Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு தேர்தல் களம்

வடக்கு விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர்; ஜனாதிபதியின் இணக்கத்துடன் நானே தீர்மானிப்பேன்!....

- டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எமக்கே ஆணை வழங்குவார்கள். அவ்வாறு ஆணை கிடைக்கும் போது தமிழ் பேசும் மக்களின் வடக்கு தேசத்தின் விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பதை எமது மக்களின் விருப்பங்களை ஏற்று நானே தீர்மானிப்பேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் முழுமையாக நிமிர்ந்தெழும் காலம் நெடுந்தூரமில்லை. அதற்கான எமது இலட்சியக் கனவுகள் நிறைவேறும் பொற்காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது. எமது மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திர பிரiஜகளாக, சகல உரிமைகளும் பெற்று முகமுயர்த்தி வாழும் காலச்சு+ழலே நாம் விரும்பும் இலட்சியக் கனவாகும்.

தமிழ் பேசும் மக்கள் தோற்றுப்போன சமூகம் அல்ல. இதை மெய்ப்பித்து, அடைய வேண்டிய எமது அரசியல் இலக்கின் வெற்றியைக் கொண்டாடி மகிழ, நாம் ஏந்த வேண்டியது அனுபவத்துடன் கூடிய அறிவாயுதம் மட்டுமே. நாம் செல்ல வேண்டியிருப்பது மதிநுட்பம் நிறைந்த, நடைமுறைசாத்தியமான வழி முறை நோக்கியே.

எமது மக்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாக வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட நாம் இன்னமும் எடுக்கவேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுத்தும், உழைத்தும் வருபவர்கள் என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

நடை முறை சாத்திய யதார்த்த வழி நின்று யாருடன் பேசி நாம் உரிமைகளைப் பெற முடியுமோ, அதே அரசோடு தொடர்ந்தும் நாம் உறவுக்குக் கரம் கொடுத்து வருபவர்கள்.

எமது மக்களின் உரிமைக்காக நாம் சுமந்திருக்கும் எமது உறுதி மிக்க உணர்வுகளும், அரசாங்கத்துடன் உறவைக் கொண்டிருக்கும் எமது வலிய கரங்களும் ஒன்றிணைந்தே இதுவரை எமது மக்களின் ஒளிமயமான வாழ்க்கைக்காக திடம் கொண்டு உழைக்க முடிந்திருக்கிறது.

உரிமை என்பது வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான பொழுது போக்கு விடயமல்ல. அது அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் மாபெரும் சொத்து.

வெற்று, வீரப் பேச்சுக்களால் எதையும் பெற்று விட முடியாது. அர்த்தமற்ற எதிர்ப்புக் கோசங்களால் எமது மக்கள் ஒருபோதும் நிமிர்ந்தெழவும் முடியாது. இதுவே யதார்த்தமாகும். ஆகவே, இதுவரை தவறான அரசியல் தலைமைகளை தேர்ந்தெடுத்ததால் தோற்றுப்போன வழிமுறைகளை படிப்பினையாகக் கொண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சரியானவர்களைத் தெரிவு செய்யுங்கள்.

எமது மக்களின் துன்ப, துயரங்களில் பங்கெடுத்து வருபவர்களாகிய நாம் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களை வெல்ல வைப்பதன் மூலமே எமது மக்களுக்கான இலட்சியக் கனவுகள் நிறைவேறும்.


மாவட்ட ஆட்சி போதுமென்றிருந்த தமிழரசு கட்சியினர் இன்று மாகாண சபை கேட்கின்றனர் - ரெமீடியஸ்

'மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்" 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாகாணசபை பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "காணி, பொலிஸ் அதிகாரம் பற்றி பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை என்று கூறியது உண்மையா? காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட போவதாக கூறியது உண்மையா? எது உண்மை?" என அவர் கேள்வி எழுப்பினார்.

'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொய்யான பிரசாரங்களை செய்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான் ஆறு ஏழு மாதங்கள் ஒரு அங்கத்தவனாக இருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மாநகர சபையில் பட்ட துன்பங்கள் ஏராளம். மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க வற்புறுத்தப்பட்டுள்ளேன்.

