Contact us at: sooddram@gmail.com

 

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களினால் சமூகத்திற்கு எந்தப் பாதிப்புமில்லை

கேள்வி : முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கையின் தற்போதைய நிலைமை என்ன?

பதில : 2009மே மாதம் யுத்தம் முடிவடைவதோடு ஆரம்பிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் செயற்பாடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எந்த ஒரு நாடும் மேற்கொண்டிராத அளவிற்கு வெற்றிகரமாக இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறு நாசகார வேலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டது கிடையாது.

ஆனால் சரணடைந்த மற்றும் கைதான 12,165 பேரில் 11,593 பேரை இதுவரை புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைத்துள்ளோம். மேலும் 339பேர் மட்டுமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அடுத்த வருட நடுப்பகுதியாகும். போது சகலரும் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுவிடுவர்.

கேள்வி : இவர்களுக்கு எவ்வாறான புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது?

பதில : ஆயுதம் தூக்கி சமூகத்திற்கு எதிராக செயற்பட்ட கொடூரமான மேற்படி நபர்களை பட்டை தீட்டி புடம் போடுவதே எமது பணியாகும். இவர்கள் ஏனைய சாதாரண மக்களுடன் சமூகமாக வாழ்வதற்கு உகந்த வகையில் முழுமையாக மாற்றியமைக்கப்படுவர்.

இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதோடு கல்வி அறிவும் அளிக்கப்படுகிறது.

தாம் விரும்பிய தொழிற் பயிற்சியை தெரிவு செய்ய அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. சிலர் தமது பரம்பரை தொழிலுடன் தொடர்புடைய தொழிற் பயிற்சிகளை தெரிவு செய்வதோடு சிலர் வேறு தொழிற்பயிற்சிகளை ஆர்வத்துடன் கற்கின்றனர். இவர்களுக்கு விளையாட்டுகளில் ஈடுபடவும் இசை, கலை கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கவும் அவகாசம் வழங்கப்படுகிறது. உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதோடு 2 மாதத்துக்கு ஒரு தடவை வீடு செல்ல 4 நாள் லீவும் வழங்குகிறோம். அண்மையில் தெற்கிற்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றோம்.

கேள்வி : புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைப்பதுடன் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்பு முடிந்து விடுகிறதா? சமூகத்தில் இணைந்த பின்னரும் அவர்களின் நலன் குறித்து கவனிக்கப்படுகிறதா?

பதில்: சமூகத்தில் இணைந்த பின்னரும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் குறித்து நாம் கவனம் செலுத்தி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருவதோடு அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் தீர்த்து வருகிறோம். இதற்கான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது உப அலுவலகங்கள் 8 உள்ளன. இவற்றினூடாக அவர்களுக்கு சுயதொழில் உதவிபெறவும் அவர்கள் முகம் கொடுக்கும் வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கேள்வி: எவ்வாறான உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன?

பதில்: சுயதொழில் புரிவதற்காக வங்கிகளினூடாக 4 வீத வட்டியால் 2 1/2 இலட்சம் ரூபா வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 1538 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 500 பேருக்கு இவ்வாறு கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர தையல் இயந்திரங்கள், ஆட்டோக்கள், விவசாயம் செய்ய நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பவற்றையும் வழங்கியுள்ளோம். இதே வேளை 3800 முன்னாள் புலி உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களும் கூட இருக்கிறார்கள். இந்திய வீட்டுத்திட்டவீடுகள் வழங்குவதில் இவர்கள் ஒரங்கப்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. வீடு வழங்குவதில் முன்னாள் புலிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு தற்பொழுது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: முன்னாள் புலி உறுப்பினர்களிடையே அங்கவீன முற்றவர்களும் பலர் இருந்தனர். அவர்களுக்கு எத்தனை உதவிகளை அரசாங்கம் வழங்கிவருகிறது?

பதில்: 2237 அங்கவீனமுற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 2174 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 63 பேரே எஞ்சியுள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சுயதொழில் புதிய கடனுதவி வழங்கப்படுகின்றது. சமூக சேவை அமைச்சினால் வழங்கப்படும் இந்தக் கடனுதவியை பெற 187 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 53 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபா வரை சுயதொழில் கடன் வழங்கப்ட்டுள்ளது. இது தவிர 3 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவொன்றும் அங்கவீன முற்றவர்களுக்காக சமூக சேவை அமைச்சு வழங்குகிறது.

கேள்வி: சமூகத்திற்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவர்கள் வாழும் சமூகம் ஓரங்கட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளதா? தம்மை புறக்கணிப்பதாக புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்கள் முறைப்பாடு ஏதும் செய்துள்ளனரா?

பதில : ஆரம்ப காலத்தில் அவ்வாறான சிறு சிறு சம்பவங்கள் நடந்தாலும் தற்பொழுது அவ்வாறு நடப்பதாக எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை. இவர்கள் தங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், தமது பிள்ளைகளை கடத்தியவர்கள் என்ற உணர்வில் மக்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் சமூகத்தில் மதிக்கப்படும் பெரியவர்கள் அதிபர்கள் போன்றோரை அழைத்து இதுதொடர்பில் அறிவூட்டியுள்ளோம்.

