Contact us at: sooddram@gmail.com

 

13ஆவது திருத்தம்

இரு திருத்த யோசனைகள் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இரு யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. இதன் நகல் பிரதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக கூறிய அவர், வடமாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன் போது 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் முன்னெடுக்க உள்ள திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசாங்கம் அமைச்சரவைக்கு முன்வைத்த இரு திருத்தங்களின் படி இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கப்படுவதோடு தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்பிக்க முன்னர் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை திருத்தி பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட்டால் சட்டமூலத்தை நிறைவேற்றலாமென மாற்றம் செய்யப்படுகிறது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்று கூறிய அமைச்சர் அவற்றை அகற்றுவது தொடர்பில் கூட்டுக்கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுவதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கட்சிகளின் யோசனைகள் குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு 13 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர், வடமாகாண தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். திட்டமிட்டபடி செப்டெம்பரில் வடக்குத் தேர்தல் நடத்தப்படும். சில வேளை வடக்கு தேர்தலுடன் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, சகல கட்சிகளதும் கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே 13 ஆவது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த திருத்தங்கள் குறித்து மாகாண சபைகளினதும் அபிப்பிராயம் பெறப்படும்.

ஐக்கிய இலங்கையிலுள்ள 8 மாகாண சபைகள் இணைந்தால் அது தனி நாடாகி விடும். ஐக்கிய நாடொன்றினுள் மாகாண சபைகள் இணைய வேண்டிய தேவை கிடையாது. அதனாலே குறித்த பிரிவை நீக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தேசிய கொள்கையொன்று தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் மாகாண சபைகளின் பெரும்பான்மை அனுமதி இருந்தால் போதும் என யாப்பில் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் சட்ட மூலத்தை நிறைவேற்றலாம். மாகாண சபைகளின் பெரும்பான்மை அனுமதி கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரு திருத்தங்கள் குறித்த கூட்டுக் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. அவை குறித்து ஆராய்ந்து பின்னர் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கம் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. இதில் பங்கேற்குமாறு இந்தியா உட்பட பல தரப்பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், ஒரு வருடத்திற்கு மேல் சென்று தெரிவுக்குழுவினால் செயற்பட முடியவில்லை.

த.தே.கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராத நிலையிலே அரசாங்கம் இந்த திருத்தங்களை முன்வைத்துள்ளது. த.தே.கூ. வரவில்லையென அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. தெரிவுக்குழுவில் எட்டப்படும் எத்தகைய முடிவையும் ஏற்கத் தயார் என ஜனாதிபதி ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். தேவை ஏற்படும் பட்சத்தில் மேற்படி இரு திருத்தங்களுக்கு மேலதிகமாக மேலும் திருத்தங்கள் செய்யப்படும். 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பில் திருத்தம் முன்வைக்கப் பட்டுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு 13 ஆவது திருத்தத்தில் திருத்தம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. ஒரு வருட காலத்துக்கு மேல் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துகள் கூறப்பட்டு வந்தன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com