Contact us at: sooddram@gmail.com

 

யுத்த நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து 16 ஆவது தினமாக தாக்குதல்

பலஸ்தீனர் உயிர்ப்பலி 653 ஆக அதிகரிப்பு இஸ்ரேல் மீது ஐ.நா. யுத்த குற்றச்சாட்டு

காசாவின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக 16 ஆவது நாளாகவும் நேற்று புதன் கிழமையும் தாக்குதல்களை தொடர் ந்தது. இதில் காசாவில் இருக்கு ஒரே மின்சார உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யது. மறுபுறத்தில் மோதலை முடி வுக்கு கொண்டுவர தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

பலஸ்தீன அவசர சேவை வெளி யிட்ட அறிவிப்பில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதல் களில் 24 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காசா மீது நிலம், வான் மற்றும் கடற் பகுதிகளால் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. கான் யு+னிஸ் பகுதியில் இடம்பெற்ற சரமாரி n'ல் தாக்கு தல்களில்; 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பெரும்பாலானோரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள் ளது. இதற்கமைய இரண்டு வாரங்க ளுக்கு மேலாக நீடிக்கும் தாக்கு தல்களில் கொல்லட்ட பலஸ்தீனர் களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது. இதில் 161 சிறுவர்கள், 66 பெண்கள் மற்றும் 35 வயது முதிர்ந்தவர்கள் அடங்குகின் றனர். இதுவரை 4000க்கும் அதிக மானோர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறத்தில் பலஸ்தீன போராளிக ளுடனான மோதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இதில் 29 இராணுவத்தினரும் இரண்டு சிவிலியன்களும் அடங்குகின்றனர். எனினும் தமது தாக்குதல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இது வரை 52 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி கடந்த செவ்வாய்க் கிழமை மாலை அறிவித்தது. தமது படையணியின் தாக்குதல்களில் இஸ் ரேலின் 36 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் வீரர் ஒருவர் தம்மிடம் பிடிபட்டிருப்பதாகவும் ஹமாஸ் அறி வித்திருந்தது. தமது வீரர் ஒருவர் காணாமல்போனதை இஸ்ரேல் இரா ணுவம் உறுதிசெய்தபோதும் அந்த வீரர் இறந்திருக்கக் கூடும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் முற்றுகையில் இரு க்கும் காசாவின் மக்கள் தொகை யில் அரைப்பங்கினருக்கு மின்சாரம் விநியோகிக்கும் அங்குள்ள ஒரே மின்சார உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் நேற்று n'ல் தாக்குதல் நடத்தியது. மின்சார நிலையத்தின் பிரதான கருவிகள் சேதமடைந்திருப் பதாக மின்சார நிலையத்தின் பேச் சாளர் ஒருவர் அல் ஜஸீரா தொலை க்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் காசாவில் தற்போது 10 வீதத்தினருக்கு மாத்திரமே மின்சார வசதி இருப்பதாக குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் இருந்து வழங்கப்படும் மின்சார விநியோகம் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது. காசாவில் இருந்து வந்த ரொக்கெட் தாக்கி யதில் மின்சாரம் விநியோகிக்க முடியாதிருப்பதாக இஸ்ரேல் கார ணம் கூறியது. மறுபுறத்தில் காசாவில் ஐ.நா. வினால் நடத்தப்படும் பாடசாலை களில் தற்போது இடம்பெயர்ந்த பலஸ்தீன அகதிகள் தஞ்சம் புகுந் துள்ளனர். இவ்வாறான பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் இரண்டு தினங்களுக்குள் இரண்டாவது முறை யாக தாக்குதல் நடத்தியதாக ஐ.நா.வின் நிவாரண உதவிகளுக ;காக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

"மத்திய காசாவில் இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. நிவாரண அமைப்பு தனது கடுமையான வார்த்தைகளை கொண்டு கண்டனத்தை தெரிவிக் கிறது" என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல்கள் காரண மாக 135,000க்கும் அதிகமான காசா மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அங்கிருக்கும் 69 ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள னர். பலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா நேற்று குறிப்பிடும்போது, மீட்பாளர் கள் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டி களின் செயற்பாட்டுக்கு இஸ்ரேல் படையினர் இடையு+று செய்வதால் காசாவின் ஒருசில பகுதிகளிலிருந்து சடலங்களை அப்புறப்புடுத்துவது மற்றும் காயமடைந்தோரை கொண் டுவருவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

