Contact us at: sooddram@gmail.com

 

தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் வட மாகாணத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவோம் - டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் மூன்றிலிருந்து ஐந்து வருடத்திற்குள் ஒரு குட்டி ஜப்பானாகவோ அல்லது குட்டி சிங்கப்பூராகவோ வட மாகாணத்தை மாற்றுவோம். இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் திறன் அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே. என். டக்ளஸ் தேவானந்தா கூறினார். காரைதீவு,பாலையடி, ஸ்ரீவாலவிக்னேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் அமைச்சர் டக்ளஸின் சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காரைதீவு பாலையடி ஸ்ரீ வாலவிக்னேஸ்வரர் ஆலய புனருத்தாபன குழுத்தலைவர் இ. தவராசா தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது.

வைபவத்தில் ஆலய செயலாளர் அ. குமரநாதன் அமைச்சருக்கு வாழ்த்துப் பாடி கையளித்ததுடன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைப்பாகை அணிவிக்க ஆலயத் தலைவர் இ. தங்கராசா பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

அதேவேளை, ஆலயம் சார்பில் அமைச்சருக்கு ஆலய பொருளாளர் சி. முத்துலிங்கம் ஈழத்து மக்கள் திலகம் எனும் பட்டத்தையும் வழங்கினார்.

இந்த வைபவத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா,பன அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து உரையாற்றுகையில்,

எனது கொள்கையாதும் ஊரே யாவரும் கேளீர்என்பது தான். அந்த வகையில் எங்கு எமக்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அங்கிருந்து மக்களுக்கான எம் சேவையை ஆரம்பிப்போம்.

தேவையுள்ள மக்களுக்கு நிச்சயம் உதவுவோம். அவர்களுக்கு பக்கபலமாக இருப்போமென்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

எனவேதான் வட மாகாண சபை தேர்தலில் சரியானவர்களை தெரிவு செய்யுங்களென நாம் மக்களுக்கு சொல்லிவருகின்றோம்.

இந்த அடிப்படையில் வடக்கு மக்கள் எமக்கு அந்த ஆணையைக் கொடுத்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் வட மாகாணத்தை செல்வம் கொழிக்கும், வளம் கொழிக்கும் மாகாணமாக மாற்றுவோம்.

அப்போது ஒரு குட்டி ஜப்பானாகவோ, குட்டி சிங்கப்பூராகவோ வட மாகாணம் மாறுமென்பதும் திண்ணமாகும்.

அதேவேளை, ஜனாதிபதியின் ஆசியுடன் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் கூட எமது மக்களை மீளக் குடியமர்த்த முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குண்டு.

எனினும், மக்கள் எம்முடனிருக்க வேண்டும். நாம் மக்களை விட்டு ஓடவோ, மக்களை படுகுழிக்குள் தள்ளவோ போவதில்லை. அவர்களது முதுகிலேறி சவாரி செய்ய முனையவும்மாட்டோம்.

எமது கொள்கை.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்கில் ஒரு அலகு என்பதே எம்கொள்கையெனக் கூறிவந்தோம்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? பிரிய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த விடயத்தை எப்படி அணுக வேண்டுமென்பது எமக்குத் தெரியும்.

எனவேதான் நீதிமன்ற ஏற்பாட்டின் மூலம் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட போதும் நாம் மெளனமாகவே இருந்தோம். ஏனெனில், இணைப்பதற்கான வாய்ப்புகள் உண்டென்பது எமக்குத் தெரியும்.

வடக்கும் கிழக்கும் இன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இணைப்பைத் தடுப்பதற்கு அரசு முயற்சியெடுக்கும். அதனால் அரசைப் பிழைகூற முடியாது.

எமது பலவீனத்தில் குறைப்பாடுகளிலிருந்து கொண்டுதான் நாம் குறை கூறுகின்றோம்.

இந்திய அரசாகவிருந்தாலும் சரி, இலங்கை அரசாகவிருந்தாலும் சரி தங்கள் நலனிலிருந்து கொண்டுதான் இவற்றைப் பார்க்கின்றன. எனவே நாம் தான் நமது நலன்களை முன்னிறுத்த வேண்டும்.

முதலைக்கண்ணீர்

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கூடாகத்தான் எமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்றும் இது அதற்கான ஆரம்பப்படியென்றும் நாம் சொல்லி வந்தோம்.

எம்மைத்தவிர எல்லோரும் இதற்குமாறுபட்ட கருத்தையே கூறிவந்தனர். சுயநல அரசியலுக்காக மக்களின் நரம்புகளை முறுக்கேற்றி இரத்தத்தை சூடாக்கிவிட்டு இன்று முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் கூட அதனை உழுத்துப் போனது, சோரம் போனது எனக் கூறவும் தவறவில்லை.

நமது ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பொன்னான வாய்ப்பே இலங்கை- இந்திய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் இன்றைய நிலை வந்திருக்காது. எவ்வளவோ முன்னேற்றகரமாக இருந்திருக்க முடியும்.

நடந்தது நடந்துவிட்டது. சரி இனியாவது சரியான திசையில் செல்வோமென்றால் அப்படியுமில்லை.

ஆனால், வெளிநாடுகள் பார்க்கிறது, கூர்மையாகப் பார்க்கிறது கிட்ட வந்து பார்க்கிறது என்றெல்லாம் அரசியலில் பல கதைகளையும் கூற அவர்கள் முற்படுகின்றனர். நம்பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும்.

பத்திரிகைகள்.

பத்திரிகைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. சவப்பெட்டிக் கடைகள் போன்றே அவை உள்ளன. தமிழ் ஊடகங்களும் இதே நிலையிலேயேயுள்ளன.

சரியான வழிகாட்டலை மக்களுக்கு காட்டுவதற்குப் பத்திரிகைகள் தயாரில்லை. வியாபார விளம்பர நோக்கிலேயே அவையுள்ளன என்றும் அவர் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com