Contact us at: sooddram@gmail.com

 

13ஆவது திருத்தம்

நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட்ட மாற்றம் மக்களின் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டதல்ல

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறையில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான மாற்றம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்டதல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய லலித் வீரதுங்க, நாட்டு மக்களின் விருப்பமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ இன்றியே அரசியல மைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறைமை முழுமையாக மாற்றப்பட்டது எனவும் தெரிவித்தார். அன்று மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை நிறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகர் அப்போதிருந்த இலங்கை ஜனாதிபதியைக் கோரியிருந்தார் என குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க: நாட்டை ஆக்கிரமிப்பதா? அல்லது 13 வது திருத்தத்தை நடை முறைப்படுத்துவதா என்ற வகையில் அந்த அழுத்தம் அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

மாகாண சபைகள் மூலம் எந்தளவு சேவைகள் கிடைக்கக்கூடியதாகவுள்ளன என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களுடையதே என குறிப்பிட்ட அவர், அன்று சிலர் வசம் இருந்த இரகசியங்கள் இன்று வெளிப்பட்டு வருகின்றன என வும் தெரிவித்தார்.

அப்போது தாம் உதவி அரசாங்க அதிபராக பதவி வகித்த போது மக்களுக்கு காணித் துண்டொன்றை வழங்குவதற்கு தமக்கு அதிகாரம் இருந்ததாயினும் மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலாளரிடம் காணிகளுக்கான உரிமைகள் இருந்ததனால் ஒரு காணித்துண்டை ஒருவருக்கு வழங்குவதற்கு 20 - 30 இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணிச்சீர்திருத்த ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தரன்பிமகாணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சில அரச அலுவலகங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டுவதில்லை. இத்தகைய அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் கூறுவதுண்டு. அவர் சிறந்ததொரு தலைவர். எனினும் அரச அதிகாரிகள் என்ற வகையில் எமக்கு தீர்மானமெடுக்கப் பயம் உள்ளது. எனினும் மக்களுக்கு சேவை செய்யாத நிறுவனங்கள் பிரயோசன மற்றவை என ஜனாதிபதி கூறுகின்றார்.

பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகத்துடன் நான் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம்நாம் இருவரும்மேல் மாகாண சபை பிரதேசத்திலேயே வாழ்கிறோம். எனினும் மாகாண சபை மூலம் எமக்கு என்ன சேவை கிடைத்துள்ளதுஎன அவர் வினவினார். அப்போது தான் நானும் சிந்தித்து பார்த்தேன்.

இந்த மாகாண சபை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் இங்கு வாழ முடியும் தானே என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி யுள்ளார். காணியற்றவர்களுக்கு காணி வழங்குவதாக கூறிய வாக்குறுதி மட்டுமன்றி அனைத்து வாக்குறுதிகளையும் முறையாக நிறைவேற்றியுள்ளார். எதிர்காலமில்லாத நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இப்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் உள்ளது. இந்நிலை தொடர ஜனாதிபதியின் கரங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் சகல தடைகளையும் வெற்றிகொள்ள நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com