Contact us at: sooddram@gmail.com

 

திருமலை கிரிக்கெட் வீரர் கொலைச் சம்பவம்: விமானி உட்பட இருவர் கைது

மனைவியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை . கள்ளக்காதல் தொடர்பே காரணம்

திருகோணமலை, ஐயனார்கேணி பிரதேசத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் ஈஸ்ரவதாஸன் கேதீஸ்வரன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் லண்டனில் உள்ள அவரது மனைவியை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடைய இரண்டு சிங்கள வர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் விமானி என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனது கணவரை கொல்ல விமானிக்கு 1750 பவுன் பணம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே லண்டனிலுள்ள பெண்ணை கைது செய்ய சி. ஐ. டி. பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை நாடவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில :கடந்த 2012, 4 ஆம் மாதம் 18 ஆம் திகதி 28 வயதுடைய கிரிக்கெட் வீரரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்பவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்..

இவரது சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். எனினும் இந்தக் கொலைச் சம்பவத்திற்கும் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் தொடர்பு என்று வெளிநாடுகளிலுள்ள சில புலம் பெயர் தமிழர்களால் குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையில் சி. ஐ. டி. பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை வைத்து விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு வந்த சி. ஐ. டியினர் நேற்றுக் காலை பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான விமானிக்கும் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனின் மனைவிக்கும் இடையில் லண்டனில் வைத்து கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.

லண்டனிலுள்ள பெண் இலங்கையிலு ள்ள தனது கணவனை கொலை செய்வதற்காக 1750 பவுன்பணத்தை கொடுத்துள்ளார். இதன் பின்னணியிலேயே ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான லண்டனிலுள்ள பெண்மணியை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேக நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை சி. ஐ. டி. யினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதன் மூலம் படையினர் மற்றும் பொலிஸார் மீது அடிப்படை அற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யாகியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com