Contact us at: sooddram@gmail.com

 

எம்மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - தேவானந்தா

 அமெரிக்க வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை - 2012 இல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் அற்றவை என சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் ஹெரிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழமக்;கள  ஜனநாயகக் கட்சி இலங்கையின் தேர்தல் திணைக்களத்தினால் அங்கிகரிக்கப்பட்ட ஓர் கட்சியாகும். எனது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1970 மற்றும் 1980 களில் நடந்தப்பட்ட போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கின்றேன்.

1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமானது அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தப் பிரேரணைக்கு வழியமைத்ததோடு, அதன் ஊடாக  ாகாணங்களுக்கு  அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாட்டினை கொண்டிருந்ததனால், நான் அதனைப் பூரணமாக ஏற்றுக் கொண்டதோடு, ஏனைய தமிழ் அமைப்புகளோடு சேர்ந்து  சிறிலங்காவின் ஜனநாயக நீரோட்ட அரசியலில் இணைந்து கொண்டேன்.

நான் 1994 ஆம் ஆண்டிலிருந்து  தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன். அத்தோடு கடந்த 13 வருடங்களாக வௌ;வேறு அரச  தலைவர்களின் கீழ் அமைச்சரவை அந்தஸ்;துள்ள  அமைச்சராக இருந்து வருகின்றேன்.

வடக்கு கிழக்கில் கூடுதல் வாக்கு பெற்றவன்

அமைச்சரவையில் நீண்டகாலமாகவிருக்கும் அமைச்சர் தரத்தில் நான் இன்றுஇருக்கின்றேன்.
  2010 ஏப்ரலில்  கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் நான் ஸ்ரீலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்வான சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிக கூடிய விருப்பு வாக்குகளினையும் பெற்றுள்ளேன்.

குறிப்பிட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட பின்வரும் விடயங்கள் எனக்கு சஞ்சலத்தினையும், வேதனையையும் தருகின்றது
'அரசாங்கத்தின்  துணைப்படைக் குழுவினுடன் தொடர்புடைய  கொலைகள் முன்னைய வருடத்தைவிட குறைவாக இருந்த போதிலும்சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ்  வழிநடாத்தப்படும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) அச்சுறுத்தல், பலாத்காரமாகப் பணம் பறித்தல், இலஞ்சம் பெறுதல் மற்றும் யாழ் பொதுமக்கள் மீது வன்முறையினை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நம்பகத்தரமான அறிக்கைகளில் இருந்து தெரியவருகின்றது.

உதாரணத்திற்கு மார்ச் 4 ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் 13 வயது ஜேசுதாஸன் லக்சினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துள்ளார். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் மார்ச் 16 ஆம் திகதி ஜெகதீஸ்வரனினை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைத்துள்ளது.' 

'அரசாங்கத்தின் துணைப்படைக் குழுக்களோடு இணைந்து செயற்படும் அடையாளம் தெரியாத சிலரினால் பொதுமக்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) போன்ற, அரசசார்பான துணைப்படைகளுக்கும், அரச பாதுகாப்பு படையினருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பகமான அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
இக்குழுக்கள் போர்கால சூழலில் அரச படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தன. போர் ஒழிந்த சூழலில் அவர்கள் படிப்படியாக தங்களது வருமான வரம்புகளையும், எல்லைகளையும் திடப்படுத்திக் கொண்டதுடன், ஓர் வன்முறைக் கும்பலின் இயல்புகளை அதிகம் கொண்டிருந்தன.'
 
'அரச சார்பற்ற தாக்கங்கள், அரச சார்பான துணைப்படைக்குழுக்களும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்படும் கும்பல்களும், கருத்துச் சுதந்திரத்தினை, குறிப்பாக வடக்கில் அடக்கினார்கள். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களினைப் பயமுறுத்தி தொந்தரவு செய்வதாக தொடர்ச்சியான அறிக்கைகள் வந்துள்ளன.' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் செனட் சபையின் வெளிவிவகார குழுவில் பணியாற்றிய போது  உங்கள் சகபாடிகளும், நீங்களும் உலகெங்குமுள்ள மனித உரிமைகள் நிலவரங்களை துல்லியமாக மதிப்பீடு செய்வதென்பத இந்த அறிக்கையிலேயே தங்கியுள்ளதாக இவ்வறிக்கையின் முன்னுரையில் தெரிவித்துள்ளீர்கள்.

