Contact us at: sooddram@gmail.com

 

புத்தகயா அருகே அடுத்தடுத்து

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயா மாவட்டத்திலுள்ள மகாபோதி பெளத்த வழிபாட்டுத்தலம் அருகே வெவ்வேறு இடங் களில் 9 குண்டுகள் தொடராக வெடித்தன. கோயிலுக்குள் ஐந்து குண்டுகளும், கோயில் வளாகத்திற்குள் மூன்று குண்டுகளும் சுற்றுலா பயணிகள் பஸ்ஸ¤க்கு அடியே ஒரு குண்டும் வெடித்துள்ளது. இதே நேரம் வெடிக்காத நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மேலும் இரு குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பிக்குகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த இரு பிக்குகளும் திபெத், மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. அடுத்து சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 4 குண்டுகள் வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குண்டுகளால் மகாபோதிக்கு சேதம் ஏற்படவில்லை. 9 குண்டுகளுமே வீரியம் குறைந்த குண்டுகளாக இருந்ததினால் சேதங்கள் ஏற்படவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த தலத்தின் மேற்கு பகுதியில் புனித போதி மரம் (அரச மரம்) உள்ளது. அந்த அரச மரத்தடியில் தியானம் செய்த போது கெளதம புத்தர் ஞானம் பெற்றார்.

துறவியாக நாடெங்கும் சுற்றித்திரிந்த அவருக்கு அந்த போதி மரத்தடியில்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இதையடுத்தே அந்த இடத்தில் மகாபோதி கோவில் கட்டப்பட்டுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 60 மைல் தொலையில் உள்ள இந்த இடம் உலகம் முழுவதும் வாழும் பெளத்த மதத்தவர்களுக்கும் முதன்மையான புனிதத் தலமாக திகழ்கிறது. திபெத், இலங்கை, மியான்மர், ஜப்பான், சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெளத்த மதத்தினர் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் இந்த கோவிலில் எப்போதும் பெளத்தமத துறவிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் மகாபோதி தலத்துக்கு வரும் புத்த மதத்தினர் அங்கு தங்கி இருந்து வழிபாடு செய்ய வசதிகள் செய்யப்பட் டுள்ளன. அதற்கு ஏற்ப மகா போதி தலம் மிகப் பெரிய வளாகத்துடன் அமைக்கப் பட்டுள்ளது.

மகாபோதிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உளவுத்தறை எச்சரித்திருந்தது.

மகாபோதி கோவிலில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களை கண்காணிக்க கூடுதல் இரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டன. என்றாலும், அதையெல்லாம் மீறி இன்று மகாபோதி கோவிலுக்குள் நாச வேலை நடந்துவிட்டது.

நேற்று அதிகாலை மகாபோதி கோவி லில் சிறப்பு வழிபாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது 5.40 மணியளவில் மகாபோதி தல வளாகத்துக்குள் ஒரு குண்டு வெடித்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

அடுத்த நிமிடம் மகாபோதி கோவில் வளாகத்துக்குள் மேலும் 4 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. அதே சமயத்தில் தெரிகா துறவிகள் மடம் பகுதியிலும் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதனால் பயந்துபோன பக்தர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினார்கள். அந்த சமயத்தில் 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள புத்தர்சிலை அருகில் ஒரு குண்டு வெடித்து சிதறியது.

குண்டு வெடிப்புகளில் சிக்கி பெளத்த துறவிகள், பக்தர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடிடியாக மகத் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகிறது.

மகாபோதி தலத்தில் வெடித்த 9 குண்டுகளும் மிக, மிக சக்தி குறைந்தவை. இதனால் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

குண்டு வெடிப்பில் மகாபோதி தலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கோவிலில் உள்ள போதிமரம் குண்டு வெடிப்பில் இருந்து தப்பி பாதுகாப்பாக உள்ளது. அந்த மரத்துக்கு அருகில் 2 குண்டுகள் வெடித்த போதிலும், மரத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

கோவில் கருவறை பகுதி பாதுகாப்பாக உள்ளதாக டி. ஐ. ஜி. ஹுஸ்னன்கான் தெரிவித்தார். குண்டுகள் வெடித்த இடங்களில் பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் முற்றுகையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, வெடிகுண்டு நிபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அவர்களும் உள்ளூர் பொலிஸாரும் ஒருங்கிணைந்து மகாபோதி கோவில் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது 2 குண்டுகள் வெடிக்காமல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த 2 குண்டுகளையும் கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றை உடனடியாக செயல் இழக்க செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த குண்டுகள் அனைத்தும் தனித்தனி பைகளில் வைத்து எடுத்துவரப்பட்டுள்ளது.

மகாபோதி கோவிலுக்கு வரும் ஒவ்வொரு துறவியும் பக்தரும் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அப்படி இருக்கும் போது, 10 வெடி குண்டுகள் எப்படி கோவிலுக்குள் எடுத்து வரப்பட்டன என்பது பொலிஸாருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மடத்தில் தங்கியுள்ள பெளத்த துறவிகள் யாராவது குண்டுவெடிப்புக்கு உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரதான வாசல் மூடப்பட்டு விட்டது. கோவிலை சுற்றி கூடுதல் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய விசாரணைக் குழுவினரும் டெல்லியில் இருந்து பீகாருக்கு விரைந்துள்ளனர்.

மகாபோதியில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உடனடியாக புறப்பட்டு புத்த கயா சென்றார். உயர் அதிகாரிகள், உயர் பொலிஸாரும் புத்த கயாவில் முகாமிட்டுள்ளனர். குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் தீவிரவாதிகள் என்பது உறுதியாகியுள்ளது.

எந்தத் தீவிரவாத இயக்கம் இந்த நாச வேலையில் ஈடுபட்டது என்று தெரியவில்லை. இதுவரை எந்த இயக்கமும் குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இதுபற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெளத்த மதத்தினர் புத்தகயா குஷிநகர், லும்பினி சாரநாத் ஆகிய 4 இடங்களில் யாத்திரை செல்வதை கடமையாக வைத்துள்ளனர். புத்த கயாவில் குண்டுகள் வெடித்ததை தொடர்ந்து ஏனைய பெளத்த தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதுபோல, நாடெங்கும் உள்ள புத்த ஆலயங்களும் விழிப்புடன் இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டுள்ளன. பெளத்த துறவிகளின் மடங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கூறுகையில்:- புத்தகயாவில் நடந்தது சந்தேகமின்றி பயங்கரவாதத்தாக்குதல்தான். தற்போது கோயில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடக்கின்றது என்றார்.

அறிக்கை கேட்கிறது உள்துறை குண்டு வெடிப்பு

நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு முதல்வர் நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார். புத்தகயாவில் நடந்த குண்டு வெடிப்பு கோழைத்தனமான ஒரு செயல் என்றார்.

சம்பவ இடத்திற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை இந்திய முஜாஹிதின் தீவிரவாத அமைப்பே நடத்தியுள் ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை, பெங்களூர் உட்பட மேலும் எட்டு நகர்களில் தாக்குதல் நடத்துவாக தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com