Contact us at: sooddram@gmail.com

 

மேடைகளில் மக்கள் முன் வீர முழக்கம், ஊடகங்களில் வேறொரு விளக்கம்

தமிழரசு கட்சியின் தடுமாற்ற அரசியல் இனியும் தொடருமா? உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென புத்திஜீவிகள் வேண்டுகோள்

தமிழரசுக் கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தவறு நேர்ந்திருப் பதாக அக்கட்சியினர் கூறுவது அவர்களின் தடுமாற்ற அரசியலைப் புலப்படுத்துவதாகப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட் டின்போது கட்சியின் தலைவர் இரா. சம்பந் தன் ஆற்றிய உரையே சர்ச்சையைத் தோற்று வித்திருக்கிறது. அந்தச் செய்தியை முதன் முதலில்இந்துபத்திரிகையே வெளியிட்டிருந்தது. அப்போது அதுபற்றி தமிழரசுக் கட்சியினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது, சம்பந்தனின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தேசப் பற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையிலேயே, தமிழரசுக் கட்சியின் யாப்பு தவறுதலாக மொழி பெயர்க் கப்பட்டுள்ளதென்று சம்பந்தன் எம்பி யும் சுமந்திரன் எம்.பியும் கூறுகின்றனர். இதன் மூலம் இவர்களின் தெளிவற்ற அரசியல் செல்நெறி புலனாகுவதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இந்துபத்திரிகை இந்தியாவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது. இலட்சோப இலட்ச வாசகர்களைத் தன்னகத்தே கொண்ட பத்திரிகை. அந்தப் பத்திரிகை தவறான மொழி பெயர்ப்பை வழங்கிவிட்டது என்றால் எவராவது நம்புவார்களா? அப்படியாயின் அதனை ஏன் உடனடியாகச் சுட்டிக் காட்ட வில்லை. தவிரவும், தமிழரசுக் கட்சியினர் ஆங்கில மொழிப் புல மையில் எந்த விதத்திலும் குறைந் தவர்கள் இல்லையென்ற கருத்தியலும் நிலவுகிறது. அவர்கள் தம் கட்சியின் யாப்பை சரியாக மொழிபெயர்த்து வழங்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆக சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் மக்களைக் கவர்வதற்கு மேடையில் ஒரு கருத்தையும் ஊடகங்களுக்கு வேறொரு கருத்தையும் தெரிவிக்கிறார்கள் என்று புத்திஜீவிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

உண்மையான அரசியல்வாதிகள், மக்கள் தலைவர்கள் எனின் கருத்துகளைத் தீர்க்க தரிசனத்துடன் முன்வைப்பார்கள். அப்படியே தப்பித் தவறி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டாலும் அதனைத் தெளிவுபடுத்துவார்கள் அல்லது தமது கருத்தில் உறுதியாக இருப்பார்கள். தமிழரசுக் கட்சியினரைப் போன்று நெகிழமாட்டார்கள் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மொழிபெயர்ப்பு தவறு என்பதைவிட தமிழரசு கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கட்சியின் யாப்பில் நாட்டைப் பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா. சம்பந்தன்தி ஹிந்துபத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

எனினும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய சம்பந்தன், தமிழர் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புதிய தருணம் பிறந்துள்ளதென கூறியதாகதி ஹிந்துபத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழர்கள் உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் அதனால் ஐக்கிய இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பெற முடியாது எனவும் சம்பந்தன் மட்டக்களப்பில் கூறியதாகதி ஹிந்துபத்திரிகை தெரிவித்துள்ளது.   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com