Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரனின் முக்கியஸ்தர்கள் தமிழகத்தில் கைதால் பதட்டம்

இந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீ சாரால் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களி லும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமநாத புரத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் வாகன சோதனையின் போது பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:- மதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கிருஷ்ணகுமார் (39) இன்னொருவர் பெயர் ராஜேந்திரன் (44) என்பது தெரிய வந்தது.

2 பேரின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது கிருஷ்ணகுமார் வைத்திருந்த பையில், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 4 ஜி.பி.எஸ். கருவிகள், 8 செல் போன்கள் ஆகியவை இருந்தன. 42 ஆயிரத்து 200 ரூபாய் இந்தியன் கரன்சியும் 19 ஆயிரத்து 300 ரூபாய் இலங்கை கரன்சியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கிருஷணகுமாரை தனிமைப் படுத்தி அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதி காரிகள், கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இவர்கள் அனைவரும் விடுதலைப்புலி கிருஷ்ண குமாரிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார் கள். ரகசிய இடத்தில் வைத்து கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அலவெட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் கடந்த 1990-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அவருடனேயே நீண்ட நாட்கள் ஒன்றாகவே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்துள் ளார். இறுதிக்கட்ட போர் நடந்த போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் அணி அணியாகவும், தன்னந் தனியாகவும் இலங்கையை விட்டு வெளியேறினர். அப்போது தான் கிருஷ்ண குமாரும் தமிழகத்துக்கு வந்துள்ளார். திருச்சியில் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட் பட்ட பகுதியில், அவர் தங்கி இருந்து வந்துள்ளார். அகதிகள் முகாமில் தங்காமல் வெளியிலேயே வாடகை வீட்டில் கிருஷ்ணகுமார் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலமாக ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது தான் போலீசில் சிக்கிக் கொண்டார். இதை யடுத்து கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறப்பு அகதிகள் முகாமில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கிருஷ்ணகுமார் கடல் மார்க்கமாக கள்ளத்தோணி யில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டு செயல்பட்டுள்ளார். 75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பொட்டலங்களுடன் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு சப்ளை செய்வதற்காக இவர் இதனை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தி னர் வலுவாக தடம் பதிக்க தயாராகி வருவதும் உறுதி யாகி உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். கிருஷ்ண குமாருக்கு உதவிகள் செய்த குற்றத்துக்காக டிரைவர் சசிகுமார், ராஜேந் திரன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com