Contact us at: sooddram@gmail.com

 

"தமிழீழம்" தான், தம்பி பிரபாகரனின் பலமும், பலவீனமும்..! - சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் "புளொட்" தலைவர் சித்தார்த்தன் தெரிவிப்பு!! 

தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று 'புளொட்' தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்.., 

"கடந்த 25வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த அரசியல் தலைவருமான அமிர் அண்ணர் (அமிர்தலிங்கம்) இறந்த நாள் தொடக்கம் எமது தலைவர் உமாமகேஸ்வரன் இறந்த நாள் வரையான காலப்பகுதியை 'வீரமக்கள் தினமாகக் கடந்த 25 வருடங்களாக நினைவுகூர்ந்து வருகின்றோம். இன விடுதலைக்கான போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அனைவரையும் நினைவு கூருவதென்பது, அவர்கள் முன்னெடுத்த இன விடுதலை கொள்கைகளை தொடர்ந்து நாமும் முன்னெடுத்து இலக்கினை அடைய உறுதியுடனிருப்பதையே குறித்து நிற்கின்றது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த காலங்களிலிருந்த சர்வதேச அரசியல் ஒழுங்கானது விடுதலைப் போராட்டத்திற்கு பல வகையிலும் சாதகமானதாக அமைந்தது. எமது இலட்சியத்தை அடைவதற்கான தந்திரோபாயங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவானதும், சாதகமானதுமான நிலைப்பாடுகள் வெளிப்பட்டன. 

விரும்பியோ, விரும்பாமலோ பிராந்திய அரசியல் தேவைகளும் எமது போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவனவாகவே இருந்தன. அத்துடன் சர்வதேசத்தின் தேவைகளை எமக்கு சாதகமாக பாவிக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் அன்றிருந்தன. பின்னர், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறத் தொடங்கும்போது அதற்கேற்ப எமது விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ள நாம் தவறி விட்டோம். இதுவே எமது இன்றைய நிலைக்கு காரணமென எனது பார்வைக்கு புலப்படுகின்றது. மாறுபடும் சர்வதேச ஒழுங்குகளை கவனத்திலெடுத்து அதற்கொப்ப எமது போராட்ட வடிவங்களையும், அணுகுமுறைகளையும் நாம் மாற்றியிருந்திருக்க வேண்டும். 

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற மார்க்ஸின் கூற்றுக்கேற்ப, நாமும் மாற்றங்களுக்கு உட்பட்டு எமது திசைவழிகளை மாற்றி இலக்கிற்கான பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும். அதேபோல் எமது போராட்டத்திற்கு மிக முக்கிய பின்னடைவாக அமைந்தது எமக்குள் ஒன்றுமையின்மையே என்பதும் மறுதலிக்க முடியாதது. ஓர் ஆயுதப் போராட்டம் நடைபெறும் சமூகத்தில் ஆயுதமேந்திய போராட்ட குழுக்கள் தமக்கிடையே ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்க்க முற்பட்டதும், அதன் விளைவுகளும் குறித்து நான் இங்குள்ள எமது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 'ஏகம்' என்ற சிந்தனையில் உருவான சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்கவே நாம் போராட முற்பட்டோம். அதே 'ஏகம்' என்ற சிந்தனை எம் ஒவ்வொருவருக்குள்ளும் குடிகொண்டது. 

அது எமது சிந்தனைக்குள் வரத் தொடங்கிய காலத்திலிருந்தே எம்மையுமறியாமல் நாம் 'ஜனநாயக விரோதி'களாகி விடுகிறோம். இது வெறும் ஆயுத போராட்ட தலைமைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தும். இதனை நான் கூறுவதற்கு அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லையென்றே கருதுகின்றேன். 

எமது தவறுகளை நாமே உணர்ந்து சரியான பாதையில் பயணிக்காவிடின் இப்போது உள்ள சோக வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தலைமைகள் விடும் தவறுகளே அந்த சமூகத்தை இழி நிலைக்குள் தள்ளி விடுகின்றது. எது எவ்வாறாயினும், பல கோணங்களிலே நின்ற நாங்கள் அனைவரும் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரு அணியாக ஒற்றுமைப்பட்டுள்ளோம். 

தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம், அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவேயாகும். பிரபாகரன் தமிழீழத்தை ஒருபோதும் கைவிட மாட்டார், புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என தொடர்ந்து வந்த அரசுகள் கூறிவந்ததை நம்பிய சர்வதேசம், - முக்கியமாக எங்களுடைய பிரச்சினையில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளான இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் - இறுதியுத்தத்தின் போது அரசிற்கு மிகப்பெரிய அளவிலே ஆதரவைக் கொடுத்தன. விடுதலைப் புலிகள் என்றுமே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வர மாட்டார்கள் எனக் கருதியே சர்வதேசம் யுத்ததிற்கு துணை புரிந்தது. 

இன்று இதுகுறித்து அவர்கள் எங்களுடன் அளவளாவும் போது, அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்ற ஒரு மனத்தாங்கலை வெளிப்படுத்துவதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இன்று சர்வதேச நாடுகள் அனைத்தும் யுத்த காலத்தில்கூட இல்லாத அளவிற்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக அதிக கரிசனை கொள்கின்றன. அது எங்களுடைய ஒற்றுமையின் விளைவுதான் என்பதில் சந்தேகமில்லை. எங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. 

சர்வதேசத்திலே வாழுகின்ற பல தமிழ் அமைப்புகளும், புலம்பெயர் தமிழர்களும் காட்டிய அக்கறையும், அவர்களுடைய செயற்பாடுகளும் இந்த ஜெனீவா தீர்மானம் மாத்திரமல்ல, சர்வதேசமும் எங்கள் மேல் அக்கறை எடுப்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றன என்பது யாவருமறிந்ததே. தொடர்ந்தும் புலம்பெயர் மக்கள், தமிழ் மக்களுடைய ஒரு நியாயமான தீர்வுக்காக தங்களுடைய அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டும். போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன விடுதலைக்காக வழங்கிய தார்மீக, பொருளாதார ஆதரவுகள் காலத்தால் அழியாதன. அவர்களின் அந்த பலம் இல்லாமல் போராட்ட வரலாறு இவ்வளவு நீண்டிருக்க முடியாது.

இவையாவும் வீணாகி விட்டதேயென நாம் சோர்ந்து விடவோ அல்லது துக்கித்துக் கொண்டோ இருந்துவிடத் தேவையில்லை. மாறாக, தாயகத்தில் நலிந்து போயுள்ள எமது உறவுகளுக்கு தங்களாலான பொருளாதார, மனோபலங்களை வழங்கி அவர்களையும் வருங்கால எமது சந்ததியினரையும் வளமான, அறிவார்த்தமானவர்களாக உருவாக்க வேண்டும். இதனூடாக எமது இனத்தின் இருப்பை மீண்டும் வலுவானதாக்க வேண்டும். பெருமளவிளான எமது உறவுகள் புலம்பெயர்ந்த நிலையில், தாயகத்தில் நாம் சகல வகைகளிலும் பலமற்றவர்களாக்கப்பட்டுள்ளோம். இந்நிலையை மாற்ற புலம்பெயர் சமூகம் உதவுகின்றது. அது இன்னும் பெரிய அளவில் உதவ வேண்டும். அவ்வாறு உதவிகளை வழங்கி இந்த மக்களை வாழவைக்க வேண்டும்.

முக்கியமாகக் கல்வி மேம்பாட்டுக்காக தங்களுடைய உதவிகளை பாரிய அளவில் தொடர வேண்டும். இவ்வாறு புலம்பெயர் சமூகம் உதவுவதன் மூலம்தான் தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் பலம் பொருந்திய சமூகமாக உருவாக்க முடியுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒற்றுமை ஒன்றே இன்று எமது பலமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளில் நாம் மென்மேலும் பலப்பட்டு ஒற்றுமையாக எமது உரிமைகளுக்காக ஒரே குரலில் ஓங்கியொலிக்க வேண்டும். மக்களின் உண்மையான விடுதலையை வென்றெடுப்பதே தமது இன்னுயிரையீந்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம். வரலாறு எம் மக்களின் வாழ்வை மீட்டுத் தரும்" என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com