப்பின் மலையகத்தில் இருக்கின்ற தொழிற்சங்க கிளை அலுவலகங்களின் விலாசங்கள் என்ன?

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இதொகா, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் எமது கட்சி ஆகிய தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, சிதறடிக்க வேண்டுமென உமக்கு எவராவது அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்களா? கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில்,

நுவரெலிய மாவட்ட எம்பியான உமது கட்சி ஏன் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடவில்லை? உமது கட்சி எந்த அடிப்படையில் வட மாகாண உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டது? வடக்கில் உமது கட்சி போட்டியிட்ட குறிப்பிட்ட பிரதேச சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏன் போட்டியிடவில்லை? வடக்கில் உமது கட்சி பெற்ற ஒட்டு மொத்த வாக்கு தொகை என்ன? 18ம் திருத்தத்திற்கு நீங்கள் ஆதரவாகவா அல்லது எதிர்த்தா வாக்களித்தீர்? 2010ம் வருடம் சித்திரை மாதம் தெரிவு செய்யப்பட்ட இந்த பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆகியவை தொடர்பில் இதுவரையில் எந்தெந்த சட்டமூலங்களுக்கு எவ்விதமாக வாக்களித்துள்ளீர்?

நீங்கள் அரசாங்க தூதுக்குழுவில், எத்தனைமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்? இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐநா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு முதன் முறையாக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி தூதுக்குழுவில் நீங்கள் எந்த அடிப்படையில் இடம் பெற்றீர்? நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான, 'தாருன்யட ஹெட' என்ற அமைப்பில் நீங்கள் வகிக்கும் பதவி என்ன?

நீங்கள் தற்சமயம் சொந்த வீட்டிலா அல்லது வாடகை வீட்டிலா வசிக்கிறீர்கள்?
நீங்கள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் அரசாங்க அமைச்சு ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டதா? 2011ம் வருடம் மார்ச் மாதம் 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற உமது வாகன விபத்தில் பலியான 36759 என்ற இலக்கம் கொண்ட ஜெயமினி உதய புஷ்பகுமார என்ற பொலிஸ் சார்ஜன்டின் மரணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com