Contact us at: sooddram@gmail.com

 

பாரிஸ் மாநகரில்

இலக்கிய மாலை நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்க  ூல்கள் வெளியீடு..!

'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது.'

இவ்வாறு கடந்த 2 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை பாரிஸ் மாநகரில் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ' நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'சமரா கோணர்' உணவகத்தில் நடைபெற்ற மூன்றாவது 'இலக்கியமாலை' நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. 'இப்படியுமா' (சிறுகதைத் தொகுதி) 'அழியாத தடங்கள்' (கட்டுரைத் தொகுப்பு) 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா', 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) ஆதியாம் நூல்களே வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் கவிஞர் க. வாசுதேவன் பேசுகையில், 'இளங்கோவனது சிறுகதைகள் ஒவ்வொன்றும் சாதாரண வாசகரையும் ஈர்க்கும்வகையில் யதார்த்தப் படைப்புகளாகத் திகழ்ந்து மனதில் நிறைவைத் தருகின்றன. இலங்கையில் யுத்த அனர்த்தங்களின்போதும், புலம்பெயர்ந்த பின்பும் அவரது அனுபவங்களின் உண்மைத் தன்மைகள் கதைகளில் புலப்படுகின்றன' எனக் குறிப்பிட்டார்.

கவிஞர் தர்மினி பேசுகையில், 'எதிர்காலத்தை மனதிலிருத்தி நூலாசிரியர் பல விடயங்களை 'அழியாத தடங்கள்' கட்டுரைத் தொகுப்பில் பதிவுசெய்து ஓர் ஆவணத் தொகுப்பாகத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. அவரது பல்வேறு துறைகளிலான அறிவையும் அனுபவத்தையும் அவரது நூல்களின் மூலம் அறிய முடிகிறது' என்றார்.

'தமிழர் மருத்துவம் பேணிக் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் இளங்கோவன் பெருவிருப்பம் கொண்டவர்;. இலங்கையிலிருந்து ஐக்கிய நாடுகள் தொண்டர் நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மூலிகை மருத்துவ - சமூக அபிவிருத்திப் பணியாற்றி விருதுகள் பல பெற்றவர் இளங்கோவன். இலங்கையில் யுத்த அனர்த்தம் ஆரம்பமாகியவேளையில் மக்கள் நலன்கருதி 'மூலிகை' சஞ்சிகை மூலம் விழிப்பூட்டியவர். அவரது தமிழர் மருத்துவம்; குறித்த ஆலோசனைகள் - கட்டுரைகள் அனைவரினதும் சிந்தனைக்குரியன' எனக் குறிப்பிட்டார் திருமதி வாணி தியாகராசா.

'அரசியல், கலை இலக்கிய, தமிழர் மருத்துவத் துறைகளில் நீண்ட கால அநுபவம் வாய்ந்த இளங்கோவன் தமது அனுபவங்கள் யாவற்றையும் பதிவுசெய்து ஆவணப்படுத்துவது புலம்பெயர்ந்த எம்மவரின் எதிர்காலச் சந்ததியினருக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்' என வேண்டுகோள் விடுத்தார் இன்று உலகமெங்கும் ஒலிபரப்பாகும் 'தமிழமுதம்' வானொலியின் இயக்குனர் எஸ். கே. ராஜென்.

கலாநிதி க. தேவமனோகரன், ஊடகவியலாளர் என். கே. துரைசிங்கம், சு. கருணாநிதி, வண்ணை தெய்வம், க. அரியரத்தினம், ஊடகவியலாளர் கோவை நந்தன், குமாரதாஸ் நேசன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் ஏற்புரை வழங்கினார்.

பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்ட ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் நகரில் வாழும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட படைப்பாளிகள் - இலக்கிய அபிமானிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

- தொகுப்பு: ஓவியா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com