அத்துடன், அது ராஜாங்கத் திணைக்களம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்;படுத்திவரும் சமஷ்டி நிறுவனங்கள் மற்றும் காங்கிரஸ் சபையின் அங்கத்தவர்கள் ஆகியோருக்கும் பெறுமதிமிக்க ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

நான் அந்த அமைச்சரில்லை

ஆனால், அப்படிப்பட்ட பெறுமதிமிக்க துல்லியமான அறிக்கையில் என்னை 'சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர்'; என்று குறிப்பிடப்பட்டுள்ளது 2010 ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் 'பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக' இருந்து வருகின்றேன். இவ் எடுத்துக் காட்டானது தங்கள் உதவியாளர்கள் எவ்வாறான  உண்மையான தகவல்களினை தங்களுக்கு வழங்கி வருகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக  உள்ளது

என்னால், வழிநடத்தப்படும் ஈ.பி.டி.பி கட்சியானது யாழ்ப்பாணத்திலுள்ள பொது மக்களினை அச்சுறுத்தல், கொள்ளையடித்தல், லஞ்சம் பெறுதல், மற்றும் துன்புறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து அதனை உறுதிபடுத்துவதற்கு  அத்தாட்சியாக தாங்கள் காட்டியிருக்கும் சம்பவத்தினை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

மார்ச் 2012 ஆம் திகதி நெடுந்தீவினைச் சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற நபரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயதுடைய சிறுமியை மேற்கோளாக்  ாட்டியுள்ளீர்கள். திட்டவட்டமாக அவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் எனவும் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் இலங்கையிலுள்ள தங்கள் ராஜாங்கத்தூதுவரிடம் இக்கடிதத்தின் பிரதி ஒன்றினையும், ஊர்காவற்றுறை  ீதிவான் நீதிமன்றத்தில் ஜேசுதாஸன் லக்ஷினியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது  தொடர்பாக நடக்கும் வழக்கு சம்பந்தமான 112 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களின் உறுதி செய்யப்பட்ட பிரதியினையும் கையளிக்கின்றேன்.

அவர் எமது உறுப்பினர் இல்லை

இவ் ஆவணங்களில் பொலிசாரின் முறைப்பாடு, சாட்சியங்களின் வாக்;குமூலங்கள், மற்றும் நீதிமன்ற குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் என்பன அடங்கும். இதில் எந்தவொரு ஆவணங்களிலோ அல்லது பொலிஸ் அறிக்கையிலோ அல்லது பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களிலோ கந்தசாமி ஜெகதீஸ்வரன்  ஈ.பி.டி.பி உறுப்பினர் என்று குறிப்பிடப்;பட்டிருக்கவில்லை. நீங்கள் அழுத்தம் திருத்தமாக அவரை ஈ.பி.டி.பி உறுப்பினர் எனக் கூறியது மட்டும்மன்றி, இப்புனையப்பட்ட கதையினை   எனது கட்சிக்கு எதிராக தங்களால் கூறப்பட்டிருக்கும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்கும்  ஓர உதாரணமாக காட்டியுள்ளீர்கள்

இவ் ஆதாரமானது தங்களது உதவியாளர்களினால் இவ் அறிக்கையினை தயாரிப்பதற்கு வழங்கிய தகவல்களின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஓர் அளவுகோலாக அமையுமென நம்புகின்றேன்.
அத்துடன் தாங்கள் என்மேலும், என்னால் வழநடத்தப்படும் ஈ.பி.டி.பி கட்சியின் மீதும் எதிராக அவ்வறிக்கையில் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தங்களிடம் இருக்கும் ஆதாரங்களினை எனக்கு சமர்ப்பிக்கும்படி இத் தருணத்தில் தங்களை வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஈடு செய்யமுடியாத இழப்பாகும்

இவ் அறிக்கையினை பிரசுரித்ததன் மூலம் ஊடகங்கள் எனது அந்தஸ்த்திற்கும், கௌரவத்திற்கும்  ஈட செய்யமுடியாத இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நான் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வருவதோடு, இலங்கையின் ஓர் பொறுப்புள்ள அமைச்சராகவும் கடமையாற்றி வருகின்றேன். ஆயினும்,கடந்த சில வருடங்களாக தங்கள் ராஜாங்கத் திணைக்களமும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் வேறு ஸ்தாபனங்களும்;, எனக்கும் நான் சார்ந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)க்;கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வண்ணம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இத் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளினால் உங்கள் அதிகாரிகளும் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் ஈ.பி.டி.பி மீதும் எனது அரசியல் நடவடிக்கைள் மீதும் தவறான அபிப்பிராயத்தைக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் ராஜதந்திரிகள்  மற்றும் அரச பிரதிநிதிகள் எமது நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது கருத்தினையோ, அல்லது தெளிவுபடுத்தலையோ கோரவில்லை. பதிலாக அவர்கள் என் அரசியல் நடவடிக்கை மீது சேறு பூசவிரும்பும் சுயலாப அரசியல் நோக்குடையவர்களின் கருத்தினை மட்டுமே அறிந்து கொள்கின்றனர் என்பதனை மனவருத்தத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.  
 
இவ் அறிக்கையில் என்னால் குறிப்பிடப்பட்ட உள்ளடக்கங்களை வெளியிட்டதன் மூலம் எனக்கு ஏற்பட்ட மீளீடு செய்ய முடியாத இழப்பீட்டினை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மேற்கூறிய விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்;படுத்துகின்றேன்.

இக்கடிதத்தின் பிரதிகளை அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகார குழுக்களுக்கும், ஊடகத்திற்கும் அனுப்பி வைக்கின்றேன் என்று அவர் அந்தக் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்  இக்கடிதத்தின் பிரதிகள்  ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான செனற்சபைக் குழு, வெளிநாட்டு விவகாரங்களுக்கான  சபைக் குழு, இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com