Contact us at: sooddram@gmail.com

 

13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்த இடமளியோம் இணக்கப்பாட்டு அரசியலினூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலட்சியத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி செயற்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக நாம் கடைப்பிடித்து வரும் இணக்க அரசியல் கோட்பாட்டின் மூலம் பல விடயங்களை சாதித்துள்ளோம். வடக்கிற்கு ஒரு மாகாணசபை தேவை என்ற எமது நீண்டகால கனவு நிறைவேற இருப்பது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம் என இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்த அமைச்சர், நாம் அநாவசியமாக பிரச்சினைகளை உருவாக்குவதை தவிர்த்துக் கொண்டு அவதானமான முறையில் அரசியலை நடத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

நாம் ஒவ்வொரு செயற்பாட்டினையும் தீவிரமாக சிந்தித்த பின்னரே நடைமுறைப்படுத்துகின்றோம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள் ஆனால் எமது முயற்சிகள் முழம் ஏற சாண் மட்டுமே சறுக்குகிறது. இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்பதில் வெற்றி கண்டுள்ளோம் என்று கூறினார்.

எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்த அமைச்சர், யார் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்பதை நாம் சரியான சந்தர்ப்பத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.

மாகாணசபை மூலம்தான் நாம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி அவர்களின் தேவைகளை தீர்த்துவைக்க முடியுமென்பது எமது நீண்டகால கனவாகும். எங்கள் மக்களின் பிரச்சினையை நாம் தான் தீர்த்து வைக்க வேண்டுமே ஒழிய, எமது பிரச்சி னைகளை தீர்த்து வைக்க மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, எமது இந்த இலட்சி யக்கனவை நிறைவேற்றுவதற்கு மக்களின் பூரண ஆதரவு எமக்கு அவசியம் என்று அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நாம் நிச்சயம் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதன் மூலம் வட மாகாண சபையின் அதிகாரத்தை கைப் பற்றினால் இன்னும் 3 முதல் 5 வருடங் களில் வடமாகாணத்தை வளம்மிக்க மாகாணமாக மாற்றி அதனை தேனும் பாலும் ஊற்றெடுக்கும் ஒரு புண்ணிய பூமியாக மாற்றிவிட முடியுமென்ற அசையாத நம்பிக்கை எனக்கு இருக்கிற தென்று அமைச்சர் தேவானந்தா உறுதியாக அறிவித்தார். எமக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அவர்கள் ஒரு தடவைடக்ளஸ் உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் தாராளமாக கேளுங்கள், நான் உங்கள் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்என்று தமக்கு வாக்குறுதி அளித்தாக கூறினார்.

ஜனாதிபதி அவர்கள் ஒரு உன்னதமான தலைவர். அவர் தமிழ் மக்கள் சுதந்திர மாகவும், கெளரவமாகவும் தங்கள் சொந் தப் பிரதேசத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் உன்னத இலட்சியத்துடன் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவ தென்று எடுத்த முடிவை நாம் மனமார பாராட்டுகிறோம் என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

ஒரு தடவை தன்னைப்பற்றி மற்ற வர்களிடம் அபிப்பிராயம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவையில் உள்ள ஒரே ஒரு தமிழ் அமைச்சரை தான் இழக்க தயாராக இல்லையென்று கூறியதில் இருந்து நான் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எவரும் நினைத்துவிடக் கூடாது.

எங்கிருந்தாலும் என்னை தனது அமைச்சரவையில் தொடர்ந்தும் வைத்திருப்பேன் என்பதையே ஜனாதிபதி இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக வழிமுறையிலேயே நாம் எங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும். கடந்த காலத்தில் ஆயு தப் போராட்டத்தின் மூலம் உரிமைகளை பெறுவதற்கு முயற்சித்தவர்களுக்கு ஏற்பட்ட நிலையை நாம் சற்று மனதில் எடுத்து யதார்த்தமாக சிந்தித்து செயற்படுவது அவசியமென்று கூறினார்.

உரிமைப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் வடமாகாணசபைத் தேர்தலில் இணைந்து தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் தேவானந்தா, எமது மக்கள் சுதந்திரமாகவும், கெளரவமாகவும் வாழ்வதற்கு மாகாணசபைத் செயற்பாடு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது கட்சி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்ததுடன், நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வகையிலும் பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம். அரசாங்கம் அதனை பலவீனப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்தால் அதனையும் எதிர்ப்பதற்கு தயங்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

எங்கள் பகுதியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் தொடர்ந்தும் இருக்க முடியாது. அவை படிப்படியாக அகற்றப்படும் என்றும் உறுதியாக அறிவித்தார். எல்.ரி.ரி.ஈ.யின் அராஜக நிர்வாகத்தின் போது சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் இழந்து பல்லாண்டு காலம் வேதனையில் மூழ்கியிருந்த வடபகுதி மக்கள் இன்று தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தையும், அமைதியான சூழலையும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். அவர்களின் இந்த மகிழ்ச்சியை நாம் சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம். இதை வைத்துக் கொண்டு சிலர் வடபகுதியில் கலாசார சீரழிவு இடம்பெறுகிறதென்று தப்பபிப்பிராயம் கொள்வது தவறு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தல் என்பது எனது நெடுநாளைய கனவு, எமக்கு கிடைக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை சாதக மாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் சாதமாக பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரி வித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com