அத்துடன் மருத்துவமனை களில் மருந்து தட்டுப்பாடும் அதி கரித்திருப்பதாக அவர் எச்சரித்துள் ளார். இதேவேளை மேற்குக்கரை நகரான பெத்லஹாமிலும் இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள் ளார். 32 வயதான மஹ்மூத் அல் ஹமாம்ரா என்பவர் வாகனத்தில் செல்லும்போது சுடப்பட்டதாக சம்ப வத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள் ளனர். இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலத் தில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை இரவும் இஸ்ரேல் இராணு வத்தினருக்கு எதிராக பலஸ்தீனர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஏழு பலஸ்தீனர்களை இஸ்ரேல் படையினர் கைது செய்த னர். பென் குரியொனில் இருக்கும் இஸ்ரேலின் பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காசாவில் இருந்து ஏவப்பட்ட ரொக் கெட் விழுந்ததால் இரு இஸ்ரேலியர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல விமான சேவைகளும் இஸ்ரேலுக்கான விமா னப்பயணத்தை நேற்று இரத்துச் செய்திருந்தது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து திரும் பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க இரா ஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி ஆகியோர் மோதலை முடிவுக்கு கொண்டுவர பிராந்தியத்தில் தங்கி நின்று தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். உடனடியாக தாக்கு தல்களை நிறுத்தும்படி இருவரும் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் எகிப்து முன்வைத்த யுத்த நிறுத்தத்தை நிராகரித்ததற்கு ஹமாஸ் பொறுப்புக் கூற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டார். காசாவை ஆளும் ஹமாஸ் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த காசாவில் நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருமாறு நிபந் தனை வித்தித்துள்ளது.

பலஸ்தீனில் அண்மையில் ஏற் படுத்தப்பட்ட ஐக்கிய அரசின் பிர தமர் ரமி ஹம்தல்லாஹ், பலஸ்தீனர் களின் இடைவிடாத துன்பத்திற்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார். "கடந்த 47 ஆண்டுகால இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் நாளாந்தம் துன் பத்தை அனுபவித்து வரும் எமது மக்களுக்காக நாம் நியாயத்தை கோருகிறோம். இந்த ஆக்கிரமிப்பும் முற்றுகையும் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது" என்று ஹம்தல் லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன பத்தாஹ் அமைப்பின் இணை நிறுவனரும் பலஸ்தீன நிர் வாகத்தின் ஜனாதிபதியுமான மஹ் மூத் அப்பாஸ{ம் ஹமாஸின் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைக்கு ஆதரவளித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் 'லிட் ஹமாஸினால் கடத்தப்பட்ட தைத் தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் தடைகளை விதிக்க ஆரம்பித்தது. பின்னர் பலஸ்தீன பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஹமாஸ் 2007 ஆம் ஆண்டு காசா வில் இருந்து பத்தாஹ் அமைப்பை வெளிவேற்றியதை அடுத்து அந்த பகுதியை இஸ்ரேல் மற்றும் எகிப்து முழுமையாக முடக்கியது.

எனினும் ஹமாஸ் மற்றும் பத்தாஹ்வுக்கு இடையில் கடந்த ஏப்ரலில் நல்லிணக்க உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதோடு இதனைத் தொடர்ந்து பலஸ்தீனில் ஐக்கிய அரசொன்று அமைக்கப்பட்டது இந்த நடவடிக்கை இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதேவேளை காசா பதற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் அவசர கூட்டம் நேற்று nஜனீவாவில் இடம்பெற்றது. இதில் இஸ்ரேல் படையின் காசா மீதான தாக்குதல் யுத்த குற்றமாகும் என்று மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை விமர்சித்தார். "சர்வதேச சட்டங்கள் மோசமாக மீறப்பட்டு பாரிய யுத்த குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன" என்று இந்த அவசர கூட்டத்தில் பிள்ளை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலை ஒரு பக்கச் சார்பான அமைப்பு என்று குற்றம் சாட்டும் இஸ்ரேல் அது முன்னெடுக்கும் எந்த விசாரணைக் கும் ஒத்துழைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008-2009 காசா மோதலின் போது இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் யுத்த குற்றத்தில் ஈடுபட்ட தாக ஐ.நா. மனித உரிமை கவுன் ஸில் 2009 அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் இந்த அறிக்கையை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிராகரித்தது.

இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பி வந்த குடும்பம் தாக்குதலுக்கு இலக்கான பரிதாபம்

இஸ்ரேல் தாக்குதலில் இருந்த தப்புவதற்காக 'iஜயா நகரில் இருந்து நான்கு தினங்களுக்கு முன் மத்திய காசா நகருக்கு இடம்பெயர்ந்த தம்பதி ஒன்று அங்குவைத்து இஸ்ரேலின் பீரங்கி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. மத்திய காசா நகரில் இந்த தம்பதி அடைக்கலம் பெற்ற தமது பாட்டன் வீட்டின் மீது இஸ்ரேலின் பீரங்கி குண்டு விழுந்ததில் அந்த குடும்பத்தின் நான்கு சகோதரிகள் கொல்லப்பட்டனர்.

"'iஜயாவில் n'ல் குண்டுகள் விழுவதால் அவர்கள் தலதினியில் இருக்கும் தமது பாட்டனார் வீட்டுக்கு வந்தனர். ஆனால் அங்கும் அவர்களை n'ல்கள் துறத்தியுள்ளன" என்று தனது குழந்தைகளை பறிகொடுத்த தந்தை குறிப்பிட்டார். "எனது மனைவியை தொலைபேசியில் அழைத்து மீண்டும் வீட்டுக்கு திரும்புவது குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது எனது மகள்மார் அவர்களது பாட்டன் வீட்டு மேற்கூரை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர்" என்று தந்தையான யாசிர் அல் கஸ்ஸாஸ் விபரிக்கிறார்.

திடீரென தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது என்று குறிப்பிடும் அவர் "நான் மீண்டும் ரீடையல் செய்தபோது பதில் வரவில்லை" என்கிறார். "எனது மனைவியின் சகோதரருக்கு அழைத்தபோதும் அங்கிருந்து அழைப்பு கிடைக்கவில்லை. பின்னர் எனது மைத்துனன் ஒருவர் அழைப்புக்கு பதிலளித்து எனது மகள்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்."

"எனது நான்கு மகள்மார் மற்றும் அல் கஸ்ஸாஸ் குடும்பத்தின் உறுப்பினர்கள் பாலஸ்தீனத்திற்காக தியாகத்தைச் செய்துள்ளனர்" என்று அல் கஸ்ஸாஸ் குறிப்பிட்டார். கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய பீரங்கி; தாக்குதலில் அல் கஸ்ஸாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் சரமாரியான n'ல் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான பலஸ்தீனர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் 50க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் 50க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டு அல்லது சேதத் திற்குள்ளாகி இருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் அறக்கட்டளை அமை ச்சின் துணைச் செயலாளர் ஹஸன் அல் சைபி 50 பள்ளிவாசல்கள் இலக்காகி இருப்பதாக ஊடகங்க ளுக்கு தெரிவித்தார்.

போராளிகள், சிவிலியன்கள், மருத்துவமனைகள், பள்ளிவாசல் கள் மற்றும் கட்டிடங்கள் என்று வேறுபடின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது என அல் சைபி விபரித்துள்ளார். பாடசாலைகளும் எதிர்வரும் காலங்களில் தாக்கு தலுக்கு இலக்காகும் வாய்ப்பு இருப்பதாக அச்சமடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கொல்லப்பட்ட மக்கள் பாரிய புதைகுழியில் அடக்கம் செய்யப்படு வதோடு குடும்ப அடக்கஸ்தலங் களும் பயன்படுத்தப்படுகின்றன" என்று அவர் குறிப்பிட்டார். பாரிய அளவில் காயமடைந்தோர் சேர்க் கப்பட்டிருப்பதால் மருத்துவமனைக ளும் நிரம்பி வழிகின்றன என்று விபரித்துள்ளார். பாதுகாப்பு மோசமடைந்திருப்ப தால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அடக்கஸ்தலத்திற்கு கொண்டு செல்வதும் கடினமாகி இருக்கிறது என்று அல் சைபி குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com