அபிவிருத்தி திட்டங்களிலோ, ஆதரவு வழங்கக்கூடாது. எதிர்க்கட்சியாக பணியாற்றுமாறும் கட்டாயப்படுத்தினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எந்தவித கொள்கை கோட்பாடும் அற்றவர்கள். எதிர்ப்பது மட்டுமே அவர்களது வாழ்க்கையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை, அரசாங்கத்தின் கட்சி என்ற வகையில் பல அபிவிருத்திகளை சந்தித்துள்ளது. மக்களுக்கு உரிமை வேண்டுமென்று கேட்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்', மக்களுக்கு உரிமையை தருவதற்கு தயாராக இருக்கின்றார்.

அந்த உரிமை மக்களுக்கானது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கானது அல்ல. சம்பந்தனுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜhவுக்கோ அல்லது சுமந்திரனுக்கோ அல்ல. யாழ்.

மாவட்டத்தில் சுதந்திரமாக வாழும் மக்களுக்கே அந்த உரிமை தேவை, நாங்கள் நிரந்தரமாக வாழ்வதற்கு இடம்வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும். அதனை தீர்மானிக்க வேண்டியது மக்களாகிய நீங்களே" என்றார்.


மாவை இல்லாமை இறுக்கமான சூழலையே ஏற்படுத்தும் யாழ். மக்களின் விருப்பத்தை அலட்சியம் செய்த இரா. சம்பந்தன் - பரஞ்சோதி

கொழும்பில் உள்ள அரசியல் தலை மைகளின் அழுத்தம் காரணமா கவே இரா.சம்பந்தர் சீ. வி. விக் னேஸ்வரனை தெரிவுசெய்ததாக தமிழரசுக் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர்; பரஞ்சோதி குற்றம் சுமத்தி யுள்ளார்.

வடமாகாணத்தில் அதிகமான மாகாண சபை உறுப்பினர்களை கொண்ட யாழ் மாவட்ட மக்களின் விருப்பத்தை இரா.சம்பந்தர் நிராகரித்தமையானது தமக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கவலை வெளியிட்டார்.

தமிழரசுக் கடசியின் யாழ் கிளை மற்றும் தொகுதி கிளையைச் சார்ந்த பலரும் தந்தி அவசரக்கடிதம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் விடுத்த வேண்டுகோளை தமிழரசுக் கட்சியின் தலைமை நிராகரித்ததால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அடங்கலாக அனைவரும் விரக்திக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பரம்சோதி சுட்டிக்காட்டினார்

இதனால் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத ஒரு சு+ழல் ஏற்பட்டுள்ளது போன்று தாம் உணர்வதாக தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அச்சம் வெளியிட்டார்

கூட்டமைப்பு மேட்டுக்குடி அரசியலில் ஈடுபடுவதாக அதன் மீது வைக்கப்படும் விமர்சனத்தினை சீ.வி. விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவு செய்து அவ் விமர்சனத்தை உறுதிப்படுத்தியுள் ளதாக தமது ஆதங்கத்தையும் அவர் வெளியிட தவறவில்லை.

இலகுவில் யாரும் அணுகமுடியாதவரும் அரசியல் அனுபவமுமற்ற விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ததினால் தமிழ் மக்கள் தமது அரசியல் நோக்கங்களை எட்டுவதில் பின்னடைவு ஏற்படுமென அவர் எதிர்வு கூறினார்

வடமாகாணசபையில் கூட்டமைப்பு களம் இறங்க இரண்டு காரணங்கள் என தெரிவித்த அவர் ஒன்று வடமாகாண அபிவிருத்தியை மையமாக கொண்டது மற்றையது தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்றும், இவ்வாறான ஒரு சு+ழவில் சாதாரண மக்களும் இலகுவில் அணுக கூடியவரும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சவாலாக விளங்க கூடியவருமான மாவை சேனாதிராசா இல்லாமையானது இறுக்கமான ஒரு சு+ழலையே உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com