Contact us at: sooddram@gmail.com

 

தென் மேல் மாகாணங்களில் சீரற்ற காலநிலை

கடும் காற்று, கடல் கொந்தளிப்புமீனவர்கள் பலரைக் காணவில்லை

தெற்கு மற்றும் மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததுடன், 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 30 வள்ளங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்கும் பணிகளில் விமானப் படையினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள் ளிட்ட கரையோர பிரதேசங்களில் கட லுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான கால நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு இராணு வத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்கச் சென்று கடும் காற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரின் மூன்று கப்பல்கள் சேவையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. ஜயசாகரா, நந்திமித்ர மற்றும் சயூர ஆகிய மூன்று கப்பல்களுமே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். ஜயசாகர, காலியிலிருந்தும், நந்தமித்ர மற்றும் சயூர ஆகிய கப்பல்கள் கொழும் பிலிருந்தும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பலப்பிட்டிய பிரதேசத்தில் 5 மீனவர்களும், கொழும்பில் 2 மீனவர்களும் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணப்படும் கொந்தளிப்புநிலை சற்றுக் குறைவடைந்ததும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினருக்குச் சொந்தமான பல சிறிய படகுகள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங் களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடல்கொத்தளிப்பு தொடர்ந்தும் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக விமானப் படையினரின் ‘பெல் 412’ ஹெலிக்கொப்டரும், ‘வை1’ விமானமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

5ற்கும் மேற்பட்ட மீனவர்கள் விமானப் படையினரின் பெல் 412 ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க கடும் காற்றுக் காரணமாக வீதிகளின் குறுக்கே முறிந்து வீழ்ந்திருக்கும் மரங்களை வெட்டி அகற்றி, வீதிகள் ஊடான போக்குவரத்துக் களைச் சீர்படுத்துவதற்கும், காற்றின் காரணமாக வீட்டுக் கூரைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குமாக பெரும் எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்தார்.

பலப்பிட்டி பிரதேசத்தில் 5 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியதுடன், 15 முதல் 20 வரையான படகுகள் காணாமல் போயுள்ளன. நீரில் மூழ்கிய மூன்று மீனவர்களின் சடலங்கள் பேருவளைப் பகுதியில் கரையொதுங்கியதுடன், 5 மீனவர்கள் பலப்பிட்டியவில் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர். 12 மீனவர் கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தெஹிவளை பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவப் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி தெஹிவளைப் பிரதேச மீனவர்கள் நேற்றுக் காலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே மீன்பிடிப் படகை நிறுத்தி ரயிலை மறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து கடற்படையினர் அப்பகுதி மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தெய்வேந்திரமுனை பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற 8 படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மோசமான காலநிலை யால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன்பிடிப் படகுகளில் பொருத்தப்பட்டி ருக்கும் ஜீ.எஸ்.பி கருவிகளின் அலைகளை அறிந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

காலநிலை சீரடையும்வரை தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென எச்சரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்றுமுன்தினம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் மீனவர்கள் அதனைப் பொருட்படுத்தாது கடலுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான காற்றுக் காரணமாக தென்பகுதி கரையோர ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கரையோரத்தில் சேவையில் ஈடுபட்ட அனைத்து ரயில் சேவைகளும் காலதாமதமானதுடன், தண்டவாளங்களில் மரங்கள் முறிந்திருந்ததால் போக்குவரத்தில் இடஞ்சல் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது. எனினும், உடனடியாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீரடைந்ததாகவும் தெரிவித்தனர்.

கடுமையான காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து வீதிகளூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் மின்சார விநியோகங்களும் தடைப்பட்டன. தடைப்பட்ட மின்விநியோகத்தை வழங்குவதற்கு மின்சாரசபை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com