Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்....??  - கருணா.

உலகம் முழுவதும் அறிந்த பிரபாகரனின் சரணாகதியை வெளியே சொல்வதற்கு கருணாவிற்கு 6 ஆண்டுகள் எடுத்துள்ளது. கருணா விற்கு பொதுஜனஐக்கியமுன்னணி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காது விட்டவுடன் ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று கருணாவைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கருணா. தனது ஆதங்கங்களைத் தெரிவித்து கவலைப்பட்டுள்ளான். அப்போது அவன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ.

எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. யதார்த்தமாக அவர் செயற்படுகின்றார். சுமந்திரனும் தமிழர்களுக்காக சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றார். ஆனால் அதனை இல்லாது செய்வதற்கு புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சிலர் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை நான் சொல்லுவதால் நான் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் கதைப்பவன் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

கூட்டமைப்பின் தலைவரிடம்  மகிந்தவும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது எனக்கத் தெரியும். சம்மந்தனுக்கு புலிகளைக் கண்டேலே அலர்ஜி. இருந்தும் புலிகளின் ஆயுதத்தால் தனக்கும் ஏனைய மென்போக்கு அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றே புலிகள் சொல்வதைக் அவர் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு அப்போதே தெரியும். புலிகள் அழித்தொழிக்கபபட்டதால் தற்போது தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். இறுதியுத்தத்தில் பிரபாகரனைப் படையினர் உயிருடன் பிடித்தது நுாறுவீதமான உண்மை.
ஆனால் பிரபாகரன் எவ்வாறு உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் என்னைக் கொண்டு சென்று காட்டினார்கள்.
பிரபாகரன் கடுமையான சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. பிரபாகரன் இறந்ததை நம்பாத சுரேஸ் பிரேமச்சந்திரனும் இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களும் என்னை அனுகி 'அச் சம்பவம் உண்மையா' எனக் கேட்ட போது எனக்கு சிரிப்பாக இருந்தது.

பிரபாகரனின் உடலைப் பார்த்தவுடன் எனக்கு தாங்கமுடியாத அழுகை ஏற்பட்டது. இருந்தும் அடக்கிக் கொண்டேன். சிறிது நேரத்திலேயே நான் நோமல் நிலைக்கு வந்துவிட்டேன்.
ஏனெனில் இனிமேல் தமிழ்ச் சனம் அமைதியான முறையில் இருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே. பிரபாகரனை உடலாகப் பார்த்த ஓரிரு நாட்களின் பின்னர் பிரபாகரனை உயிருடன் மகிந்தராஜபக்சவிடம் இழுத்துக் கொண்டு வந்ததாகவும் மகிந்த பிரபாகரன் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் முக்கிய சிங்கள அமைச்சர்கள் இருவரால் எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் இது தொடர்பாக ஒரு சமயம் மகிந்தவிடம் நேரடியாகவே கேட்டேன். மகிந்த ஒரு புன்முறுவலை மாத்திரம் அதற்குப் பதிலாகத் தந்துவிட்டு வேறு விடயங்களுக்கு கதையை மாற்றியதால் நான் அதன் பின்னர் இது பற்றிக் கேட்கவில்லை.

பிரபாகரன் தனது மனைவியையும் மகளையும் உயிருடன் படையினரிடம் அகப்பட வைத்தது அவரது முழு முட்டாள்தனம். பிரபாகரன் மனைவியையும் பிள்ளையையும் இறுதி யுத்தத்தின் போது தன்னுடன் வைத்திருந்துள்ளதை நானே நம்பவில்லை. பின்னரே எனக்கு எல்லாம் தெரிந்தது. சரணடைந்த முக்கிய தளபதிகள் நாய்க்குட்டிகள் போல எங்கள் கால்களின் கீழ் உயிருடன் கிடந்தார்கள் என முக்கிய படையதிகாரி தெரிவித்த போது எனக்கு குறித்த சரணடைந்த தளபதிகள் மீது கடும் கோபம் ஏற்பட்டது. என்னைத் துரோகியாக கூறியவர்களே படையினரிம் இவ்வாறு சரணடந்தவர்கள் எனத் தெரி்ந்ததால் அவர்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com