கேள்வி : தங்களை இராணுவம் கண்காணிப்பதாகவும் இங்கு வாழ முடியாமல் அவர்கள் வெளிநாடுகளில் புகலிடம்பெற முயல்வதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது குறித்து?

பதில்: புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட எவரையும் இராணுவம் பின் தொடரவோ கண்காணிக்கவோ இல்லை. அது தவறு. வெளிநாட்டில் தொழில் பெறுவதற்காக சிலர் இவ்வாறு பொய்க்குற்றாட்டுகளை முன்வைத்து புகலிடம் கோருகின்றனர். புனர்வாழ்வு பெற்று விடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு எங்கு செல்லவும் சுதந்திரம் இருக்கிறது. விடுவித்தவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கவோ சமூக விரோத செயல்களில் ஈடுபடவோ மாட்டார்கள் என நூறு வீதம் நம்ப முடியுமா?

பதில : நிச்சயமாக நம்பலாம். ஏனென்றால் அவர்கள் தாம் செய்த தவறை உணர்ந்து திருந்தியுள்ளனர். தமது குடும்பத்துடனும் உற்றார் உறவினர்களுடனும் சேர்ந்து வாழ்வதில் அவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை வேறு நபர்களால் திசைதிருப்புவது கடினம். முன்னாள் புலி உறுப்பினர்கள் மூவருக்கு தேசிய குறிபார்த்துச் சுடும் குழாமில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு கொழும்பில் தங்கி பயிற்சிபெறவும் கொடுப்பனவும் வழங்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்பொழுது ஒருவர் மட்டுமே இந்த குழாமில் இருக்கிறார். தமது மனைவி மக்களுடன் இருப்பதே பிரதானம் என ஏனைய இருவரும் தமது சொந்த இடங்களுக்குசென்றுவிட்டனர். இவ்வாறு தான சிலருக்கு கொழும்பில் தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுத்தாலும் அவர்கள் ஒரிருநாளில் தமது ஊருக்கே திரும்பிவிடுகிறார்கள்.

இவர்கள் சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக இடம்பெற்றுருப்பதற்கு இதனை தவிர வேறு உதாரணம் தேவையிருக்காது.

வேறு நாடுகளில் இவ்வாறு போராட்டங்களுடன் தொடர்புபட்டவர்கள் யுத்தம் முடிவடைந்த பின் சமூகவிரோத செயல்களிலோ தவறான வழிகளிலோ ஈடுபட்டதாகவோ அறிவிக்கப்படுகிறது. ஆனால் புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலிகள் எவரும் சமூகவிரோத செயல்களிலோ தவறான செயற்பாடுகளிலோ ஈடுபட்டதாக இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை.

கேள்வி : சாதாரண குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை விட முன்னாள் புலிகளுக்கு இவ்வளவு சலுகைகளும் வசதிகளும் வழங்குவது அநீதி என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனரே அது குறித்து...?

பதில்: வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரியலாம். நாட்டுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கூடுதல் முக்கியம் வழங்கப்படுகிறது. அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வாறு எதுவும் கிடைப்பதில்லை என நினைக்கலாம். ஆனால் இவர்களுக்கு செய்யும் உதவிகள், வசதிகள் எல்லாம் நாட்டிற்கான முதலீடாகவே கருதுகிறோம். நாட்டுக்காக அனைவரும் செய்யும் அர்ப்பணிப்பு இது. மீண்டும் யுத்தமொன்று வராமல் இருக்கவும் பெற்ற சமாதானத்தை பாதுகாக்கவும்முன்பு ஆயுதம் தூக்கியவர்களுக்கு இவ்வாறு உதவியது இன்றியமையாத விடயம். அதனை யாரும் தவறாக பார்க்கக் கூடாது.

கேள்வி: புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களை வடக்குத்தேர்தலில் ஈடுபடுத்த முயல்வதாக கூறப்படுகிறதே

பதில்: ஆம், ஆனால் நாம் அறிந்த அளவில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட எதுவித தடையும் கிடையாது.

கேள்வி : புனர்வாழ்வு பெறும் எஞ்சியுள்ளவர்களின் நிலை என்ன! உங்கள் பணி எப்பொழுது முடிவடையும்?

பதில்: 339 பேரே எஞ்சியுள்ளார்கள். இவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டவர்களாகும். இவர்களில் 17 பெண்கள் உள்ளதோடு அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெறுகின்றனர். 322 ஆண்கள் வெலிக்கந்தை, கந்தகாடு, பூந்தோட்டம் (ஆண்) புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். 2014 மே மாதமளவில் கட்டம் கட்டமாக இவர்களின் புனர்வாழ்வு நிறைவடைந்து வெளியேறுவர். இன்னும் சில தினங்களில் பிரபாகரனின் நண்பர் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் படி புனர்வாழ்விற்காக இங்கு வர உள்ளார். எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவில் மேலும் சிலர் புனர்வாழ்விற்காக அனுப்பப்படலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com